<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786</id><updated>2012-03-15T05:05:02.024-07:00</updated><title type='text'>வி</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>38</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-5323772040490630271</id><published>2012-02-28T22:10:00.001-08:00</published><updated>2012-03-13T03:17:23.360-07:00</updated><title type='text'>அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 இல் தேசிய, மாகாண சாகித்திய விருதுகளைப் பெற்ற இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். அதனைத் தொடந்து தனது இரண்டாவது நூலை 103 பக்கங்களில் வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-gQuJuOrC190/T18elW_YKuI/AAAAAAAAAS0/BvHK9HHupug/s1600/Musrifa%2B2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 172px; height: 245px;" src="http://3.bp.blogspot.com/-gQuJuOrC190/T18elW_YKuI/AAAAAAAAAS0/BvHK9HHupug/s320/Musrifa%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5719323678959217378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் என்ற கவிதை க.பொ.த சாதாரணதர தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது இவரது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவாவுறும் நிலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் துயர் சுமந்த பாடல்களையும், வாழ்வியல் குறித்த விடயங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன. புதுப்புது வீச்சான சொற்கள் கவிதையை வாசிக்கும் ஆவலைத் தூண்டி நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கவிதையான நரம்பு சுண்டிய யாழ் எனும் கவிதை கையேந்தித் திரியும் ஓர் பிச்சைக்காரன் பற்றியது. பிச்சைக்காரர்களைக் கண்டால் காணாதது போல் தலை திருப்பிச் செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. எல்லோரிடமும் தனது பசியைக் கூறி கை நீட்டும் பழக்கம் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. எனினும் ஓரிருவரைத் தவிர யாரும் அவனை மனிதனாகப் பார்ப்பதில்லை என்பதே கண்கூடு. &lt;br /&gt;&lt;br /&gt;பசியை இசையாய் நீ இறக்கிய&lt;br /&gt;வெய்யிற் பொழுதில்&lt;br /&gt;அத்தனைச் சோடிக் காதுகளாலும்&lt;br /&gt;முழுச் செவிடாய்&lt;br /&gt;உன்னைக் கடக்கும்&lt;br /&gt;பெரும் வீதி   &lt;br /&gt;&lt;br /&gt;தன் மகனைக் கடத்திச் சென்ற சோகம் தாளாமல் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட ஒரு தாய்க்கான பாடலாக ஹயாத்தும்மா என்ற கவிதை இருக்கிறது. கீழுள்ள வரிகள் மூலமாக அந்தத் தாயின் துயர் நிரம்பிய இதயத்தை தரிசிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீ நெய்த கனவுகள்&lt;br /&gt;நெய்தல் அலைகளில் கரைந்து அழிகையில்&lt;br /&gt;உன்னால் எய்த முடிந்தது&lt;br /&gt;மரணம் மட்டுமாயிற்று   &lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் தனக்குக் கிடைத்தவற்றையிட்டு ஒருபோதும் திருப்தியுறுவதில்லை. எதைப் பெற்றாலும் அதைவிட சிறந்ததைப் பெறுவதற்கே மனம் அலைவதுண்டு. அதை கருத்தாகக்கொண்டு முரண் வாழ்வு என்ற கவிதை பிறந்திருக்கிறது. அழகிய உவமானமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கவிதை, மனித நிலை பற்றி விளக்குவதாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;குளத்து மீனுக்கு&lt;br /&gt;தூண்டிலும் வலையுமான&lt;br /&gt;அடக்கு முறைக்குள் சிக்காது&lt;br /&gt;கண்ணாடிப் பளிங்குத் தொட்டியில்&lt;br /&gt;வாழும் விருப்பம்&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டி மீனுக்கோ&lt;br /&gt;இன்னது இன்னதென்று எழுதிய&lt;br /&gt;செயற்கை இருப்பின்&lt;br /&gt;சொகுசுச் சிறைக்குள்ளிருந்து விடுபட்டு&lt;br /&gt;குளத்தில் நீந்தவே ஆசை    &lt;br /&gt;&lt;br /&gt;என் வீட்டு மழை என்ற கவிதை ரசிக்கத்தக்கதாகும். மழைக் காலத்தில் நனையாமல் இருந்த எமது சிறுவயதுப் பொழுதுகள் அபூர்வமாகத்தான் இருக்க முடியும். அந்த அழகிய நாட்களை மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதாக இக்கவிதை அமைந்திருக்கிறது. கவிதையின் கடைசி வரிகள் யதார்த்த வாழ்வை சுட்டிக்காட்டுவதாயும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய வீட்டுக் கொப்பி&lt;br /&gt;விதவிதமாய் கப்பலாகும்&lt;br /&gt;என் கப்பல்கள் கரையேறுவதெப்படி&lt;br /&gt;நான்கு குமர்களோடு உம்மா இருப்பாள்  &lt;br /&gt;&lt;br /&gt;முல்லை முஸ்ரிபா அவர்கள் ஆசிரியராக இருப்பதினால் மாணவர்களின் சுமைகள் பற்றி உளப்பூர்வமாக உணர்ந்து வைத்திருக்கின்றார். பிள்ளைகளை படி என்று சொல்கின்றோம். ஆனால் அவர்களுக்கு பொருத்தமான துறையில் படிப்பதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. வைத்தியர், பொறியிலாளர் என்ற வரையறைக்குள் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வலுக்காட்டாயமாக திணிக்கப்படுகிறது. விளைவு, சிலர் ஜெயிக்கிறார்கள். மற்றவர்கள்? கல் தெப்பம் என்ற கவிதையில் ஒரு மாணவனின் மேற்சொன்ன துயரங்கள் கீழுள்ள வரிகளாக...&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தை தோண்டியெடுத்துவிட்டு&lt;br /&gt;அதனிடத்தில்&lt;br /&gt;ஏதோவொன்றைத் திணிக்கிறீர்கள்&lt;br /&gt;எனதான இலக்குகளை வரையவும்&lt;br /&gt;இலக்கு நோக்கி பறக்கவும் முடியாதபடி&lt;br /&gt;இறக்கைகளைப் பறிக்கிறீர்கள்  &lt;br /&gt;&lt;br /&gt;எத்தனைப் பிரச்சினைகள் மனதை வாட்டிய போதிலும் மழலையின் மொழி கேட்டால் அவை தூரமாகிவிடும். பெண் என்பவள் போற்றப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக தாய்மையும் குறிப்பிடப்படுவது இதனால்தான். பெற்றோர்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு பிள்ளைகள் என்கிறோம். அத்தகைய குழந்தைச் செல்வங்களைப் பற்றியதாக நிலவு துளிர்த்து அமாவாசை கருகி என்ற கவிதை காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;செல்லமே நீ காலுதைக்கவும்&lt;br /&gt;மென்பூச் சிரிப்புதிர்க்கவுமான&lt;br /&gt;வினாடிகளில் மனசு மீளவும்&lt;br /&gt;எல்லையில்லாப் பெருவெளியாய்&lt;br /&gt;விரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;உள் முகங்கள் என்ற கவிதை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் நிதர்சனத்தை சொல்லி நிற்கின்றதை அவதானிக்கலாம். மாலை அயர்வில் தேனீர் சுவையாக இருக்கின்றது. சோர்வும் பறக்கின்றது. எனினும் தேயிலைத் தோட்டத்தில் உச்சி வெயில் கொடுமையில் பறிக்கப்பட்ட தேயிலையின் வாசம் தொண்டை வழியால் உள்ளிறங்குகிறது. மீண்டும் முகத்தில் அயர்வின் சாயல் படர்கின்றது என்கிறார் நூலாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாறாய்ப் பிழிந்த&lt;br /&gt;உழைப்பின் சக்கை&lt;br /&gt;துயராய்க் கசிகிறது&lt;br /&gt;என் கோப்பைக்குள் இறங்குகிறது&lt;br /&gt;வாழ்தலின் யதார்த்தம்&lt;br /&gt;&lt;br /&gt;வவுனியா அகதி முகாமில் வசிக்கும் மக்களுக்காக எழுதப்பட்ட கவிதை இருள்வெளியும் நாளைய சூரியனும். யுத்தம் விட்டுப்போன எச்சங்களாக வாழ்ந்துகொண்டே மரணத்தை அனுபவிக்கும் அந்த மக்களுக்காக தனது துயரை பதிவு செய்திருக்கிறார் முல்லை முஸ்ரிபா அவர்கள். இருளிடம் கையேந்திப் பயனில்லை. சூரியனும் கருகிற்று. காற்றும் அசுத்தமாகிக் கிடக்கின்றது என்றவாறு புறச் சூழலை விபரித்து, இந்த வரிகளின் வழியே அங்குள்ள மக்களின் துயரை துல்லியமாகக் கூறுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;படர்வுறும் முட்கம்பிச் செடி&lt;br /&gt;கிளைப்பதில்லை துளிர்ப்பதில்லை&lt;br /&gt;காய்ப்பதில்லை கனிவதுமில்லையெனின்&lt;br /&gt;குயிலாய்க் கூவித் தோப்பாகும்&lt;br /&gt;கனவுகளுமற்றுப் போக&lt;br /&gt;குரல் கிழிந்து தொங்குகிறது&lt;br /&gt;முட்கம்பி வேலிகளில்&lt;br /&gt;&lt;br /&gt;எனது தமிழ்ப்பாட ஆசானாக விளங்கிய இக்கவிஞரின் தொகுதிக்கு எனது குறிப்பை எழுதுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எனது இலக்கியத்தேடல் பற்றி சொன்னபோது, அந்த ஆவலை தன் எழுத்துக்கள் மூலமும், உற்சாக வழிகாட்டுதல் மூலமும் எனக்குத் தந்த நூலாசிரியர் முல்லை முஸ்ரிபா அவர்களுக்கு இதனூடாக நன்றி நவில்தலை மேற்கொள்வது எனது கடமையாகிறது. நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - அவாவுறும் நிலம் (கவிதைகள்)&lt;br /&gt;நூலாசிரியர் - முல்லை முஸ்ரிபா&lt;br /&gt;வெளியீடு - வெள்ளாப்பு வெளி&lt;br /&gt;விலை - 200 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-5323772040490630271?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/5323772040490630271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post_1637.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/5323772040490630271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/5323772040490630271'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post_1637.html' title='அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-gQuJuOrC190/T18elW_YKuI/AAAAAAAAAS0/BvHK9HHupug/s72-c/Musrifa%2B2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-6604915159045372414</id><published>2012-02-28T22:09:00.002-08:00</published><updated>2012-03-13T03:18:19.181-07:00</updated><title type='text'>தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமதி சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற கவிதைத்தொகுதி இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக 93 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்ற வரலாற்று நாயகனின் இளைய புதல்வியான சுமதி அவர்கள் தனது கவிதைகளுக்கூடாக சமூகம் பற்றி இருப்பு நிலையை வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-8SxL8YiYCUM/T18e1g-IXgI/AAAAAAAAATA/VlRWV3py8wo/s1600/Sumathi%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 175px; height: 274px;" src="http://4.bp.blogspot.com/-8SxL8YiYCUM/T18e1g-IXgI/AAAAAAAAATA/VlRWV3py8wo/s320/Sumathi%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5719323956516249090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சகலவிதமான ஒடுக்கு முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக குரல்கொடுத்து மக்களை சரியான திசையில் வழிநடாத்தக்கூடிய இலங்கையின் முற்போக்குக் கவிஞர்களின் வரிசையில் திருமதி. சுமதி அவர்களும் ஒருவராக இணைந்துள்ளார் என்று பதிப்புரையில் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தனதுரையில் சாதாரண பேச்சிலிருந்து இவரது கவிதைகள் புனித நெறியைக் காட்டுகின்றன. சிறப்பான எடுத்துக்காட்டாக இதனைச் சொல்லாம். நெருக்கடியான நேரங்களிலும், சோதனை தரும் வேளைகளிலும் இவரது கவிதைகள் நுட்பங்கள் நிறைந்து வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமதி சுமதி அவர்கள் ஓர் ஆசிரியையாக கடமையாற்றியதால் மாணவர்களோடு ஒன்றுபட்டு அவர்களது அகநிலை சார்ந்த பிரச்சனைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் எவ்வாறான முறையில் உதவலாம் என்று நன்கறிந்திருப்பவர். ஆதலால் தளிர்களின் சுமைகள் என்று மாணவர்களுக்காக எழுதப்பட்ட கவிதையின் தலைப்பையே புத்தகத்தினதும் மகுட தலைப்பாக்கியிருக்கிறார். அதுபோல நாட்டில் நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காகவும் குரல்கொடுக்கின்றார் நூலாசரிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவம் என்ற கவிதையில்&lt;br /&gt;&lt;br /&gt;ஏணிப்படிகள் என &lt;br /&gt;எண்ணிக் கால்வைக்க&lt;br /&gt;உக்கி உருக்குலைந்து&lt;br /&gt;சிதிலங்களாய்ப் போனதில்&lt;br /&gt;இன்னும் இருண்டு கிடக்கின்றேன்&lt;br /&gt;பள்ளிச் சிறைக்குள்   (பக்கம் 21)&lt;br /&gt;&lt;br /&gt;என்ற கவிதையானது குறிப்பிட்டதொரு விடயத்தை அடைய நினைத்து அதில் ஏமாற்றமடைந்தவர்களின் நிலையை சித்தரிக்கிறது எனலாம். வாழ்க்கையில் எல்லோரும் எத்தனையோ இலட்சியங்களைக் கொண்டிருக்கிறோம். அவற்றில் எல்லாமே ஈடேறுவதில்லை. அத்தகையதொரு மனத்தாக்கதின் வெளிப்பாடாக ஒரு மாணவனின் பார்வையினூடாக இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்பது பள்ளிக் காலத்திலும் வரலாம். பருவக்காலத்திலும் ஏற்படலாம். ஆனால் பள்ளிக்காலத்தில் வரும் காதல் வெறும் இனக்கவர்ச்சியாக மாத்திரமே இருக்க முடியும். பக்குவப்படாத மனதில் காதல் விதைகளை விதைக்கும் நவீன தொழில்நுட்பங்கள் இன்று வந்தாகிவிட்டன. ஆனால் அனைவரும் பேதமின்றி அவற்றைப் பாவிக்கின்றனர். இத்தகைய வழிமுறைகளினால் மாணவர்கள் சின்னாபின்னமாக்கப்படுகின்றார்கள் என்பது மெய்யான விடயம். அவர்களிடம் காதல் தப்பு என்று சொல்லலாம். எனினும். அத்தகைய சூழலை பிள்ளைகளுககு ஏற்படுத்திக் கொடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்று பெற்றோர்களுக்குச் சொல்வது யார்? அவ்வாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுமானால் மாணவச் சமூகத்தை சிறந்த எதிர்காலத்தின் பிரதிநிதிகளாக மாற்ற வழிவகைகள் ஏற்படும். இது பாதுகாப்பு என்ற இந்தக் கவிதையில் இவ்வாறு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பருவ வயதில் காதல் பாழ்&lt;br /&gt;பெற்றோர்களும் பாதுகாவலர்களும்&lt;br /&gt;சொல்கிறார்கள் தம்&lt;br /&gt;அறிவு முதிராத குழந்தைகளிடம்&lt;br /&gt;இவர்களிடம் சொல்பவர் யார்&lt;br /&gt;ஆதலினால் அவர்களை&lt;br /&gt;அச்சூழலினின்று&lt;br /&gt;பாதுகாருங்கள் என்று    (பக்கம் 34)&lt;br /&gt;&lt;br /&gt;சமத்துவம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தானது. அதை யாராலும் மறுக்க முடியாது. அவ்வாறானதொரு சமத்துவம் வீட்டில் நிலவாதவிடத்து குடும்பங்களுக்குள் சச்சரவுகள் தலை நீட்டிப் பார்க்கின்றன. வெளியிடங்களில் பிரச்சனை என்றால் வீட்டுக்குள் போய் ஒதுங்கியிருக்கலாம். வீட்டிலேயே பிரச்சினை என்றால் யாரிடம் சொல்லியழுவது? ஆட்சி என்ற கவிதை இவ்வாறு&lt;br /&gt;&lt;br /&gt;பிழையான ஆட்சி&lt;br /&gt;நாட்டிலே நடந்தால்&lt;br /&gt;வீட்டிற்குள்ளே&lt;br /&gt;பூட்டிக்கிடக்கலாம்&lt;br /&gt;அதுவே வீட்டிலும் என்றால்?   (பக்கம் 35)&lt;br /&gt;&lt;br /&gt;தளிர்களின் சுமைகள் என்ற கவிதை மாணவர்களின் பிரச்சினையாக உருவகித்திருக்கின்றது. பள்ளி செல்கையில் புத்தகச்சுமை. வகுப்பில் பாடங்களின் சுமை. வீட்டுப்பாடங்களை செய்யாதவிடத்தோ அல்லது ஏதாவது நிகழ்வில் தண்டனைச் சுமை. பிறகு மாலை வகுப்புச் சுமைகள் இப்படியே கழிந்து வீட்டிற்கு வந்தவுடன்&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வந்து சேர்கையிலே&lt;br /&gt;பெற்றோர் தம் எதிர்பார்ப்பு (கள்)&lt;br /&gt;அத்தனையும் பெருஞ்சுமையாய்&lt;br /&gt;மீண்டும் நாளை காலை&lt;br /&gt;பள்ளி செல்கையில்....   (பக்கம் 37)&lt;br /&gt;&lt;br /&gt;என்றவாறு கவிதை முடிகிறது. இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக இளங்குருத்துக்கள் படும்பாடு நன்கறிந்ததே. காலையில் சாப்பிட்டும், சாப்பிடாமலும் பாடசாலைக்கு ஓடுகின்றார்கள். பாடசாலை முடிந்து அரக்கப்பறக்க சாப்பிட்டுவிட்டு மாலை வகுப்பு. மாலையில் வீடு வந்து எட்டு மணி வரை இன்னொரு வகுப்பு என்றே அவர்களது காலம் கழிகிறது. பிரச்சினை என்னவென்றால் அவ்வாறு கஷ்டப்பட்டு படித்து பரீட்சையில் தற்செயலாக சித்தியடையாவிட்டால் அவர்கள் உள்ளத்தால் அழுகின்ற வலி வார்த்தைகளில் உள்ளடக்க முடியாது. இந்தளவுக்கு மாணவர்கள் சுமைகளைத் தாங்குகின்றார்கள். அத்தகைய சுமைகளைத்தான் நூலாசிரியர் தனது கவிதையில் மிகச் சுருக்கமாகவும், ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததாகவும் தந்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு பிரம்படி கொடுக்கப்படுவதுடன் முழங்காலில் உட்கார வைத்தல் என்ற தண்டனையும் இடம்பெறுவதுண்டு. அவ்வாறான தண்டனைகள் எவ்வாறிருக்கும் என்பது அனுபவப்பட்ட மாணவ உள்ளங்களிடம் விசாரித்தால் அறியலாம். முழங்காலில் நிற்க வைத்தல் என்ற தண்டனை குறைவானது என்ற எண்ணத்தை ஆசிரியத்தோழி மாற்றினார் என்று தண்டனை என்ற கவிதையில் கூறப்பட்டிருக்கிறது. ஏன் அவ்வாறு மாற்றினார் என்ற கேள்விக்கு கவிதையிலேயே இவ்வாறு பதிலிருக்கின்றதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளின்&lt;br /&gt;உழைப்புக்காய்&lt;br /&gt;இருக்கும் ஒரே&lt;br /&gt;மூலதனம் உடல்தான்&lt;br /&gt;அதை நாம்&lt;br /&gt;நாசம் பண்ணாமல்&lt;br /&gt;அப்படியே விட்டுவிடுவோம்    (பக்கம் 41 - 42)&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்களின் வளர்ப்பு சரியாக இருந்தால் பிள்ளைகள் சரியாகத்தான் வளருவார்கள். பெற்றோர்களின் கண்காணிப்பும், கண்டிப்பும் இல்லாதவிடத்து பிள்ளைகள் தான்தோன்றித்தனமாக வளர்ந்து இறுதியில் பெற்ற தாய் தந்தையரைக்கூட மதிக்கமாட்டார்கள். அதை வளர்ப்பு என்ற கவிதை நிதர்சனமாக்கி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிஞ்சுகள் ஆவதும்&lt;br /&gt;நம்மாலே&lt;br /&gt;அவை நஞ்சுகள்&lt;br /&gt;ஆவதும் நம்மாலோ   (பக்கம் 64)&lt;br /&gt;&lt;br /&gt;நூலாசிரியர் சமூகப்பான்மையோடு எழுதியிருக்கும் இந்தக் கவிதைகள் அற்புதமானவை. அனைவரும் வாசிக்க வேண்டியவை. திருமதி. சுமதி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - தளிர்களின் சுமைகள் (கவிதைகள்)&lt;br /&gt;நூலாசரியர் - திருமதி. சுமதி குகதாசன்&lt;br /&gt;வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்&lt;br /&gt;விலை - 350 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-6604915159045372414?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/6604915159045372414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post_7583.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/6604915159045372414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/6604915159045372414'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post_7583.html' title='தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-8SxL8YiYCUM/T18e1g-IXgI/AAAAAAAAATA/VlRWV3py8wo/s72-c/Sumathi%2B1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-4081402111145512891</id><published>2012-02-28T22:08:00.002-08:00</published><updated>2012-03-13T03:19:29.645-07:00</updated><title type='text'>யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-8GnP35LppKM/T18fCScvv3I/AAAAAAAAATM/LlklbokUYMc/s1600/TS.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-8GnP35LppKM/T18fCScvv3I/AAAAAAAAATM/LlklbokUYMc/s320/TS.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5719324175956426610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனது படைப்புக்கள் எல்லா மட்டத்தில் உள்ளோரையும் சென்றடைய வேண்டும் என்ற நன்நோக்கத்தில் இலகுவான மொழிநடையைப் பிரயோகித்திருக்கிறார். உலகம் இன்று மிகவும் பயங்கரமானதாக மாறியிருக்கிறது. நல்லவர் யார், கெட்டவர் யார் என்று அறிய முடியாதளவுக்கு மனிதர்கள் முகமூடியை அணிந்து எம்மத்தயில் உலா வருகின்றனர். இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் மூலம் திரு. தம்புசிவா அவர்கள் அத்தகைய மனிதர்களின் மூகமூடிகளைக் கிழித்தெறிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வியலின் யதார்த்தமான நிலைப்பாடுகளை இத்தொகுதியிலுள்ள கதைகள் எடுத்தியம்புகின்றன. வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், ஆணாதிக்கத்தினரின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் குடும்ப சீரழிவுகள், முறைகேடான தொடர்புகளால் ஏற்படும் சமூக நோய்கள் என்பவற்றுடன் காதலை சொல்லும் சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் வேதனைகளால் என்ற சிறுகதையானது வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை சொல்கின்றது. ஏமாற்றப்பட்ட வேதனைகளில் துடிக்கும் மூவினத்தையும் சேர்ந்த அபலைப் பெண்கள் ஆழுதுகொண்டிருக்கின்றனர். அப்போது அந்தக் கூட்டத்தில் இருக்கும் கமலா என்ற பெண்ணை ஒருவன் அடையாளம் காண்கிறான். அவன் கமலாவின் முன்னைய காதலன் முகுந்தன். அவன் அவளை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். முகுந்தன் தற்பேர்து ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வளித்திருப்பதாக அறிகிறாள் கமலா. 1990ல் நேவிக்காரர்கள் தமிழர்களுக்கெதிராக நடாத்திய யுத்தத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, கணவனின் குடிகார புத்தியினால் அவன் இன்னொருத்தியுடன் சென்றுவிட தனிமரமாக இருக்கின்றாள் கமலா.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சந்தர்ப்பத்தில் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி வெளிநாட்டுக்கு பயணமானவள்தான் கமலா. எனினும் ஏஜன்சியில் தங்க வைத்து அங்கு வரும் வியாபாரியினால் அவள் பெண்மையை இழக்கிறாள். வெளிநாடு சென்றாலும் அந்த வீட்டு எஜமானும் அவளை பலாத்காரம் பண்ணுகிறான். வீட்டு எஜமானியோ வேலை வாங்குவதில் வல்லவள். சம்பளத்தைக் கொடுக்காமல் நித்தமும் சித்திரவதை செய்வாள். ஒருவாறு இலங்கைத் தூதுவராலயத்தில் தஞ்சமடைகிறாள். சில தினங்கள் கழிந்து தற்போது முகுந்தனுடன் அவனது வீட்டுக்கு பயணமாகிறாள். அங்கு முகுந்தனின் மனைவி இவள்தான் கமலா என்று அறியாதபோதும் அன்பாக அவளை வரவேற்று உபசரித்த பின் முகுந்தனைப் பற்றி இவ்வாறு சொல்கிறாள். 'எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. இவர், தான் விரும்பிய கமலா என்ற பெண் கிடைக்கவில்லை என்ற வேதனையில் தனக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்'. இந்த வார்த்தைகள் அவன் கமலா மீதுகொண்ட புனித காதலை சித்தரிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று சொத்து சுகங்களுக்காக பெற்றவர்களையும், சகோதரர்களையும் பகைத்து அடிதடிகளில் இறங்கி சீரழிந்த குடும்பங்கள் பல காணப்படுகின்றன. அதற்கான முக்கிய காரணம் பேராசை. முதுசம் என்ற இந்தக் கதையும் பேராசைப் பிடித்து அலையும் ஒரு தகப்பனைப் பற்றி இயம்பியுள்ளது. தனது சகோதரியை ஏமாற்றி அவளது காணியை சொந்தமாக்குகின்றார் முருகேசு. தனது இரு பெண் பிள்ளைகளையும் முதுசம் உள்ளவனுக்குத்தான் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருகின்றார். இப்படியிருக்க முருகேசுவின் மூத்த மகள் அவரது சகோதரியின் மகனான செல்வம் என்பவனை திருமணம் முடிக்கிறாள். இரண்டாவது மகளுக்கத்தானும் முதுசக்கார மாப்பிள்ளை கிடைக்கும் என்ற நினைப்பு முருகேசருக்கு. இறுதியில் இளையவளும் கராஜ் வைத்திருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகின்றாள். முதுசத்தினால் பிள்ளைகளை இழந்து நிற்பவரின் கதைதான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ வைத்த தெய்வம் என்ற கதை தாயன்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. கற்பகம் என்ற அந்தத் தாய் சிறுவயது முதலே மிகவும் கஷ்டங்களை அனுபவித்தவள். அவளது சிற்றன்னை ஆரம்பத்தில் கற்பகத்துடன் அன்பாக இருந்தாலும் அவளுக்கென்று பிள்ளைகள் பிறந்த பிறகு வேறுபாட்டை காட்டத் துவங்கினாள். அந்த துன்பங்களை சகிக்க முடியாமல் கற்பகத்தின் தாய்மாமன் அவளை அழைத்துவந்து தனது வீட்டில் இருக்க வைத்தார். அதை அவரது மனைவி விரும்பாததால் கற்பகம் அன்பு இலத்தில் சேர்க்கப்பட்டாள். அவள் வளர்ந்து பெரியவளானதும் கணேசு என்பவன் அவளை திருமணம் முடித்தான். அந்த குடிகார கணவனுடன் மிகவும் வறுiமைப்பாட்டுக்குள் தன் ஜீவிதத்தை கடத்தினாள் கற்பகம். அவரும் இறந்து போக, கஷ்டப்பட்டு உழைத்து தனது மகன் அற்புதனை படிப்பித்து பட்டதாரியாக்கிவிட்டாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதனின் மனைவி சுமதி. அவளது சகோதரர்கள் வெளிநாட்டில் நல்ல வசதியுடன் இருப்பதால் தாங்களும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நச்சரிப்பை கொடுத்த வண்ணமிருக்கிறாள். மனமுடைந்துபோன அவன் அம்மாவான கற்பகத்தை தனியே விட்டுவிட்டு எவ்வாறு போவது என்று சிந்திக்கிறான். கற்பகத்துக்கும் தன் மகனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. ஆனாலும் மருமகளுடைய பிடிவாதத்தைக் கண்டு அவனை அவளுடன் போகும்படி சொல்கிறாள் தாய். அதனால் கோபப்பட்ட அற்புதன் தாயிடம் 'அம்மா அவள் விசரி. வெளிநாட்டு மோகத்தில் கத்துகிறாள். நீங்கள் பேசாமல் இருங்கோ. நான் உங்களை தனியவிட்டு ஒரு இடமும் போகமாட்டன். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதேங்கோ' என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் அம்மா வற்புறுத்தவே மனமில்லாமல் மனைவியுடன் புறப்பட ஆயத்தமகின்றான். புறப்பட வேண்டிய நாளும் வந்துவிட்டது. வாசலுக்கு வந்த அற்புதன் கண்ணீருடன் தாயைத் திரும்பிப் பார்க்கிறான். அவள் அங்கே விழுந்து கிடக்கிறாள். மூச்சடங்கி சொற்ப நேரமே ஆகியிருந்தது. தனது கஷ்டத்துக்காக மகனது வாழ்வு பாழ்பட்டு விடக்கூடாது என்று நினைத்தது அந்த தாயுள்ளம். ஆனாலும் அவனது பிரிவைத் தாங்க முடியாமல் அவள் இதயம் தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வகுத்த வியூகம் என்ற கதை துரோகத்தை மையப்படுத்தி எழுதுப்பட்டுள்ளது. பாலா என்பவன் தனது தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்து அறை தேடுகிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவராஜன் எனும் நண்பன் அவனது அறையில் பாலாவைத் தங்க வைக்கின்றான். வசதிகள் குறைந்த அந்த அறையில் தங்குகிறான் பாலா. சிறிது நாட்களுக்குப்பின் பல நிபந்தனைகளுடன் ஒரு வாடகை அறை கிடைக்கிறது. ஏற்கனவே காசு கட்டியிருப்பதால் ஒருமாதம் கழித்து புது அறைக்கு தானும் வருவதாக தேவராஜன் சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாவின் அறையிலிருந்து எதிர்புறமாக இருக்கும் வீட்டில் ஒரு அழகான யுவதி இருக்கிறாள். அவளை தினமும் பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும், தேவராஜன் வந்துவிட்டால் அவ்வாறு அந்தப் பெண்ணுடன் பழக முடியாது என்பதால் பாலா பொய் கூறி தேவராஜன் அந்த அறைக்கு வருவதைத் தடுக்கின்றான். அப்படியிருக்க வீட்டுக்காரர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் மூத்த மகள் பாலாவுடன் சகஜமாகப் பழகுகின்றாள். அவள் தனது காதலன் வருவதால் இந்த அறையை தமக்கு தருமாறு பாலாவிடம் கேட்க பாலாவும் அறையை கொடுத்துவிட்டு வெளியே காவல் இருக்கிறான். நாழிகை கழிந்து வீட்டுக்கார்கள் வருகிறார்கள். பயந்துபோன பாலா கதவைத் தட்டி அவர்களை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் கதவு தானாகவே திறந்து கிடக்க கட்டிலில் அருவருப்பான கோலத்துடன் அந்தப் பெண் (மூத்த மகள்) மாத்திரம் கிடக்கிறாள். அவளை எழுப்பச் சென்ற பாலாவை தனக்கு மேலால் இழுத்து விடுகிறாள் அவள். இதை அவளது பெற்றோர் பார்த்துவிட பீதியில் பாலாவுக்கு சர்வாங்கமும் ஒடுங்குகின்றது. உடனே பாலா எதிர்பாராத தருணத்தில் அவள் அபாண்டமாக கீழுள்ளவாறு பலியை சுமத்திவிடுகிறாள்;.&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா நான் மாட்டன் மாட்டன் என்று சொல்ல, இவர்தான் என்னை தூக்கிவந்து கட்டிலில் போட்டு இப்படிச் செய்து போட்டார்.'&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வீட்டு பெண்ணை சைட் அடிப்பதற்காக நண்பனை ஏமாற்றிய வியூகம் தன்னைப் பெரிய ஆபத்தில் மாட்டிவிட்டதை உணர்ந்த பாலா கனத்த மனதுடன் நண்பனை தேடிச் செல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சாயமிழந்து போன வாழ்க்கையையும், நிராதரவாக வாழும் பெண்கள் பற்றியும், குடிகார கணவன்மார் பற்றியும் அலசி ஆராய்ந்து நிதர்சனமாக விடயங்களை வெளிக்காட்டி நிற்கின்றன இந்தக் கதைகள். நூலாசிரியர் திரு. தம்பு சிவா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - முதுசம் (சிறுகதைகள்)&lt;br /&gt;நூலாசரியர் - திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா)&lt;br /&gt;வெளியீடு - சேமமடு பதிப்பகம்&lt;br /&gt;தொலைபேசி - 011 4902406, 0718 676482&lt;br /&gt;விலை - 280 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-4081402111145512891?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/4081402111145512891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post_1735.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/4081402111145512891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/4081402111145512891'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post_1735.html' title='யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-8GnP35LppKM/T18fCScvv3I/AAAAAAAAATM/LlklbokUYMc/s72-c/TS.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-1913691260711364304</id><published>2012-02-28T22:07:00.001-08:00</published><updated>2012-03-13T03:21:01.473-07:00</updated><title type='text'>சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சிறுவர்களுக்கான இலக்கியம் முன்னேற்றமாக வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் திருமதி. ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள் ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் கதைகளடங்கிய நூலை வெளியிட்டிருக்கின்றார். சிறுவர்கள் பலரின் முகத்தைத் தாங்கி புத்தகத்தின் அட்டை வெளிவந்திருக்கிறது. எக்மி பதிப்பகத்தின் வெளியீட்டில் 39 பக்கங்களை உள்ளடக்கி அமையப் பெற்றிருக்கும் இந்த நூல் வர்ண எழுத்துக்களில்;, கண்ணைக் கவரும் வர்ணச் சித்திரங்களுடன் அமைந்திருப்பதை சிறப்பம்சமாகக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-hd1Av2M0uW0/T18fWTANuXI/AAAAAAAAATY/DWAC3GPL_Ls/s1600/Jaree%2B04.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 191px; height: 272px;" src="http://4.bp.blogspot.com/-hd1Av2M0uW0/T18fWTANuXI/AAAAAAAAATY/DWAC3GPL_Ls/s320/Jaree%2B04.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5719324519702575474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அபலையின் டயறி, இது ஒரு ராட்சசியின் கதை, 37ம் நம்பர் வீடு ஆகிய தொகுதிகளுடன் ரோஜாக்கூட்டம் நூலையும் தந்திருக்கிறார் நூலாசிரியர் திருமதி ஜரீனா முஸ்தபா அவர்கள். இந்நூலானது கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளர் நாயகத்தினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் காணப்படும் சில தீய விடயங்களும், சூழலும் பிள்ளைகள் நல்லவற்றிலிருந்து விடுபட்டு தீய வழிகளில் செல்வதற்கு பெரும் துணை புரிகின்றன. பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் வழிகாட்டுதல்களில் பிள்ளைகள் இருந்தாலும் கூட தொலைக்காட்சி, கைத்தோலைபேசி, இன்டர்நெட் போன்றன வழிகேட்டிற்கு இழுத்துச் செல்கின்றமை கண்கூடான விடயங்களாகும். அத்தகையவற்றிலிருந்து பிள்ளைச் செல்வங்களை மீட்டிக்கொள்ள நல் அறிவுரைகளைப் பகிர்ந்து நிற்கும் நூல்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். அந்த வகையில் ரோஜாக்கூட்டம் என்ற நூலில் உள்ள சிறுவர் கதைகள் அழகிய அறிவுரைகளை அழகாக இயம்புகின்றன. உண்மையான நட்பு, அன்னையின் ஆசிர்வாதம், அப்பா கஞ்சத்தனம் வேண்டாம், சிறைப் பறவை, தண்டனை, கல்விக்கு காதல் தடை வேண்டாமே, உறுதி வேண்டும் ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கதையான உண்மையான நட்பு என்ற கதை துன்பத்தில் தோள் கொடுக்கும் நட்பைப் பற்றி பேசுகின்றது. குமார் என்ற பணக்காரச் செல்வனுக்கு கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார் குமாரின் தாத்தா. ஒரு விபத்தில் குமாரின் தந்தையும், தாயும் இறந்துவிட அவன் பாட்டனின் பராமரிப்பில் வளருகிறான். அத்துடன் பாடசாலையிலும் குமார் முரடனாக காணப்பட்டான். நண்பர்களிடம் செல்வாக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிதடிகளுக்கும் சென்றுவிடுவான். இத்தனைக்கும் இவன் நான்காம் தரம் படிக்கும் சின்ன மாணவன். அந்த வகுப்பில் சதீஸ் என்றொரு ஏழை மாணவனும் இருக்கிறான். அவனை எல்லோரும் ஆப்பக்காரா என்று கிண்டல் செய்வார்கள். ஒருநாள் குமாரின் தாத்தா இறந்துவிட அவனுக்கிருந்த பணச்செல்வாக்கும் குறைகிறது. அவனிடம் பணமில்லை என்றதும் மற்ற நண்பர்கள் அவனைவிட்டு ஒதுங்கிவிட, சதீஸ்தான் குமாரின் நண்பனாகிறான். அவன் குமாரை தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று உபசரித்து பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்பதை உணர்த்துகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையின் ஆசிர்வாதம் என்ற கதை பெண் பிள்ளைகளுக்கான அறிவுரையைக்கூறி நிற்கின்றது. பஸரியா, இமாஸா என்ற ஒத்த வயதுடைய இரு நண்பிகளை வைத்து இக்கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. பாடசாலைவிட்டு வரும்போது இமாஸாவின் தாயாருக்கு சுகமில்லாததால் பஸரியாவின் தாயும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக அறிகின்றனர். பிறகு பஸரியா தன் வீட்டுக்குச்சென்று சமைத்து, துணிகளைத் துவைத்து, வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்கிறாள். ஆனால் இமாஸாவின் வீடு இருந்தபடி குப்பையாகவே இருக்க, அவள் பசியுடன் வாடிக்கொண்டிருக்கிறாள். பஸரியா சாப்பிடடுவிட்டு இமாஸாவின் வீட்டுக்குச் சென்றதும் இமாஸாவும், அவளது தம்பியும் பசியில் இருப்பதைக் கண்டு, தான் சமைத்த சாப்பாட்டைக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அதைப் பார்த்து இமாஸாவுக்கு சரியான ஆச்சரியம். தானும், பஸரியாவும் ஒரே வயதுடையவர்கள். எனினும் அவளால் அனைத்து வீட்டு வேலைகளையும் சுயமாகச் செய்ய முடிகிறதே என்று எண்ணி அதைப்பற்றி வினவுகிறாள். பஸரியா பாடசாலை செல்வதற்கு முதல் தன்னால் ஆன அனைத்து வேலைகளையும் தன் தாயாருக்கு செய்து கொடுத்துவிட்டுத்தான் போவாள். அதனால் மகிழ்வடையும் தாய் அவளை அணைத்து முத்தமிட்டு வழியனுப்புகிறாள். அந்த ஆசிர்வாதத்தால் பாடசாலைக்கும் சந்தோஷமாகச் சென்று படிப்பிலும் கவனம் செலுத்த பஸரியாவால் முடியுமாக இருக்கின்றது என்பதை அறிந்த இமாஸா இனி தானும் தனது தாயாருக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சின்னஞ்சிறார்கள் வாசித்து மகிழக்கூடியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு சொல்லப்படக்கூடிய ஆலோசனைகள் கதைப் பாங்கில் அமைந்திருப்பதால் அது வாசிப்புக்கு வழிகாட்டுவதுடன் பிஞ்சு இதயங்களில் ஆணித்தரமாக பதிய வைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. வெறுமனே கார்ட்டூன்களைப் பார்த்து பொழுதைப் போக்கும் சிறுவர்கள் இவ்வாறான தரமுள்ள புத்தகங்களை இணங்கண்டு வாசிப்பதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். நூலாசிரியர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - ரோஜாக்கூட்டம்; (சிறுவர் கதைகள்)&lt;br /&gt;நூலாசரியர் - ஏ.சி. ஜரீனா முஸ்தபா&lt;br /&gt;வெளியீடு - எக்மி பதிப்பகம்&lt;br /&gt;தொலைபேசி - 011 5020936 &lt;br /&gt;விலை - 150 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-1913691260711364304?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/1913691260711364304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post_612.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1913691260711364304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1913691260711364304'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post_612.html' title='சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-hd1Av2M0uW0/T18fWTANuXI/AAAAAAAAATY/DWAC3GPL_Ls/s72-c/Jaree%2B04.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-4625433531294148874</id><published>2012-02-28T22:06:00.001-08:00</published><updated>2012-03-13T03:22:45.654-07:00</updated><title type='text'>சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-SMKB_9jeeFQ/T18fv9lAz0I/AAAAAAAAATk/9-iRQTcKYe4/s1600/Bale%2BBale.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 189px; height: 275px;" src="http://1.bp.blogspot.com/-SMKB_9jeeFQ/T18fv9lAz0I/AAAAAAAAATk/9-iRQTcKYe4/s320/Bale%2BBale.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5719324960627937090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்' என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள். குட்டிக் கரணமடித்த குண்டு பயில்வான் என்ற கதையில் இரு எலி நண்பர்கள் பற்றியும், அவை குண்டு பயில்வான் ஒருவனுக்கு செய்யும் அட்டகாசங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. பயில்வானின் தோற்றத்தையும், பரபரப்பையும் கண்டு கேலியாக கதைக்கும் எலிகளை கல்லால் அடிக்கிறான் பயில்வான். அவன் கயிற்றில் ஏறி சர்க்கஸ் செய்யும்போது எலி தன் கூரிய பற்களால் கயிற்றை கடித்துவிட கயிறு அறுந்து பயில்வான் விழுகிறான் என்றவாறு இக்கதை அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பலே பலே வைத்தியர் என்ற கதையில் வரும் அமைச்சரவை வைத்தயர் மிகவும் புத்திக்கூர்மை உள்ளவர். சதாவும் சாப்பிட்டுவிட்டு உறங்கும் மன்னன், உடல் பருத்து அலங்கோலமாகிறான். அவன் தனது உடற் கட்டமைப்பை சீராக வைத்துக்கொள்வதற்கான மருந்தை வைத்தியரிடம் கேட்கிறான். அதற்கு உடற்பயிற்சி அவசியம் என்று சொல்கிறான் வைத்தியன். மன்னனுக்கு அதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. இறுதியில் மன்னன் உடற்பயிற்சி செய்வதற்காக என்று கூறி பூங்காவிற்குச் செல்கிறான். பூங்காவில் பெரிய நாய் ஒன்று மன்னனை நோக்கி வருகிறது. பயந்த மன்னன் பூங்காவைச் சுற்றிச்சுற்றி ஓடுகிறான். வழக்கமாக இந்த நாய்த் தொல்லை நிகழ்கிறது. இதற்குக் காரணம் வைத்தியன் என்று அறிந்து மன்னன் கோபப்படுகிறான். ஆனாலும் மன்னனின் உடல் இளைப்பதற்காகவே இவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்று வைத்தியன் கூறியதும் மன்னன் மகிழ்கிறான். அன்று முதல் அளவான சாப்பாடும், உடற் பயிற்சியும் என்று கடைப்பிடித்து அழகாக வாழ்வதுடன் நாடு முழவதும் தேகப்பயிற்சி நிலையங்களையும் நிறுவுகிறான். மனிதனுக்கு ஓய்வு, சாப்பாடு, தூக்கம் போன்றவை எவ்வளவு அவசியமோ அதே போன்று உடற் பயிற்சியும், அளவான ஆகாரமும் அவசியம் என்ற அறிவுரை இந்தக் கதையினூடாக சொல்லப்படுகிறது. இந்த அறிவுரை சிறுவர்களுக்கு மட்டுமானதல்ல. அனைவருக்கும் உரியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டிதரின் பரலோக யாத்திரை என்ற கதை சுவாரஷ்யமானது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்து அலைவோருக்கான சரியான பாடம் இந்தக் கதை. அதில் பண்டிதர் ஒருவரும் படகோட்டியும் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தனது அறிவுத்திறனை படகுக்காரனிடம் பீற்றிக் கொள்வதற்காக ஷசாஸ்திரங்கள் படித்திருக்கிறாயா? புராணங்கள் தெரியுமா? எழுதப்படிக்கத் தெரியுமா| என்று கேட்கிறார் பண்டிதர். படகோட்டி எதற்கும் தெரியாது என்கிறான். முகம் சுளித்த பண்டிதர் 'உன் வாழ்க்கையின் முக்கால் பாகமே தொலைந்துவிட்டது' என்;கிறார். காற்று பலமாக அடிக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து படகு கவிழப் பார்க்கிறது. படகோட்டி பண்டிதரைப் பார்த்துக் கேட்கிறான். ஷசாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?| என்று. பண்டிதருக்கு நீச்சல் தெரியாது. படகோட்டி சொல்கிறான் 'ஐயோ சாமி உங்கள் முழு ஆயுசும் இன்றோடு தொலைந்தது'.&lt;br /&gt;&lt;br /&gt;இன்பமும் துன்பமும் என்ற கதை படிப்பினைக்குரிய கதையாகும். ஒரு இளைஞனும், வயோதிபரும் காட்டு வழியாக பயணம் செய்கின்றனர். நீண்ட தூரம் அவ்வாறு பயணம் செய்ததால் இருவரும் நண்பர்களாகின்றனர்.  இப்படி சென்று கொண்டிருக்கையில் இளைஞனுக்கு ஒரு பொதி கிடைக்கிறது. அதில் தங்கங்களும் வைரங்களும் காணப்படுகின்றன. எனினும் தனக்கு அவ்வாறானதொரு பொதி கிடைத்ததாக அவன் முதியவரிடம் காட்டிக் கொள்வில்லை. கொஞ்ச தூரம் சென்றதும் அது பற்றி முதியவர் விசாரிக்கிறார். இளைஞன் பதில் சொல்லவில்லை. முதியவர் மீண்டும் குடைகிறார். 'நாம் ஒன்றாக பயணிக்கும்போது இன்பமோ துன்பமோ சமமமாகப் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்' என்கிறார். அதைக்கேட்ட இளைஞன் கிழவரை நக்கலாகப் பேசிவிட்டு இந்தப் பையில் என்ன இருந்தால் உங்களுக்கென்ன? அதைக் கண்டெடுத்தவன் நான். எனக்குத்தான் சொந்தம் என்று முகத்திலடித்தாற்போல் சொல்கிறான். முதியவர் எதுவும் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று தூரம் நடந்திருப்பார்கள். திடீரென குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்கிறது. அரண்மனை நகைகள் களவு போய்விட்டன. யாரிடமிருக்கிறதோ அவருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்ற அறிவித்தலும் கேட்கிறது. கலக்கமடைந்த இளைஞன் முதியரைப் பார்க்கிறான். 'நமக்கு தண்டனை கிடைக்கும்' என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதியவர் அதற்கு நிதானமாக, 'நீதான் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் நான் காணவில்லை. நீதான் கண்டாய். எடுத்தாய். அதனால் தண்டனை உனக்கு மட்டும்தான்' என்று பதிலளிக்கிறார்.&lt;br /&gt;திகைத்து நின்ற வாலிபனை அரண்மனை சேவகர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். முதியவர் தனியாகப்  பயணத்தைத் தொடர்ந்தார் என்று நிறைவடைந்திருக்கும் இக்கதையானது தனது சந்தோஷத்தில் சேர்த்துக் கொள்ளாமல், கஷ்டத்தில் மாத்திரம் மாட்டிவிடும் நண்பர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற படிப்பினையையும், மூத்தோர் சொல் கேட்க வேண்டும் என்ற அறிவுரையையும் சொல்லி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு மாணவர்கள் கட்டாயம் படித்து பயன்பெற வேண்டிய நூலாக அமைந்திருக்கிறது கே.விஜயனின் பலே பலே வைத்தியர் என்ற இந்த சிறுவர் நூல். சிறுவர்களுக்கு கூறப்படும் புத்திமதிகள் வெறும் போதனைகளாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கே. விஜயன் அவர்கள், தான் சொல்லவந்த அறிவுரைகளை சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் பதிய வைக்கும் வண்ணம் கதைகள் அனைத்தையும் சித்திரங்களுடன் சொல்லியிருக்கும் பாங்கு சிறப்பம்சமாகும். இன்னுமின்னும் பல நூல்களை கே. விஜயன் அவர்கள் வெளியிட வேண்டுமென்பதே எங்கள் எல்லோரதும் பேரவா. அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - பலே பலே வைத்தியர்; (சிறுவர் கதைகள்)&lt;br /&gt;நூலாசரியர் - கலாபூஷணம் கே. விஜயன்&lt;br /&gt;டிவளியீடு - வீ.ஐ. புறமோ பதிப்பகம்&lt;br /&gt;தொலைபேசி - 011 455 1098 &lt;br /&gt;விலை - 200 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-4625433531294148874?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/4625433531294148874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/4625433531294148874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/4625433531294148874'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post_28.html' title='சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-SMKB_9jeeFQ/T18fv9lAz0I/AAAAAAAAATk/9-iRQTcKYe4/s72-c/Bale%2BBale.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-5426772180244479628</id><published>2012-02-28T22:05:00.001-08:00</published><updated>2012-03-13T03:24:01.883-07:00</updated><title type='text'>சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர் எழுதிய குள்ளன் என்ற சிறுவர் நூல் அண்iயில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. 32 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலானது கல்வியமைச்சின் இலங்கைத் தேசிய நூலாக்க அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எழுத்தளர் மன்ஸூர் அவர்கள் இலக்கிய உலகில் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகின்றார். இவரது முன்னோடியாக இருந்தவர் எழுத்தாளர் ஏ.பி.வி. கோமஸ் அவர்களாவார். மூத்த பத்திரிகையாளரான எஸ்.டி. சிவநாயகம் அவர்களால் பத்திரிகை உலகுக்குள் நுழைந்த நூலாசிரியர் சிறுவர்களின் சிந்தையைக் கவரும் வகையில் எழுதி வெளியிட்ட இந்நூல் சிறுவர்கள் விரும்பும் வகையில் அழகான வண்ணப் படங்களை உள்ளடக்கி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-IXx3ZGtoEHU/T18gGpNw_2I/AAAAAAAAATw/S36FsdN5cy4/s1600/Kullan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 196px; height: 287px;" src="http://4.bp.blogspot.com/-IXx3ZGtoEHU/T18gGpNw_2I/AAAAAAAAATw/S36FsdN5cy4/s320/Kullan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5719325350298713954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையில் வருகின்ற குடியானவன் மாலை வேளையில் வீடு திரும்புகிறான். குளிர் காய்வதற்காக விறகை மூட்டி அருகே அமர்ந்து கொள்கிறான். அப்போது அவளருகில் அவனது மனைவியும் வந்து அமர்ந்து கொள்கிறாள். தமக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருப்பதை எண்ணி இருவரும் மிகவும் வருந்துகின்றார்கள். அப்போது அவனது மனைவி கீழுள்ள அபிப்பிராயத்தை ஆதங்கத்தடன் கணவனிடம் கூறுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'எமக்கு அதிகம் தேவையில்லை. இந்த விரலின் அளவாவது ஒரு குழந்தை இருப்பதாக இருந்தால் எவ்வளவு போதும்'&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கூறி வெகுகாலம் செல்லும் முன்பே ஆள்காட்டி விரலின் அளவில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த பிள்ளை வளர்ந்து பெரியவனாகும் என்று எதிர்பார்த்தார்கள் பெற்றோர். ஆனால் அவனோ குள்ளமாகவே வளர்ந்தான். குள்ளமாக இருந்தாலும் புத்தி சாதூர்யமிக்கவன். எனவே அவன் தனது தந்தையுடன் தொழிலுக்கு செல்ல ஆசைப்படுகிறான். எனினும் தந்தை அதை விரும்பவில்லை. தாயிடம் கெஞ்சி அனுமதி பெற்று குதிரையின் காதோரமாக உட்கார்ந்து தந்தை தொழில் செய்யுமிடத்துக்குச் செல்கிறான் குள்ளன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வழியால் போகும்போது குதிரையிடம் வேகமாகப் போ - மெதுவாகப்போ என்று கட்டளையிட, குள்ளன் சொல்லும் கட்டளைக்கிணங்க குதிரையும் ஓடியது. இவ்வாறு பேச்சுச் சத்தம் கேட்டாலும் மனிதர் எவரையும் காணாத வழிப்போக்கர் இருவர் குதிரையின் பின்னாலேயே வந்து என்ன அதிசயம் இது என்று கவனிக்கிறார்கள். அப்போது குள்ளன் அவனது தந்தையிடம் கூறி தன்னை கீழே இறக்கச் சொல்கிறான். இதைக் கண்ட வழிப்போக்கர்கள் தந்தையிடம் இந்தக் குள்ளனை தமக்கு விற்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். குள்ளனின் தந்தை மறுக்கிறார். எனினும் தன்னை விற்றுவிடும் படியும், தான் எப்படியாவது தப்பித்து வந்துவிடுவதாகவும் தந்தையின் காதில் குள்ளன் சொல்கிறான். அதன் பிறகு அந்த வழிப்போக்கர்கள் தொப்பியினுள் குள்ளனை வைத்துக்கொண்டு போகிறார்கள். தொப்பியின் விளிம்பைப் பிடித்தவாறு குள்ளன் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்;துக்;கொண்டு போகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழிப்போக்கர்களில் ஒருவன் மற்றவனிடம் இந்தக் குள்ளனை பெரிய தொகைக்கு விற்றுவிடுவோம் என்று கூறுகிறான். அதற்கு மற்றவன் இவ்வாறு விற்றால் எமக்கு கொஞ்சம்தான் பணம் கிடைக்கும். வாரமொரு முறை கூடும் சந்தையில் இவனைக் காட்டி காசு பெறலாம் என்று கூற அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அவர்கள் இருவரும் இது பற்றி பேசும் போது சந்தைக்கு தன்னைக் கூட்டிச் செல்வது பற்றி மகிழச்சியடைகிறான் குள்ளன். குள்ளன் வர முடியாது என்று பிடிவாதம் பிடிப்பானோ என்று பயந்துகொண்டிருந்த இருவரும் குள்ளனின் பதிலைக் கேட்டு சந்தோஷமடைந்தனர். அதன் பிறகு குள்ளனை ஒரு சந்தைக்குக் கூட்டிச் சென்று அவனைக் காட்டிக் காட்டி பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். இதுதான் தருணம் என்று பார்த்திருந்த குள்ளன் காய்கறி வாங்க வந்த பெண்ணின் கூடையில் ஏறி அமர்ந்து அவளது வீட்டுக்குச் செல்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்ணின் கணவர் ஒரு சர்க்கஸ்காரன். ஆதலால் அவன் அணியும் ஆடையின் பொக்கட்டில் போய் ஒழிந்துகொள்கிறான் குள்ளன். அடுத்த நாள் சர்க்கஸ்காரன் தனது ஆடையை அணியும்போது குள்ளனின் குரல் கேட்கிறது. சட்டைப் பைக்குள் இருந்த குள்ளனைக் கண்டு அதிசயித்து குள்ளனையும் சர்க்கஸில் சேர்க்கின்றார். அத்துடன் சர்க்கஸ் நடைபெறும் இடத்தையும் சுற்றிக் காட்டுகிறார். அப்போது குள்ளன் தான் தப்பித்துக்கொள்ளும் வழியைக் கண்டு வெளியே ஓடுகிறான். இருளடைகிறது. அப்போது அங்கிருந்த நத்தைக் கூட்டில் ஒழிகிறான். மறுநாள் அவ்வழியால் வந்தவர்களிடம் உதவிபெற்று அவர்களுக்கு தான் உதவி செய்வதாகக் கூறுகிறான் குள்ளன். அவர்கள் திருடர்கள். எனவே தனவந்தரின் வீட்டுக்கு குள்ளனை அழைத்துச் சென்றாலும் வேலைக்காரன் கண்காணிப்பதைக் கண்டு திருடர்கள் ஓடிவிடுகிறார்கள். குள்ளன் அங்கிருக்கும் வைக்கோல் பண்ணையில் நுழைகிறான். பசுவுக்கு சாப்பாடு கொடுக்கப்படும் வைக்கோலுடன் குள்ளன் பசுவின் வயிற்றிற்குள் செல்கிறான். பசுவின் வயிற்றுக்குள் இருந்து குள்ளன் பேசுவதை பசுதான் பேசுகிறது என்று நினைத்து அதிசயித்தவர்கள் பசுவை மிருக வைத்தியரிடம் காட்டுகிறார்கள். அடுத்தநாள் பசுவின் சாணியுடன் குள்ளன் வெளியேறி அவ்வூரிலிருந்து தனது ஊர்வழியாகச் செல்லும் மாட்டு வண்டியில் ஏறிக்கொள்கின்றான். அவனது வீடு அமைந்திருக்கும் இடம் வந்ததும் சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பெற்றோருடன் சேர்ந்து கொள்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதை வர்ணச் சித்திரங்களை உள்ளடக்கி சிறுவர்கள் மகிழ்வடையும் வண்ணம் அமையப் பெற்றிருக்கிறது. இன்னுமின்னும் சிறந்த நூல்களை வெளியிட வேண்டுமென்று நூலாசிரியரை வாழ்த்துகிறோம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - குள்ளன் (சிறுவர் கதை)&lt;br /&gt;நூலாசரியர் - கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்&lt;br /&gt;முகவரி - 460ஃ16 அடுவாவலவத்த, பெலிகம்மன, மாவனெல்ல.&lt;br /&gt;தொலைபேசி - 0773 706374 &lt;br /&gt;விலை - 100 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-5426772180244479628?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/5426772180244479628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/5426772180244479628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/5426772180244479628'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/02/blog-post.html' title='சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-IXx3ZGtoEHU/T18gGpNw_2I/AAAAAAAAATw/S36FsdN5cy4/s72-c/Kullan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-7656159244644837559</id><published>2012-01-18T05:38:00.001-08:00</published><updated>2012-01-29T04:02:42.698-08:00</updated><title type='text'>காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக 46 தலைப்புக்களை உள்ளடக்கி 275 பக்கங்களில் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் நூலை வாசித்தபோது எனக்குள் ஆச்சரியம். காரணம் (இதுவரை) தமிழில் திறனாய்வு சார்ந்த 23 நூல்களை இவர் வெளியிட்டிருக்கின்றமைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்டுரை பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் சிங்களத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு ஆகும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். அதைத் தமிழில் தந்தந்திருக்கிறார் முஹம்மது யாகூப் என்பவர். பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் எழுதியிருக்கும் இந்த கட்டுரையில் இலங்கையில் நாவல், சிறுகதைகளின் வளர்ச்சி பற்றிய விரிவான பார்வை பதியப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qlMIE8hWU8g/TyJksFj81YI/AAAAAAAAAPw/RIV8EXk8nRU/s1600/KS%2BClr.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 176px; height: 254px;" src="http://1.bp.blogspot.com/-qlMIE8hWU8g/TyJksFj81YI/AAAAAAAAAPw/RIV8EXk8nRU/s320/KS%2BClr.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702230786774455682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன ஒற்றுமை இலக்கிய வழி என்ற தலைப்பில் இரண்டாவது பத்தி எழுதப்பட்டிருக்கிறது. மக்களின் மொழி, பிரதேச வாதம் போன்றவற்றால் ஓரினத்தின் உள்ளார்ந்த அனுபவங்கள், ஒற்றுமை என்பன மறுதலிக்கப்படுகின்றன. இதற்கான காரணம் புரிந்துணர்வின்மையே ஆகும். அவற்றை இலக்கியத்தினூடாக நிவர்த்தி செய்வதற்கு படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஈரினத்தவரின் பொதுப் பிரச்சனைகளை ஈரினத்தவரும் இலக்கிய வழியாக அறிந்துகொள்ளும்போது, ஒற்றுமை ஏற்பட வேண்டிய அவசியம் உணரப்படும். இவ்வாறு உள்ளிருந்து முகிழும் இந்த உணர்வை இலக்கியங்கள் வெளிப்படுத்தும்போது நடைமுறையில் இன ஒற்றுமை சாத்திய வகை ஏற்படுகிறது' என்கிறார் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் நந்தி பற்றி திரு. ப. ஆப்தீன் மற்றும் திரு. கே. பொன்னுத்துரை ஆகியோர் இணைந்து வெளியிட்ட பேராசிரியர் நந்தியும் மலையகமும் என்ற நூல் இலக்கிய மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் மிகவும் பயனுள்ளது என்று குறிப்பிடும் நூலாசிரியர் 'நமக்குள்ளே நாம் பழங்கதைகள் பேசி மகிழ்வதுண்டு. தொடர்ந்தும் பேச வேண்டும். பேசியும் வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பழமையின்றி புதுமையில்லை. புதுமையின் பிறப்பு பழமையின் அடித்தளத்திலிருந்துதான் ஏற்படுகிறதென்பது வரலாற்றுக் கண்ணோட்டமுடையவர்கள் கண்ட முடிவு' என்ற தனது கருத்தையும் சொல்லிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;போதை தரும் எழுத்து நடை என்ற மகுடத்தில் லா. ச. ரா, மௌனி ஆகியோரின் சிறுகதைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. அவர்களது எழுத்தில் பெரும்பாலும் நிஜவாழ்க்கை பற்றிய கருத்துக்கள் இல்லாவிட்டாலும் அதை வாசிக்கும்போது இனிய மயக்கம் ஏற்படுகின்றது என்று கூறுகிறார் நூலாசிரியர். உதாரணமாக லா. ச. ரா வின் பச்சைக் கனவு தொகுதியில் இடம்பெற்ற கதையிலிருந்து ஒரு பகுதி வாசகர்களுக்காக தரப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'உடல்மேல் உரோமம் அடர்ந்தது போன்று பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள், அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம். சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக்கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும். சப்பாத்தியில் இரத்தக்கட்டி போன்ற பூவில் ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக்கொண்டு வந்து மோதிற்று. ராமா ராமா ராமா. இன்னிக்கு என்ன உங்களுக்கு? இப்போதானே கூடாரத்தில் உக்கார வைத்துவிட்டுப் போனேன். மறுபடியும் வெய்யிலிலே குந்திக் கொண்டிருக்கிறிPங்களே. உங்களுக்கென்ன நிலா காயறதா?'&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியர் ஏ. எம். அபூபக்கர் அவர்கள் இஸ்லாமிய நெறி சார்ந்த பாடல்களையும், நூல்களையும் தமிழுலகுக்குத் தந்தவர். அவரது முறையீடு என்ற புத்தகம் சமயச் சார்புடைய பாடல்களை உள்ளடக்கியதொரு தொகுதியாகும். அரபுப் பதங்கள் பாடலில் காணப்படுகின்றன. அவற்றிற்கான தமிழ் விளக்கங்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.  இதில் உள்ளடங்கியுள்ள பாடல்களின் விளக்கங்களும், முன்னுரை, அணிந்துரை வழங்கியவர்களின் விபரங்களும் இந்தக் கட்டுரையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த இஸ்லாமிய இலக்கியவாதிகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களுள் கலைவாதி கலீல் அவர்களும் முக்கியமான ஒருவர். மன்னாரைச் சேர்ந்த இவர் கவிதை, ஓவியம், சிறுகதை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டவர். இளம் எழுத்தாளர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் செய்யத் தயங்காதவர். கலைவாதி கலீல் அவர்களைப் பற்றியும், இவரது கவிதைகள் சிலவற்றையும் மன்னாரிலிருந்து ஒரு மனிதாபிமானக்குரல் என்ற தலைப்பில் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் எழுதியிருக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்கில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்ற தலைப்பில் சில யதார்த்த விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சில எழுத்தாளர்கள் தமிழ் சொற்பதங்கள் குறித்து அதிக அக்கறை காட்டுவதில்லை. நுண்ணிய சில வேறுபாடுகள் பற்றி அறிய முற்படுவதில்லை. அவ்வாறானதொரு வசனத்துக்கு உதாரணமாக திறனாய்வு - நூல் மதிப்புரை போன்றவற்றைக் குறிப்பிட முடியும். இவை பற்றி நூலாசிரியர் கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் சொல்லும் விளக்கம் பின்வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;'திறனாய்வு, விமர்சனம், புத்தக மதிப்பரை, நூல் நயம், நூல் ஆய்வு என்றெல்லாம் மகுடமிட்டு நூல்கள் பற்றி நமது அபிப்பிராயத்தைத் தெரிவித்து வருகிறோம். ஆயினும் இப்பதங்களுக்கும் தொடர்புள்ள வேறு சில பதங்களுக்கும் இடையிலே சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை நாம் உணர்வதில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;ஆராய்ச்சி, ஆய்வு, இலக்கிய வரலாறு போன்றவை மிக உயரிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் திறனாய்வு முயற்சிகளாகும். இலக்கியத் திறனாய்வும் அவ்விதமானதே. புத்தக மதிப்புரை, நூல் நயம், நூல் விமர்சனம் போன்றவை ஒருபடி கீழே செயற்படும் எழுத்து ஆகும். பத்தி எழுத்துக்கள் அதிலும் கீழ் மட்டமுடையவை. இன்னும் கேலிக்கூத்தான கணிப்பு எதுவென்றால் நையாண்டி, நக்கல், மொட்டைக் குறிப்புக்கள் போன்றனவும் விமர்சனம் என அழைக்கப்படுவதுதான்' என்கிறார். எதைப் பற்றியும் ஒரு தெளிவான சிந்தனை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தக்கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;தினகரன் பத்திரிகையின் முன்னாள் அசிரியரான திரு. கே.வி. சிவா சிவசுப்பிரமணியம் அவர்கள் பற்றிய தகவல் உள்ளடங்களாக அவரது இலக்கிய ஆளுமை போன்ற பல விடயங்களும் ஆராயப்பட்டிருக்கின்றன. அதில் சிவா சிவசுப்பிரமணியம் வெளிப்படையாகவே இடதுசாரிச் சிந்தனையுடையவர். இவர் அரசாங்கத்தில் ஓர் எழுதுவினைஞராகச் சேர்ந்து, பல இடங்கிலும் தொழில் பார்த்து, உயர் பதவி பெற்றுத் தனது 45வது வயதில் ஓய்வு பெற்றார் என்று அறிகிறோம். அதன் பின்னர் தன்னந்தனியனாக நின்று தேசாபிமானி என்ற இடதுசாரிக் கட்சி வாராந்த இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவர் மொழி வன்மை கொண்ட தமிழாக்க எழுத்தாளர்.  மும்மொழியிலும் பரிச்சயமுடைய இதழியலாளர். இவரைப் பற்றிய இந்தக் கட்டுரை மும்மொழி பரிச்சயமுள்ள இதழியலாளர் கே.வி. சிவா சிவசுப்பிரமணியம் என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய நெஞ்சங்களின் பெரும் அபிமனத்தைப் பெற்ற புரவலர் ஹாசிம் உமர் அவர்களைப் பற்றியும் இந்நூலில் அறிய முடிகிறது. புத்தகம் வெளிவராத கலைஞர்களின் இலக்கியத் தாகத்துக்கு அமிர்தமாகி இருக்கின்ற புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பிறப்பால் மேமன் இனத்தைச் சேர்ந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பற்றுடைய இவரைப் பற்றி பிறர் என்ன கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தொகுத்து, கலைஞர் கலைச் செல்வன் அவர்கள் 'புரவலர் சில பதிவுகள்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்தால் புரவலரின் மேன்மையையும், ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம். இலக்கியக் கூட்டங்களில் முதல் பிரதி பெற்று எழுத்தாளர்களை கௌரவிக்கும் திரு. ஹாசிம் உமர் அவர்களின் மேலான இலக்கியச் சேவையினைப் பற்றி நூலாசிரியர் கே. எஸ். சிவகுமாரன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;'புரவலர் புத்தகப் பூங்கா என்ற அமைப்பின் மூலம் இதுவரை நூல்களை வெளியிட முடியாது தவிக்கும் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் எழுத்துப் பிரதிகளை வாங்கிப் பெற்று, இலவசமாக தன்னுடைய செலவில் அச்சிட்டு சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடமே அவற்றைக் கையளித்துவிடுவார். அந்த எழுத்தாளர்களும் தாம் அந்த நூலைப் பெற்று விற்று பணத்தைப் பெற்றுக்கொள்வர். இவர் ஓர் அற்புதமான மனிதாபிமானி. பெரும் செல்வந்தர். வர்த்தக நிறுவனங்களின் நிர்வாக அதிபர். இவர் நீடூழி வாழ்ந்து தனது அளப்பரிய பணிகளைத் தொடர வேண்டும்'.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்று இங்கே குறிப்பிடாத இன்னும் பல பயனுள்ள விடயங்கள் புத்தகத்தில் காணப்படுகின்றன. காலக் கண்ணாடியில் கலை இலக்கியப் பார்வையைக் காண விரும்பும் ஆர்வலர்கள், திரு கே. எஸ். சிவகுமாரன் அவர்களது இந்த நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் -  காலக் கண்ணாடியில்    ஒருகலை இலக்கியப் பார்வை&lt;br /&gt;நூலாசரியை - கே.எஸ். சிவகுமாரன்&lt;br /&gt;முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06&lt;br /&gt;வெளியீடு - மணிமேகலைப் பரிசுரம்&lt;br /&gt;தொலைபேசி - 011 2587617&lt;br /&gt;விலை - 300 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-7656159244644837559?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/7656159244644837559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_2503.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/7656159244644837559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/7656159244644837559'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_2503.html' title='காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-qlMIE8hWU8g/TyJksFj81YI/AAAAAAAAAPw/RIV8EXk8nRU/s72-c/KS%2BClr.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-1834538544222459815</id><published>2012-01-18T05:37:00.000-08:00</published><updated>2012-01-27T00:50:59.046-08:00</updated><title type='text'>யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதை உலகில் தனக்கென்றதொரு தனியிடத்தை பெற்றிருக்கும் திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களின் மூன்றாவது சிறுகதை தொகுதியான நிஜங்களின் தரிசனம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான 15 கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் வெளியீடாக 150 பக்கங்களில் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-22sJpMU8468/TyJlRko5nSI/AAAAAAAAAP8/H0BhC2qpBwY/s1600/Nijankalin%2BBavani%2Bmis.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 145px; height: 220px;" src="http://4.bp.blogspot.com/-22sJpMU8468/TyJlRko5nSI/AAAAAAAAAP8/H0BhC2qpBwY/s320/Nijankalin%2BBavani%2Bmis.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702231430771875106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய் ஆகிய தொகுப்புக்களை ஏற்கனவே வெளியிட்ட நூலாசிரியர் பற்றி பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தனது உரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சம காலத்தைய மத்திய தரத்தினரின் வாழ்வு இடுக்கினுள் நிகழும் பல்கோணச் சிதறல்களின் தனித்தனிப் பரவல்கள் ஒவ்வொரு சிறுகதைக்குமுரிய தெரிவாகவும், கருவாகவும் அமைகின்றன. அவற்றின் இயல்பு முக்கியத்துவத்தை அடியொட்டி நெட்டாங்கு மற்றும் அகலாங்கு விபரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளி தன்னை வானத்திலிருத்திக்கொண்டு இலக்கியம் படைக்க முடியாது. தன்னைச் சூழ நடப்பனவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கும்போதே அதை வாசிக்கும் வாசகன் அக் கதாபாத்திரங்களை தன் அயலவனாகவோ, உறவினராகவோ, அறிமுகமானவனாகவோ அடையாளம்காண முற்படுகின்றான். அதுதான் அக்கதையின் வெற்றி. யதார்த்தம் இல்லாத எதுவும் காலவோட்டத்தில் காணாமல் போய்விடும் என்று தனது கருத்தை முன்வைத்திருக்கும் திருமதி பவானி அவர்கள் உண்மையில் மனிதநேயமிக்க படைப்பாளி என்பதை அவருடன் பழகிய அனைவரும் உணர்ந்திருப்பர் என்பது திண்ணம். எழுத்துக்கும் செயலுக்கும் வேறுபாடு காட்டாதவனே உண்மை மிக்க கலைஞனாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் பவானி சிவகுமாரன் அவர்கள் தனது எழுத்துக்கள் போலவே செயற்பாடுகளிலும் உண்மையாக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சொப்பனத் திருமணம் என்ற முதல் கதையானது திருமணக் கனவுகளுடன் வாழ்ந்த இந்துமதி என்ற பெண்ணின் வாழ்வை அடிப்படையாகக்கொண்டது. கொழும்பில் வீடு வேண்டும் என்றும், நிறம் குறைவு என்றும் இந்துமதியின் திருமணம் காலத்தின் கோலத்தால் தள்ளிப்போகிறது. அன்றாட வாழ்க்கையுடன் வாழப் பழகிக்கொண்ட 32 வயதான இந்துமதி இறுதியாக தோழியின் வழிகாட்டலில் காண்டம் பார்க்கச் செல்கிறாள். அங்கே அவளது ஓலைகள் வாசிக்கப்பட்டு ராகு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அதற்குப் பரிகாரமாக ஒன்பது சுமங்கலிக்கு தானமும், ஒன்பது குழந்தைகளுக்கு இனிப்பு, உடைகள், புத்தகம் ஆகியவை ஒன்பது வகையாகவும் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.  இறுதியாக பஸ்ஸிலிருந்து இறங்கி தோழி வீட்டை அடைவதற்காக பாதையைக் கடக்க முற்படுகின்றாள் இந்துமதி. பாதுகாப்பு வலயத்தைக் காரணம் காட்டி ஒருவழிப் போக்குவரத்துக்கு மாற்றப்பட்டிருந்த வீதியால் வந்த வாகனம் இந்துமதியை தூக்கியெறிகிறது. கல்யாணக் கனவுகளுடன் வந்தவள் இறுதியில் இறந்துபோகிறாள் என்று அக்கதை நிறைவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தோற்ற மயக்கங்கள் என்ற சிறுகதை இன்றைய மாணவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கின்றது. தனியார் வகுப்புக்களுக்குப் போகும் சில மாணவர்கள் கைத்தொலைபேசி காதை விட்டு அகலாதபடி உலகை மறந்து கதைக்கின்றனர். 'இயர்போனை' மாட்டிக்கொண்டு தமக்கு மாத்திரம் தான் பாடல் கேட்கத் தெரியும் என்ற வகையில் நடக்கின்றனர். புகையிரத பாதைகளில் தன்னை மறந்தபடி பாடல் கேட்டவாறு சென்ற மாணவர்கள் பலர் புகையிரத விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் ஏராளம் இடம்பெற்றிருக்கின்றன. ஆடை விவகாரத்தில் மாணவிகள் அடிமட்டத்தில் இருக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் இச் சிறுகதை தாய் தந்தையர் படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றி விளக்குவதோடு பிள்ளைகள் பின்விளைவுகளை யோசிக்காமல் தனக்கு பிடித்தவர்களுடன் வாழ்க்கையை ஆரம்பிக்குமளவுக்கு துணிச்சலடைந்து விடுகிறார்கள் என்ற உண்மையையும் சொல்லி நிற்பதை அவதானிக்க முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு உத்தியோகம் அவசியமா இல்லையா என்ற பட்டிமன்றம் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டுக்காக பெண்கள் தொழில் பார்க்கலாம் என்று ஒரு சிலரும், பெண்கள் ஆணுக்கு குறைந்தவளல்ல அவளும் தொழில் செய்யலாம் என்று இன்னொரு சாராரும், பெண்கள் வீட்டிலிருப்பதே சிறந்தது என வேறு சிலரும் கூறி வருகின்றனர். எது எப்படிப்போனாலும் பிள்ளைகளை வளர்த்தல், சமைத்தல், வீட்டு வேலைகள் செய்தல் போன்ற பொறுப்புக்கள் பெண்களைச் சார்ந்தததாக இருக்கின்றது. கோடைகாலத் தூறலகள் என்ற சிறுகதையில் வரும் தயாளினியும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஓய்வொழிச்சலின்றி இருக்கிறாள். அப்படியிருக்க இன்னொரு தலையிடியாக வந்து சேர்கிறாள் கணவனின் ஒன்றுவிட்ட சகோதரியான ஆனந்தி. வெளிநாடு போவதற்காக விசா வரும் வரை ஆனந்தி தயாளினியின் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தியின் பிள்ளைகள் செய்கின்ற அட்டகாசங்கள் தயாளினியை கோபம் கொள்ளச்செய்தாலும் தயாளினியின் வேலைகளில் முக்கால்வாசியை ஆனந்தி பொறுப்பேற்கிறாள். டே கெயாரில் விடப்படும் தயாளினியின் மகனையும் ஆனந்தியே வளர்க்கிறாள்.  இவ்வாறிருக்க எட்டு மாதங்களின் பின் ஆனந்திக்கு விசா வருகிறது. அவள் புறப்படும் நாளுக்கு முந்தின நாள் இரவு தயாளினியிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;'நான் தனியப் பிள்ளைகளோட சண்டைக்க எவ்வளவு கஷ்டப்பட்டன். ஏழு வருஷம்... இவ்வளவு நாள் நானும் கணவரும் பிரிஞ்சிருப்பம் என்று நினைக்கல்ல. நீங்க இல்லாட்டா நான் கொழும்பில கஷ்டப்பட்டிருப்பன். நானோ பிள்ளைகளோ தெரியாம ஏதாவது பிழை விட்டிருந்தால் மனசுல வச்சிருக்காதேங்கோ' என்று அழும் காட்சி மனதை நெருடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான உரையாடல்களை உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கும் நூலாசிரியர் பவானி சிவகுமாரன் அவர்கள் ஆனந்தியின் பிள்ளைகள் வீட்டிலுள்ள டெப், க்ளாஸ் ஆகியவற்றை உடைக்கையில் 'பிள்ளைகளாம் பிள்ளைகள். சரியான குரங்குகள். தாயும் பிள்ளைகளும் சரியான பட்டிக்காடுகள்' என்றவாறு நகைச்சுவையூட்டக்கூடிய சிலவரிகளை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் ஆனந்தி சென்றுவிட இதுவரை ஆனந்தியிடம் ப்ரியமாக இருந்த தயாளினியின் மகன் மிகவும் சோர்வுற்றுப் போகிறான். அவனது முகத்தில் சந்தோஷம் காணாமல் போகிறது. அவன் தாயிடம் வேலைக்குப்போக வேண்டாம் என்று கூற தயாளினி பிள்ளைக்கும் தனக்குமாக கீழுள்ளவாறு சமாதானம் கூறிக்கொள்கிறாள் என்றவாறு கதை நிறைவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா வேலைக்குப் போனாத்தானே பிள்ளைக்கு வடிவான டீ சேட், ஷூஸ், ஸ்கூல் பேக் வாங்கலாம். பிள்ளையின் ரூமுக்கு ஏஸி போடுவமா? கார் வாங்கலாம். ராகவ் அண்ணா மாதிரி நிறைய படிக்கலாம்...'&lt;br /&gt;&lt;br /&gt;நிழல் கொஞ்சம் தா என்ற கதை பாட்டி பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்வதினூடாக நற்பழக்க வழக்கங்களை புகட்டுவதாய் அமைந்துள்ளது. மகன் மயூரனுடன் வசிக்கும் அந்தத்தாய் தனது சகோதரியின் மகளின் திருமணத்துக்காக தன் தாலியையும் காப்பையும் கொடுக்கின்றாள். அதையறிந்த மகன் தாயுடன் வாக்குவாதப்படுகின்றான். இரவு பேரப்பிள்ளைகள் பாட்டியிடம் கதை கேட்கப்போகிறார்கள். அவர் கூறும் கதை பாண்டவர் பற்றியது. அதில் தர்மனிடம் எந்தத் தம்பியை உயிருடன் பெற்றுக்கொள்ளப் போகிறாய்? என்று தர்மதேவதை கேட்டபோது, தர்மர் நகுலனைத் தருமாறு கேட்கிறார் காரணம் ஷஎனது தாய் குந்தி தேவிக்கு நான் இருப்பது போல எனது சிற்றன்னைக்கு அவரது மகன் நகுலன் இருக்கட்டுமே| என்கிறார். அதைக்கேட்டு தர்மதேவதை நான்கு தம்பிமாரையும் உயிரோடு திருப்பிக்கொடுக்கிறது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாட்டி கதை சொல்லி இறுதியில் உன்னைப்போல் பிறரை நேசி என்ற தத்துவத்தை விளக்குகிறாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மகன் மயூரன் மனம் மாறி இறுதியில் தாயிடம் இவ்வாறு கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா நான் நாளைக்கு வேலையால வரேக்க ரெடியா இருங்கோ. பிள்ளைகள் சின்னன்ல போட்ட காப்பு, மோதிரம் எல்லாம் சும்மாதானே இருக்கு. வெறுங்கையோட இருக்க வேண்டாம். உங்களுக்கு காப்பு வாங்கி வரலாம்...'&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்ன விடயத்தை வைத்து அழகிய கதையை ஆக்கும் திறமையுள்ள பவானி சிவகுமாரன் அவர்கள் மேலும் பல படைப்புக்களைத்தர வேண்டுமென்று வாழ்த்துகிறோம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் -  நிஜங்களின் தரிசனம்&lt;br /&gt;நூலாசரியை - பவானி சிவகுமாரன்&lt;br /&gt;விலாசம் - 37 ஏ, ஸ்ரீ மகா விகார வீதி, களுபோவில, தெஹிவளை.&lt;br /&gt;வெளியீடு - மீரா பதிப்பகம்&lt;br /&gt;தொலைNசி - 011 2721382&lt;br /&gt;விலை - 300 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-1834538544222459815?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/1834538544222459815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_6970.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1834538544222459815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1834538544222459815'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_6970.html' title='யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-22sJpMU8468/TyJlRko5nSI/AAAAAAAAAP8/H0BhC2qpBwY/s72-c/Nijankalin%2BBavani%2Bmis.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-2311078699295826322</id><published>2012-01-18T05:36:00.000-08:00</published><updated>2012-01-27T00:53:32.910-08:00</updated><title type='text'>வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும்  - நாவல்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் நாவலுக்கான&lt;/span&gt; இரசனைக்குறிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனை வட்டத்தின் 339 ஆவது வெளியீடான வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற நாவல் 12 அத்தியாயங்களை உள்ளடக்கி 88 பக்கங்களில் அமைந்திருக்கிறது. 2003ம் ஆண்டு எண்ணச் சிதறல்கள் என்ற கவிதைத் தொகுதியையும், 2009ம் ஆண்டு புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற நாவலையும் வெளியிட்ட திருமதி சுமைரா அன்வர், தனது மூன்றாவது வெளியீடாக வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற நாவலைத் தந்து, இலக்கியத் துறையில் தனக்கான பாதையை விரிவுபடுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-bYm8PjFSMCA/TyJl7AdmYfI/AAAAAAAAAQI/MFY9fmHMk90/s1600/Sumaira%2B02%2B%25282%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 222px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-bYm8PjFSMCA/TyJl7AdmYfI/AAAAAAAAAQI/MFY9fmHMk90/s320/Sumaira%2B02%2B%25282%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702232142615306738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவலின் நாயகன் மோஹித், தங்கைகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்காகவும், தனது இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் திருமணத்தை தள்ளிப்போடுகிறான். அவனது மனதில் சீதனமில்லாமல் திருமணம் முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் நிலைத்து நிற்கிறது. தங்கைகள் திருமண வயதை அடைந்து நிற்கையில் மோஹித்துக்கு பணக்கார இடத்திலிருந்து திருமணம் பேசி வருகிறார்கள். குடும்பப் பொறுப்புக்களாலும், பெற்றோரின் அநாதரவான நிலையினாலும் மோஹித் தனது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து அசைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காக சுமைரா அவர்கள் கையாண்ட கீழுள்ள உவமானம் சிறப்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய மல்லிகை மொட்டுக்கள் வண்டுகளுக்கு சீர் கொடுக்க வழியில்லாததால் ஏக்கங்களைச் சுமந்து அண்ணன் நான் கரை சேர்ப்பேன் என்ற அசட்டு நம்பிக்கையில்...' ஆக மொத்தத்தில் புரட்சிகரமாக சீதனம் வேண்டாம் என்று முழங்கியவன் சகோதரிகளின் திருமணத்தை ஒப்பேற்ற வேண்டுமே என்ற இக்கட்டான நிலையில் விஜி என்ற பணக்காரப் பெண்ணை திருமணம் செய்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;பல விடயங்களில் விஜிக்கும் மோஹித்துக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. மோஹித் அழகியலை ரசிப்பவன். விஜி அறிவியலை ரசிப்பவள். இவன் கூட்டுக் குடும்ப அபிமானி. அவள் தனிமை விரும்பி. அவன் தார்மீகமாக சிந்தனை செய்ய, விஜியோ தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறாள். விஜி தன்னை ஆள்கிறாள் என்ற எண்ணமும், சீதனத்தை வாங்கி விட்டோமே என்ற தாழ்வுச் சிக்கலும் மோஹித்தை வருத்துகிறது. அத்துடன் விஜி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று சொன்னமை அவனுள் பெரிய இடியை இறக்குகிறது. தன் நிலையை மோஹித் இவ்வாறு உணர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் விற்கப்பட்ட பண்டம். அவள் வாங்கிய எஜமானி', 'வித்த மாடாயிற்றே... பெற்றோருக்கு என்னை உரிமை பாராட்டவா முடியும்?'&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலிருந்து வேறு கிளைக்கு விஜி மாற்றம் பெற்றுப் போகிறாள். அவள் தன் கணவனை தன்னுடன் வந்து இருக்குமாறு கட்டாயப்படுத்தவில்லை. ஊரின் கேலிப் பேச்சுக்குப் பயந்தும் பெற்றோர்கள் வேதனைப்படுவார்கள் என்று உணர்ந்தும் மௌனமாக அவளுடன் செல்கிறான் மோஹித். சமைப்பதில் உதவிசெய்தல், மளிகைச் சாமான் வாங்கி வருதல், விஜியை ஆபிசுக்கு அழைத்துச் செல்லல், வீட்டிற்கு அழைத்து வருதல், கூட்டங்கள் கொண்டாட்டங்களுக்கு கூட்டிப் போதல் போன்ற சில்லறை வேலைகள் யாவும் மோஹித்தின் தலையில் சுமத்தப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் உணர்வினால் மனைவிக்கு பணிவிடை செய்யாவிட்டாலும், அடிபணிதல் என்ற உணர்வில் அவளுக்கான வேலைகளை செய்து வருகிறான் மோஹித். காலங்கள் கழிய அவன் அப்பாவாகப் போவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறான். எனினும் விஜி சொல்லும் பதில் அவனை மட்டுமன்றி வாசிப்போரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவளுக்கு குழந்தை தேவையில்லை என்றும், அதை கலைக்கப் போவதாகவும் கூறுவதுமே அதற்கான காரணம். எனினும் மனசாட்சியின் உறுத்தலுக்கு விஜி மசிந்ததால் ஆண் குழந்தையொன்று ஆரோக்கியமாக பிறக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலகட்டத்தில் விஜியின் பணத்தைக் கொண்டு மோஹித்தின் சகோதரிகளின் திருமணமும் செவ்வனே நடைபெறுகிறது. விஜியின் குழந்தையான வினோத் விஜியின் பராமரிப்பிலின்றி மோஹித்தின் பராமரிப்பில் விடப்படுகிறான். அடிக்கடி வேலைக்கு லீவு போடுவது பெரும் தொல்லையாகிவிட ஒரு ஆயாவை நியமிக்கிறான் மோஹித்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜியின் சந்தேகக் குணம் ஆயாவையும், மோஹித்தையும் இணைத்து தப்பான கண்ணோட்டத்தில் சிந்திக்கிறது. பெண்களுக்குரிய மரியாதையை அறிந்ததாலும், சகோதரிகளுடன் பிறந்ததாலும் மோஹித்தால் இதைத் தாங்க முடியாமல் போகிறது. அதை அறிந்து, மோஹித்தை விடவும் வயதில் மூத்த ஆயா வீட்டிற்கு வராமல் இருந்து விடுகிறாள். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏற மோஹித் பொறுமை இழக்கிறான். அவனது கத்தலை கணக்கிலும் எடுக்காத விஜி சீதனம் எடுத்தது பற்றியும், குழந்தை வேண்டும் என்று மோஹித் அங்கலாய்த்தது பற்றியும், தற்போது பராமரிக்கும் வேலை மட்டும் விஜிக்குரியதல்ல. அது மோஹித்துக்கும் உரியதுதான் என்றும் முழங்க, அவள் கூறியவற்றிலுள்ள உண்மையறிந்து மோஹித் மீண்டும் அவளிடமே சரணடைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜிக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட தினமொன்றில் மீண்டும் கணவன் மனைவிக்கடையில் நெருக்கம் அதிகமாகிறது. அந்தத் தருணத்தில் டேகெயாரில் விடப்பட்ட வினோத் அங்கு நிகழும் சில அசௌகரியங்களால் மீண்டும் வீட்டிலேயே இருக்கத் தொடங்குகிறான். இந்த முறையும் மோஹித்தின் பாடு பெரும் திண்டாட்டமாகிறது. ஆகவே பழைய ஆயாவை அழைத்துப் பார்த்தபோது அவள் தனக்குத் தெரிந்த பூவிழி என்ற இளம் பெண்ணை அனுப்பி வைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;விதி யாரை விட்டது. மீண்டும் தாய்மையடைந்த விஜி இந்தத் தடவை கருவை அழிக்க முயற்சிக்கிறாள். எனினும் காலம் பிந்தியதல் அது சாத்தியமாகவில்லை. கருவை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதால் பாதிப்படைந்த சிசு (பெண் குழந்தை) மூளை வளர்ச்சி குன்றி பிறக்கிறது. கெட்ட குடியே கெடும் என்பதற்கிணங்க இந்தச் சோதனையிலிருந்து விடுபடுவதற்கு முன் வேறொரு கோணத்தில் பிரச்சினை எழுகிறது. வீட்டுக்கு புதிதாக வேலைக்கு வந்த பூவிழி திருமணமாகாமலேயே கர்ப்பமாகிறாள். விஜி, அவளது பெற்றோர் அனைவரும் மோஹித்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தும்போது அதை மறுப்பதற்கான வழிகளற்று அநாதரவான நிலையில் இருக்கிறான் மோஹித். வாசகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகும் இந்த கதையோட்டத்தை நூலாசிரியர் தன் கற்பனைத் திறனால் மேலும் நகர்த்திச் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பூவிழி தான் காதலித்த பையனுடன் எல்லை மீறிப் பழகுகிறாள். அதனால் வந்த வினைதான் இதுவென்று விஜி அறிந்து கொண்டாலும் அவளது செயற்பாடுகளில் கனிவு இருக்கவில்லை. அவள் தாய் வீட்டுக்குச் செல்கிறாள். எதிர்பாராத ஒரு நாளில் மோஹித்தின் நண்பன் வந்து மோஹித்தைச் சந்திக்கிறான். அவனது பிரச்சினைகளை விளங்கிய நண்பன் மோஹித்தின் மாமி, மாமனாரை வரவழைக்கிறான். அதன் பின்பு விஜி பற்றி அவர்கள் சொல்லும் தகவல் தான் நாவலின் சிறப்பம்சமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! விஜி அவர்களது மகளே இல்லை. சிறு வயதில் அவளது பெற்றோர் விபத்தொன்றில் சிக்கி இறந்தபோது அதைப் பார்த்திருந்த விஜி முதன் முதலாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாள். அதன் பிறகு அவள் உயிராய் நேசித்த தோழியுடன் ஏற்பட்ட நட்பு, சடுதியாக அஸ்தமித்ததால் ஏற்பட்ட மன விரக்தி ஆகியவற்றால் பாதிப்படைந்து யாரோடும் பழகாமல் படிப்பொன்றே தனது மூச்சு என்று செயற்பட்டு வந்திருக்கிறாள். இதன்போது பல்கலைக்கழக சீனியரைக் காதலித்து அவர் பணக்கார சம்பந்தம் வந்ததால் விஜியை நிராகரித்த போது உள ரீதியாக மேலும் தாக்கப்படுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பயம், வெறுப்பு, இயலாமை, ஏமாற்றம் என்பவை விஜியை மன நோயாளியாக்கிவிட்டது. அவளுடைய மென்மைகள் ஒழிந்து ஆண்மைக் குணம் ஒட்டிக்கொண்டது. இப்படியிருக்கும் போதுதான் விஜியின் அம்மாவுக்கு (வளர்த்த அம்மா) நெஞ்சு வலி ஏற்படுகிறது. அதைப் பார்த்து துடித்த விஜியிடம் இந்தச் சாட்டை வைத்து திருமணம் முடிக்க கெஞ்சுகின்றனர் அவளது பெற்றோர். ஏதோ நோக்கத்தில் அவள் ஒத்துக்கொள்ள, ஊரில் மதிப்பாகவும், கண்ணியமாகவும் வாழ்ந்த மோஹித்தை மருமகனாக்க முனைகின்றனர். காரணம் குடும்பப் பொறுப்பும், பொறுமையும், நற்குணமும் பொருந்திய மோஹித் விஜியை நன்றாக பார்ப்பான் என்ற நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;விஜியின் கடுமையான போக்குக்கு காரணம் அறிந்த மோஹித் வேதனையால் துடிக்கிறான். அவனுக்கு விஜி மீது கழிவிரக்கம் பிறக்கிறது. நண்பன் கூறியது போல டாக்டரிடம் காட்டி விஜியை முழுமையாக சுகப்படுத்திவிட வேண்டும் என்று அவன் மனம் திடசங்கற்பம் கொள்கிறது என்பதாக நாவல் நிறைவடைகிறது. கடைசி வரைக்கும் விஜி மீது வாசகர்கள் வெறுப்பு கொண்டாலும், இறுதியில் அவள் மீது அநுதாபம் கொள்வார்கள் என்பது ஐயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சீதனத்தை எதிர்த்தும், கணவன் மனைவிக்கிடையில் இருக்க வேண்டிய புரிந்துணர்வு பற்றியும் துல்லியமாக சித்தரிக்கிறது இந்த நாவல். திருமதி. சுமைரா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் -  வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் (நாவல்)&lt;br /&gt;நூலாசரியை - சுமைரா அன்வர்&lt;br /&gt;விலாசம் - கே.கே.எம். கார்டன்ஸ், தக்கியா ரோட், மல்லவப்பிட்டிய, குருணாகலை.&lt;br /&gt;வெளியீடு - சிந்தனை வட்டம்&lt;br /&gt;தொலைNசி – 0723 670515&lt;br /&gt;விலை - 200 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-2311078699295826322?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/2311078699295826322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_9384.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/2311078699295826322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/2311078699295826322'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_9384.html' title='வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும்  - நாவல்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-bYm8PjFSMCA/TyJl7AdmYfI/AAAAAAAAAQI/MFY9fmHMk90/s72-c/Sumaira%2B02%2B%25282%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-6476753651399085883</id><published>2012-01-18T05:35:00.001-08:00</published><updated>2012-01-27T00:55:41.788-08:00</updated><title type='text'>சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சிறுவர்களுக்கான இலக்கியம் முன்னேற்றமாக வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் திருமதி. ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள் ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் கதைகளடங்கிய நூலை வெளியிட்டிருக்கின்றார். சிறுவர்கள் பலரின் முகத்தைத் தாங்கி புத்தகத்தின் அட்டை வெளிவந்திருக்கிறது. எக்மி பதிப்பகத்தின் வெளியீட்டில் 39 பக்கங்களை உள்ளடக்கி அமையப் பெற்றிருக்கும் இந்த நூல் வர்ண எழுத்துக்களில்;, கண்ணைக் கவரும் வர்ணச் சித்திரங்களுடன் அமைந்திருப்பதை சிறப்பம்சமாகக் கொள்ளலாம். ஓர் அபலையின் டயறி, இது ஒரு ராட்சசியின் கதை, 37ம் நம்பர் வீடு ஆகிய தொகுதிகளுடன் ரோஜாக்கூட்டம் நூலையும் தந்திருக்கிறார் நூலாசிரியர் திருமதி ஜரீனா முஸ்தபா அவர்கள். இந்நூலானது கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளர் நாயகத்தினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9eBGUMfaj9c/TyJmR545KbI/AAAAAAAAAQU/Pxo5DDzRcbQ/s1600/Roja%2B%25282%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 191px; height: 272px;" src="http://1.bp.blogspot.com/-9eBGUMfaj9c/TyJmR545KbI/AAAAAAAAAQU/Pxo5DDzRcbQ/s320/Roja%2B%25282%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702232535987726770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் காணப்படும் சில தீய விடயங்களும், சூழலும் பிள்ளைகள் நல்லவற்றிலிருந்து விடுபட்டு தீய வழிகளில் செல்வதற்கு பெரும் துணை புரிகின்றன. பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் வழிகாட்டுதல்களில் பிள்ளைகள் இருந்தாலும் கூட தொலைக்காட்சி, கைத்தோலைபேசி, இன்டர்நெட் போன்றன வழிகேட்டிற்கு இழுத்துச் செல்கின்றமை கண்கூடான விடயங்களாகும். அத்தகையவற்றிலிருந்து பிள்ளைச் செல்வங்களை மீட்டிக்கொள்ள நல் அறிவுரைகளைப் பகிர்ந்து நிற்கும் நூல்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். அந்த வகையில் ரோஜாக்கூட்டம் என்ற நூலில் உள்ள சிறுவர் கதைகள் அழகிய அறிவுரைகளை அழகாக இயம்புகின்றன. உண்மையான நட்பு, அன்னையின் ஆசிர்வாதம், அப்பா கஞ்சத்தனம் வேண்டாம், சிறைப் பறவை, தண்டனை, கல்விக்கு காதல் தடை வேண்டாமே, உறுதி வேண்டும் ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கதையான உண்மையான நட்பு என்ற கதை துன்பத்தில் தோள் கொடுக்கும் நட்பைப் பற்றி பேசுகின்றது. குமார் என்ற பணக்காரச் செல்வனுக்கு கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார் குமாரின் தாத்தா. ஒரு விபத்தில் குமாரின் தந்தையும், தாயும் இறந்துவிட அவன் பாட்டனின் பராமரிப்பில் வளருகிறான். அத்துடன் பாடசாலையிலும் குமார் முரடனாக காணப்பட்டான். நண்பர்களிடம் செல்வாக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிதடிகளுக்கும் சென்றுவிடுவான். இத்தனைக்கும் இவன் நான்காம் தரம் படிக்கும் சின்ன மாணவன். அந்த வகுப்பில் சதீஸ் என்றொரு ஏழை மாணவனும் இருக்கிறான். அவனை எல்லோரும் ஆப்பக்காரா என்று கிண்டல் செய்வார்கள். ஒருநாள் குமாரின் தாத்தா இறந்துவிட அவனுக்கிருந்த பணச்செல்வாக்கும் குறைகிறது. அவனிடம் பணமில்லை என்றதும் மற்ற நண்பர்கள் அவனைவிட்டு ஒதுங்கிவிட, சதீஸ்தான் குமாரின் நண்பனாகிறான். அவன் குமாரை தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று உபசரித்து பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்பதை உணர்த்துகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையின் ஆசிர்வாதம் என்ற கதை பெண் பிள்ளைகளுக்கான அறிவுரையைக்கூறி நிற்கின்றது. பஸரியா, இமாஸா என்ற ஒத்த வயதுடைய இரு நண்பிகளை வைத்து இக்கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. பாடசாலைவிட்டு வரும்போது இமாஸாவின் தாயாருக்கு சுகமில்லாததால் பஸரியாவின் தாயும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக அறிகின்றனர். பிறகு பஸரியா தன் வீட்டுக்குச்சென்று சமைத்து, துணிகளைத் துவைத்து, வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்கிறாள். ஆனால் இமாஸாவின் வீடு இருந்தபடி குப்பையாகவே இருக்க, அவள் பசியுடன் வாடிக்கொண்டிருக்கிறாள். பஸரியா சாப்பிடடுவிட்டு இமாஸாவின் வீட்டுக்குச் சென்றதும் இமாஸாவும், அவளது தம்பியும் பசியில் இருப்பதைக் கண்டு, தான் சமைத்த சாப்பாட்டைக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அதைப் பார்த்து இமாஸாவுக்கு சரியான ஆச்சரியம். தானும், பஸரியாவும் ஒரே வயதுடையவர்கள். எனினும் அவளால் அனைத்து வீட்டு வேலைகளையும் சுயமாகச் செய்ய முடிகிறதே என்று எண்ணி அதைப்பற்றி வினவுகிறாள். பஸரியா பாடசாலை செல்வதற்கு முதல் தன்னால் ஆன அனைத்து வேலைகளையும் தன் தாயாருக்கு செய்து கொடுத்துவிட்டுத்தான் போவாள். அதனால் மகிழ்வடையும் தாய் அவளை அணைத்து முத்தமிட்டு வழியனுப்புகிறாள். அந்த ஆசிர்வாதத்தால் பாடசாலைக்கும் சந்தோஷமாகச் சென்று படிப்பிலும் கவனம் செலுத்த பஸரியாவால் முடியுமாக இருக்கின்றது என்பதை அறிந்த இமாஸா இனி தானும் தனது தாயாருக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சின்னஞ்சிறார்கள் வாசித்து மகிழக்கூடியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு சொல்லப்படக்கூடிய ஆலோசனைகள் கதைப் பாங்கில் அமைந்திருப்பதால் அது வாசிப்புக்கு வழிகாட்டுவதுடன் பிஞ்சு இதயங்களில் ஆணித்தரமாக பதிய வைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. வெறுமனே கார்ட்டூன்களைப் பார்த்து பொழுதைப் போக்கும் சிறுவர்கள் இவ்வாறான தரமுள்ள புத்தகங்களை இணங்கண்டு வாசிப்பதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். நூலாசிரியர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - ரோஜாக்கூட்டம்; (சிறுவர் கதைகள்)&lt;br /&gt;நூலாசரியர் - ஏ.சி. ஜரீனா முஸ்தபா&lt;br /&gt;வெளியீடு - எக்மி பதிப்பகம்&lt;br /&gt;தொலைபேசி - 011 5020936 &lt;br /&gt;விலை - 150 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-6476753651399085883?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/6476753651399085883/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_1865.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/6476753651399085883'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/6476753651399085883'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_1865.html' title='சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-9eBGUMfaj9c/TyJmR545KbI/AAAAAAAAAQU/Pxo5DDzRcbQ/s72-c/Roja%2B%25282%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-5494427659307392245</id><published>2012-01-18T05:34:00.000-08:00</published><updated>2012-01-27T00:59:46.696-08:00</updated><title type='text'>சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர் எழுதிய குள்ளன் என்ற சிறுவர் நூல் அண்iயில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. 32 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலானது கல்வியமைச்சின் இலங்கைத் தேசிய நூலாக்க அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எழுத்தளர் மன்ஸூர் அவர்கள் இலக்கிய உலகில் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகின்றார். இவரது முன்னோடியாக இருந்தவர் எழுத்தாளர் ஏ.பி.வி. கோமஸ் அவர்களாவார். மூத்த பத்திரிகையாளரான எஸ்.டி. சிவநாயகம் அவர்களால் பத்திரிகை உலகுக்குள் நுழைந்த நூலாசிரியர் சிறுவர்களின் சிந்தையைக் கவரும் வகையில் எழுதி வெளியிட்ட இந்நூல் சிறுவர்கள் விரும்பும் வகையில் அழகான வண்ணப் படங்களை உள்ளடக்கி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/---Iz0B0jjvw/TyJm7jQkymI/AAAAAAAAAQg/hmNQoWt8VOw/s1600/Kullan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 196px; height: 287px;" src="http://3.bp.blogspot.com/---Iz0B0jjvw/TyJm7jQkymI/AAAAAAAAAQg/hmNQoWt8VOw/s320/Kullan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702233251467545186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையில் வருகின்ற குடியானவன் மாலை வேளையில் வீடு திரும்புகிறான். குளிர் காய்வதற்காக விறகை மூட்டி அருகே அமர்ந்து கொள்கிறான். அப்போது அவளருகில் அவனது மனைவியும் வந்து அமர்ந்து கொள்கிறாள். தமக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருப்பதை எண்ணி இருவரும் மிகவும் வருந்துகின்றார்கள். அப்போது அவனது மனைவி கீழுள்ள அபிப்பிராயத்தை ஆதங்கத்தடன் கணவனிடம் கூறுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'எமக்கு அதிகம் தேவையில்லை. இந்த விரலின் அளவாவது ஒரு குழந்தை இருப்பதாக இருந்தால் எவ்வளவு போதும்'&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கூறி வெகுகாலம் செல்லும் முன்பே ஆள்காட்டி விரலின் அளவில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த பிள்ளை வளர்ந்து பெரியவனாகும் என்று எதிர்பார்த்தார்கள் பெற்றோர். ஆனால் அவனோ குள்ளமாகவே வளர்ந்தான். குள்ளமாக இருந்தாலும் புத்தி சாதூர்யமிக்கவன். எனவே அவன் தனது தந்தையுடன் தொழிலுக்கு செல்ல ஆசைப்படுகிறான். எனினும் தந்தை அதை விரும்பவில்லை. தாயிடம் கெஞ்சி அனுமதி பெற்று குதிரையின் காதோரமாக உட்கார்ந்து தந்தை தொழில் செய்யுமிடத்துக்குச் செல்கிறான் குள்ளன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வழியால் போகும்போது குதிரையிடம் வேகமாகப் போ - மெதுவாகப்போ என்று கட்டளையிட, குள்ளன் சொல்லும் கட்டளைக்கிணங்க குதிரையும் ஓடியது. இவ்வாறு பேச்சுச் சத்தம் கேட்டாலும் மனிதர் எவரையும் காணாத வழிப்போக்கர் இருவர் குதிரையின் பின்னாலேயே வந்து என்ன அதிசயம் இது என்று கவனிக்கிறார்கள். அப்போது குள்ளன் அவனது தந்தையிடம் கூறி தன்னை கீழே இறக்கச் சொல்கிறான். இதைக் கண்ட வழிப்போக்கர்கள் தந்தையிடம் இந்தக் குள்ளனை தமக்கு விற்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். குள்ளனின் தந்தை மறுக்கிறார். எனினும் தன்னை விற்றுவிடும் படியும், தான் எப்படியாவது தப்பித்து வந்துவிடுவதாகவும் தந்தையின் காதில் குள்ளன் சொல்கிறான். அதன் பிறகு அந்த வழிப்போக்கர்கள் தொப்பியினுள் குள்ளனை வைத்துக்கொண்டு போகிறார்கள். தொப்பியின் விளிம்பைப் பிடித்தவாறு குள்ளன் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்;துக்;கொண்டு போகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழிப்போக்கர்களில் ஒருவன் மற்றவனிடம் இந்தக் குள்ளனை பெரிய தொகைக்கு விற்றுவிடுவோம் என்று கூறுகிறான். அதற்கு மற்றவன் இவ்வாறு விற்றால் எமக்கு கொஞ்சம்தான் பணம் கிடைக்கும். வாரமொரு முறை கூடும் சந்தையில் இவனைக் காட்டி காசு பெறலாம் என்று கூற அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அவர்கள் இருவரும் இது பற்றி பேசும் போது சந்தைக்கு தன்னைக் கூட்டிச் செல்வது பற்றி மகிழச்சியடைகிறான் குள்ளன். குள்ளன் வர முடியாது என்று பிடிவாதம் பிடிப்பானோ என்று பயந்துகொண்டிருந்த இருவரும் குள்ளனின் பதிலைக் கேட்டு சந்தோஷமடைந்தனர். அதன் பிறகு குள்ளனை ஒரு சந்தைக்குக் கூட்டிச் சென்று அவனைக் காட்டிக் காட்டி பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். இதுதான் தருணம் என்று பார்த்திருந்த குள்ளன் காய்கறி வாங்க வந்த பெண்ணின் கூடையில் ஏறி அமர்ந்து அவளது வீட்டுக்குச் செல்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்ணின் கணவர் ஒரு சர்க்கஸ்காரன். ஆதலால் அவன் அணியும் ஆடையின் பொக்கட்டில் போய் ஒழிந்துகொள்கிறான் குள்ளன். அடுத்த நாள் சர்க்கஸ்காரன் தனது ஆடையை அணியும்போது குள்ளனின் குரல் கேட்கிறது. சட்டைப் பைக்குள் இருந்த குள்ளனைக் கண்டு அதிசயித்து குள்ளனையும் சர்க்கஸில் சேர்க்கின்றார். அத்துடன் சர்க்கஸ் நடைபெறும் இடத்தையும் சுற்றிக் காட்டுகிறார். அப்போது குள்ளன் தான் தப்பித்துக்கொள்ளும் வழியைக் கண்டு வெளியே ஓடுகிறான். இருளடைகிறது. அப்போது அங்கிருந்த நத்தைக் கூட்டில் ஒழிகிறான். மறுநாள் அவ்வழியால் வந்தவர்களிடம் உதவிபெற்று அவர்களுக்கு தான் உதவி செய்வதாகக் கூறுகிறான் குள்ளன். அவர்கள் திருடர்கள். எனவே தனவந்தரின் வீட்டுக்கு குள்ளனை அழைத்துச் சென்றாலும் வேலைக்காரன் கண்காணிப்பதைக் கண்டு திருடர்கள் ஓடிவிடுகிறார்கள். குள்ளன் அங்கிருக்கும் வைக்கோல் பண்ணையில் நுழைகிறான். பசுவுக்கு சாப்பாடு கொடுக்கப்படும் வைக்கோலுடன் குள்ளன் பசுவின் வயிற்றிற்குள் செல்கிறான். பசுவின் வயிற்றுக்குள் இருந்து குள்ளன் பேசுவதை பசுதான் பேசுகிறது என்று நினைத்து அதிசயித்தவர்கள் பசுவை மிருக வைத்தியரிடம் காட்டுகிறார்கள். அடுத்தநாள் பசுவின் சாணியுடன் குள்ளன் வெளியேறி அவ்வூரிலிருந்து தனது ஊர்வழியாகச் செல்லும் மாட்டு வண்டியில் ஏறிக்கொள்கின்றான். அவனது வீடு அமைந்திருக்கும் இடம் வந்ததும் சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பெற்றோருடன் சேர்ந்து கொள்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதை வர்ணச் சித்திரங்களை உள்ளடக்கி சிறுவர்கள் மகிழ்வடையும் வண்ணம் அமையப் பெற்றிருக்கிறது. இன்னுமின்னும் சிறந்த நூல்களை வெளியிட வேண்டுமென்று நூலாசிரியரை வாழ்த்துகிறோம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - குள்ளன் (சிறுவர் கதை)&lt;br /&gt;நூலாசரியர் - கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்&lt;br /&gt;முகவரி - 460/16 அடுவாவலவத்த, பெலிகம்மன, மாவனெல்ல.&lt;br /&gt;தொலைபேசி - 0773 706374 &lt;br /&gt;விலை - 100 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-5494427659307392245?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/5494427659307392245/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_8644.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/5494427659307392245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/5494427659307392245'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_8644.html' title='சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/---Iz0B0jjvw/TyJm7jQkymI/AAAAAAAAAQg/hmNQoWt8VOw/s72-c/Kullan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-1150886127851113296</id><published>2012-01-18T05:33:00.000-08:00</published><updated>2012-01-27T01:02:15.550-08:00</updated><title type='text'>சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ygizLK8LCQY/TyJn-HK9cYI/AAAAAAAAAQs/D7dAv8FwW_s/s1600/Bale%2BBale.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 189px; height: 275px;" src="http://2.bp.blogspot.com/-ygizLK8LCQY/TyJn-HK9cYI/AAAAAAAAAQs/D7dAv8FwW_s/s320/Bale%2BBale.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702234394979037570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்' என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டிக் கரணமடித்த குண்டு பயில்வான் என்ற கதையில் இரு எலி நண்பர்கள் பற்றியும், அவை குண்டு பயில்வான் ஒருவனுக்கு செய்யும் அட்டகாசங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. பயில்வானின் தோற்றத்தையும், பரபரப்பையும் கண்டு கேலியாக கதைக்கும் எலிகளை கல்லால் அடிக்கிறான் பயில்வான். அவன் கயிற்றில் ஏறி சர்க்கஸ் செய்யும்போது எலி தன் கூரிய பற்களால் கயிற்றை கடித்துவிட கயிறு அறுந்து பயில்வான் விழுகிறான் என்றவாறு இக்கதை அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பலே பலே வைத்தியர் என்ற கதையில் வரும் அமைச்சரவை வைத்தயர் மிகவும் புத்திக்கூர்மை உள்ளவர். சதாவும் சாப்பிட்டுவிட்டு உறங்கும் மன்னன், உடல் பருத்து அலங்கோலமாகிறான். அவன் தனது உடற் கட்டமைப்பை சீராக வைத்துக்கொள்வதற்கான மருந்தை வைத்தியரிடம் கேட்கிறான். அதற்கு உடற்பயிற்சி அவசியம் என்று சொல்கிறான் வைத்தியன். மன்னனுக்கு அதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. இறுதியில் மன்னன் உடற்பயிற்சி செய்வதற்காக என்று கூறி பூங்காவிற்குச் செல்கிறான். பூங்காவில் பெரிய நாய் ஒன்று மன்னனை நோக்கி வருகிறது. பயந்த மன்னன் பூங்காவைச் சுற்றிச்சுற்றி ஓடுகிறான். வழக்கமாக இந்த நாய்த் தொல்லை நிகழ்கிறது. இதற்குக் காரணம் வைத்தியன் என்று அறிந்து மன்னன் கோபப்படுகிறான். ஆனாலும் மன்னனின் உடல் இளைப்பதற்காகவே இவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்று வைத்தியன் கூறியதும் மன்னன் மகிழ்கிறான். அன்று முதல் அளவான சாப்பாடும், உடற் பயிற்சியும் என்று கடைப்பிடித்து அழகாக வாழ்வதுடன் நாடு முழவதும் தேகப்பயிற்சி நிலையங்களையும் நிறுவுகிறான். மனிதனுக்கு ஓய்வு, சாப்பாடு, தூக்கம் போன்றவை எவ்வளவு அவசியமோ அதே போன்று உடற் பயிற்சியும், அளவான ஆகாரமும் அவசியம் என்ற அறிவுரை இந்தக் கதையினூடாக சொல்லப்படுகிறது. இந்த அறிவுரை சிறுவர்களுக்கு மட்டுமானதல்ல. அனைவருக்கும் உரியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டிதரின் பரலோக யாத்திரை என்ற கதை சுவாரஷ்யமானது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்து அலைவோருக்கான சரியான பாடம் இந்தக் கதை. அதில் பண்டிதர் ஒருவரும் படகோட்டியும் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தனது அறிவுத்திறனை படகுக்காரனிடம் பீற்றிக் கொள்வதற்காக ஷசாஸ்திரங்கள் படித்திருக்கிறாயா? புராணங்கள் தெரியுமா? எழுதப்படிக்கத் தெரியுமா| என்று கேட்கிறார் பண்டிதர். படகோட்டி எதற்கும் தெரியாது என்கிறான். முகம் சுளித்த பண்டிதர் 'உன் வாழ்க்கையின் முக்கால் பாகமே தொலைந்துவிட்டது' என்;கிறார். காற்று பலமாக அடிக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து படகு கவிழப் பார்க்கிறது. படகோட்டி பண்டிதரைப் பார்த்துக் கேட்கிறான். ஷசாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?| என்று. பண்டிதருக்கு நீச்சல் தெரியாது. படகோட்டி சொல்கிறான் 'ஐயோ சாமி உங்கள் முழு ஆயுசும் இன்றோடு தொலைந்தது'.&lt;br /&gt;&lt;br /&gt;இன்பமும் துன்பமும் என்ற கதை படிப்பினைக்குரிய கதையாகும். ஒரு இளைஞனும், வயோதிபரும் காட்டு வழியாக பயணம் செய்கின்றனர். நீண்ட தூரம் அவ்வாறு பயணம் செய்ததால் இருவரும் நண்பர்களாகின்றனர்.  இப்படி சென்று கொண்டிருக்கையில் இளைஞனுக்கு ஒரு பொதி கிடைக்கிறது. அதில் தங்கங்களும் வைரங்களும் காணப்படுகின்றன. எனினும் தனக்கு அவ்வாறானதொரு பொதி கிடைத்ததாக அவன் முதியவரிடம் காட்டிக் கொள்வில்லை. கொஞ்ச தூரம் சென்றதும் அது பற்றி முதியவர் விசாரிக்கிறார். இளைஞன் பதில் சொல்லவில்லை. முதியவர் மீண்டும் குடைகிறார். 'நாம் ஒன்றாக பயணிக்கும்போது இன்பமோ துன்பமோ சமமமாகப் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்' என்கிறார். அதைக்கேட்ட இளைஞன் கிழவரை நக்கலாகப் பேசிவிட்டு இந்தப் பையில் என்ன இருந்தால் உங்களுக்கென்ன? அதைக் கண்டெடுத்தவன் நான். எனக்குத்தான் சொந்தம் என்று முகத்திலடித்தாற்போல் சொல்கிறான். முதியவர் எதுவும் பேசவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சற்று தூரம் நடந்திருப்பார்கள். திடீரென குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்கிறது. அரண்மனை நகைகள் களவு போய்விட்டன. யாரிடமிருக்கிறதோ அவருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்ற அறிவித்தலும் கேட்கிறது. கலக்கமடைந்த இளைஞன் முதியரைப் பார்க்கிறான். 'நமக்கு தண்டனை கிடைக்கும்' என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதியவர் அதற்கு நிதானமாக, 'நீதான் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் நான் காணவில்லை. நீதான் கண்டாய். எடுத்தாய். அதனால் தண்டனை உனக்கு மட்டும்தான்' என்று பதிலளிக்கிறார்.&lt;br /&gt;திகைத்து நின்ற வாலிபனை அரண்மனை சேவகர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். முதியவர் தனியாகப்  பயணத்தைத் தொடர்ந்தார் என்று நிறைவடைந்திருக்கும் இக்கதையானது தனது சந்தோஷத்தில் சேர்த்துக் கொள்ளாமல், கஷ்டத்தில் மாத்திரம் மாட்டிவிடும் நண்பர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற படிப்பினையையும், மூத்தோர் சொல் கேட்க வேண்டும் என்ற அறிவுரையையும் சொல்லி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு மாணவர்கள் கட்டாயம் படித்து பயன்பெற வேண்டிய நூலாக அமைந்திருக்கிறது கே.விஜயனின் பலே பலே வைத்தியர் என்ற இந்த சிறுவர் நூல். சிறுவர்களுக்கு கூறப்படும் புத்திமதிகள் வெறும் போதனைகளாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கே. விஜயன் அவர்கள், தான் சொல்லவந்த அறிவுரைகளை சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் பதிய வைக்கும் வண்ணம் கதைகள் அனைத்தையும் சித்திரங்களுடன் சொல்லியிருக்கும் பாங்கு சிறப்பம்சமாகும். இன்னுமின்னும் பல நூல்களை கே. விஜயன் அவர்கள் வெளியிட வேண்டுமென்பதே எங்கள் எல்லோரதும் பேரவா. அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - பலே பலே வைத்தியர்; (சிறுவர் கதைகள்)&lt;br /&gt;நூலாசரியர் - கலாபூஷணம் கே. விஜயன்&lt;br /&gt;டிவளியீடு - வீ.ஐ. புறமோ பதிப்பகம்&lt;br /&gt;தொலைபேசி - 011 455 1098 &lt;br /&gt;விலை - 200 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-1150886127851113296?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/1150886127851113296/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1150886127851113296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1150886127851113296'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post_18.html' title='சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ygizLK8LCQY/TyJn-HK9cYI/AAAAAAAAAQs/D7dAv8FwW_s/s72-c/Bale%2BBale.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-1130835480370393843</id><published>2012-01-18T05:32:00.000-08:00</published><updated>2012-01-27T01:05:14.532-08:00</updated><title type='text'>யதார்த்த வாழ்வியலை சித்தரித்து நிற்கும் முதுசம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;யதார்த்த வாழ்வியலை சித்தரித்து நிற்கும் முதுசம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார். திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-0stsCdcQhmE/TyJoorzLL_I/AAAAAAAAARE/Glp9FJiPejs/s1600/TS.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-0stsCdcQhmE/TyJoorzLL_I/AAAAAAAAARE/Glp9FJiPejs/s320/TS.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702235126365892594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனது படைப்புக்கள் எல்லா மட்டத்தில் உள்ளோரையும் சென்றடைய வேண்டும் என்ற நன்நோக்கத்தில் இலகுவான மொழிநடையைப் பிரயோகித்திருக்கிறார். உலகம் இன்று மிகவும் பயங்கரமானதாக மாறியிருக்கிறது. நல்லவர் யார், கெட்டவர் யார் என்று அறிய முடியாதளவுக்கு மனிதர்கள் முகமூடியை அணிந்து எம்மத்தயில் உலா வருகின்றனர். இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் மூலம் திரு. தம்புசிவா அவர்கள் அத்தகைய மனிதர்களின் மூகமூடிகளைக் கிழித்தெறிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வியலின் யதார்த்தமான நிலைப்பாடுகளை இத்தொகுதியிலுள்ள கதைகள் எடுத்தியம்புகின்றன. வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், ஆணாதிக்கத்தினரின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் குடும்ப சீரழிவுகள், முறைகேடான தொடர்புகளால் ஏற்படும் சமூக நோய்கள் என்பவற்றுடன் காதலை சொல்லும் சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் வேதனைகளால் என்ற சிறுகதையானது வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை சொல்கின்றது. ஏமாற்றப்பட்ட வேதனைகளில் துடிக்கும் மூவினத்தையும் சேர்ந்த அபலைப் பெண்கள் ஆழுதுகொண்டிருக்கின்றனர். அப்போது அந்தக் கூட்டத்தில் இருக்கும் கமலா என்ற பெண்ணை ஒருவன் அடையாளம் காண்கிறான். அவன் கமலாவின் முன்னைய காதலன் முகுந்தன். அவன் அவளை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். முகுந்தன் தற்பேர்து ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வளித்திருப்பதாக அறிகிறாள் கமலா. 1990ல் நேவிக்காரர்கள் தமிழர்களுக்கெதிராக நடாத்திய யுத்தத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, கணவனின் குடிகார புத்தியினால் அவன் இன்னொருத்தியுடன் சென்றுவிட தனிமரமாக இருக்கின்றாள் கமலா. &lt;br /&gt;&lt;br /&gt;அச்சந்தர்ப்பத்தில் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி வெளிநாட்டுக்கு பயணமானவள்தான் கமலா. எனினும் ஏஜன்சியில் தங்க வைத்து அங்கு வரும் வியாபாரியினால் அவள் பெண்மையை இழக்கிறாள். வெளிநாடு சென்றாலும் அந்த வீட்டு எஜமானும் அவளை பலாத்காரம் பண்ணுகிறான். வீட்டு எஜமானியோ வேலை வாங்குவதில் வல்லவள். சம்பளத்தைக் கொடுக்காமல் நித்தமும் சித்திரவதை செய்வாள். ஒருவாறு இலங்கைத் தூதுவராலயத்தில் தஞ்சமடைகிறாள். சில தினங்கள் கழிந்து தற்போது முகுந்தனுடன் அவனது வீட்டுக்கு பயணமாகிறாள். அங்கு முகுந்தனின் மனைவி இவள்தான் கமலா என்று அறியாதபோதும் அன்பாக அவளை வரவேற்று உபசரித்த பின் முகுந்தனைப் பற்றி இவ்வாறு சொல்கிறாள். 'எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. இவர், தான் விரும்பிய கமலா என்ற பெண் கிடைக்கவில்லை என்ற வேதனையில் தனக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்'. இந்த வார்த்தைகள் அவன் கமலா மீதுகொண்ட புனித காதலை சித்தரிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று சொத்து சுகங்களுக்காக பெற்றவர்களையும், சகோதரர்களையும் பகைத்து அடிதடிகளில் இறங்கி சீரழிந்த குடும்பங்கள் பல காணப்படுகின்றன. அதற்கான முக்கிய காரணம் பேராசை. முதுசம் என்ற இந்தக் கதையும் பேராசைப் பிடித்து அலையும் ஒரு தகப்பனைப் பற்றி இயம்பியுள்ளது. தனது சகோதரியை ஏமாற்றி அவளது காணியை சொந்தமாக்குகின்றார் முருகேசு. தனது இரு பெண் பிள்ளைகளையும் முதுசம் உள்ளவனுக்குத்தான் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருகின்றார். இப்படியிருக்க முருகேசுவின் மூத்த மகள் அவரது சகோதரியின் மகனான செல்வம் என்பவனை திருமணம் முடிக்கிறாள். இரண்டாவது மகளுக்கத்தானும் முதுசக்கார மாப்பிள்ளை கிடைக்கும் என்ற நினைப்பு முருகேசருக்கு. இறுதியில் இளையவளும் கராஜ் வைத்திருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகின்றாள். முதுசத்தினால் பிள்ளைகளை இழந்து நிற்பவரின் கதைதான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ வைத்த தெய்வம் என்ற கதை தாயன்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. கற்பகம் என்ற அந்தத் தாய் சிறுவயது முதலே மிகவும் கஷ்டங்களை அனுபவித்தவள். அவளது சிற்றன்னை ஆரம்பத்தில் கற்பகத்துடன் அன்பாக இருந்தாலும் அவளுக்கென்று பிள்ளைகள் பிறந்த பிறகு வேறுபாட்டை காட்டத் துவங்கினாள். அந்த துன்பங்களை சகிக்க முடியாமல் கற்பகத்தின் தாய்மாமன் அவளை அழைத்துவந்து தனது வீட்டில் இருக்க வைத்தார். அதை அவரது மனைவி விரும்பாததால் கற்பகம் அன்பு இலத்தில் சேர்க்கப்பட்டாள். அவள் வளர்ந்து பெரியவளானதும் கணேசு என்பவன் அவளை திருமணம் முடித்தான். அந்த குடிகார கணவனுடன் மிகவும் வறுiமைப்பாட்டுக்குள் தன் ஜீவிதத்தை கடத்தினாள் கற்பகம். அவரும் இறந்து போக, கஷ்டப்பட்டு உழைத்து தனது மகன் அற்புதனை படிப்பித்து பட்டதாரியாக்கிவிட்டாள் அவள். &lt;br /&gt;&lt;br /&gt;அற்புதனின் மனைவி சுமதி. அவளது சகோதரர்கள் வெளிநாட்டில் நல்ல வசதியுடன் இருப்பதால் தாங்களும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நச்சரிப்பை கொடுத்த வண்ணமிருக்கிறாள். மனமுடைந்துபோன அவன் அம்மாவான கற்பகத்தை தனியே விட்டுவிட்டு எவ்வாறு போவது என்று சிந்திக்கிறான். கற்பகத்துக்கும் தன் மகனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. ஆனாலும் மருமகளுடைய பிடிவாதத்தைக் கண்டு அவனை அவளுடன் போகும்படி சொல்கிறாள் தாய். அதனால் கோபப்பட்ட அற்புதன் தாயிடம் 'அம்மா அவள் விசரி. வெளிநாட்டு மோகத்தில் கத்துகிறாள். நீங்கள் பேசாமல் இருங்கோ. நான் உங்களை தனியவிட்டு ஒரு இடமும் போகமாட்டன். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதேங்கோ' என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் அம்மா வற்புறுத்தவே மனமில்லாமல் மனைவியுடன் புறப்பட ஆயத்தமகின்றான். புறப்பட வேண்டிய நாளும் வந்துவிட்டது. வாசலுக்கு வந்த அற்புதன் கண்ணீருடன் தாயைத் திரும்பிப் பார்க்கிறான். அவள் அங்கே விழுந்து கிடக்கிறாள். மூச்சடங்கி சொற்ப நேரமே ஆகியிருந்தது. தனது கஷ்டத்துக்காக மகனது வாழ்வு பாழ்பட்டு விடக்கூடாது என்று நினைத்தது அந்த தாயுள்ளம். ஆனாலும் அவனது பிரிவைத் தாங்க முடியாமல் அவள் இதயம் தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வகுத்த வியூகம் என்ற கதை துரோகத்தை மையப்படுத்தி எழுதுப்பட்டுள்ளது. பாலா என்பவன் தனது தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்து அறை தேடுகிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவராஜன் எனும் நண்பன் அவனது அறையில் பாலாவைத் தங்க வைக்கின்றான். வசதிகள் குறைந்த அந்த அறையில் தங்குகிறான் பாலா. சிறிது நாட்களுக்குப்பின் பல நிபந்தனைகளுடன் ஒரு வாடகை அறை கிடைக்கிறது. ஏற்கனவே காசு கட்டியிருப்பதால் ஒருமாதம் கழித்து புது அறைக்கு தானும் வருவதாக தேவராஜன் சொல்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;பாலாவின் அறையிலிருந்து எதிர்புறமாக இருக்கும் வீட்டில் ஒரு அழகான யுவதி இருக்கிறாள். அவளை தினமும் பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும், தேவராஜன் வந்துவிட்டால் அவ்வாறு அந்தப் பெண்ணுடன் பழக முடியாது என்பதால் பாலா பொய் கூறி தேவராஜன் அந்த அறைக்கு வருவதைத் தடுக்கின்றான். அப்படியிருக்க வீட்டுக்காரர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் மூத்த மகள் பாலாவுடன் சகஜமாகப் பழகுகின்றாள். அவள் தனது காதலன் வருவதால் இந்த அறையை தமக்கு தருமாறு பாலாவிடம் கேட்க பாலாவும் அறையை கொடுத்துவிட்டு வெளியே காவல் இருக்கிறான். நாழிகை கழிந்து வீட்டுக்கார்கள் வருகிறார்கள். பயந்துபோன பாலா கதவைத் தட்டி அவர்களை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் கதவு தானாகவே திறந்து கிடக்க கட்டிலில் அருவருப்பான கோலத்துடன் அந்தப் பெண் (மூத்த மகள்) மாத்திரம் கிடக்கிறாள். அவளை எழுப்பச் சென்ற பாலாவை தனக்கு மேலால் இழுத்து விடுகிறாள் அவள். இதை அவளது பெற்றோர் பார்த்துவிட பீதியில் பாலாவுக்கு சர்வாங்கமும் ஒடுங்குகின்றது. உடனே பாலா எதிர்பாராத தருணத்தில் அவள் அபாண்டமாக கீழுள்ளவாறு பலியை சுமத்திவிடுகிறாள்;.&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா நான் மாட்டன் மாட்டன் என்று சொல்ல, இவர்தான் என்னை தூக்கிவந்து கட்டிலில் போட்டு இப்படிச் செய்து போட்டார்.'&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வீட்டு பெண்ணை சைட் அடிப்பதற்காக நண்பனை ஏமாற்றிய வியூகம் தன்னைப் பெரிய ஆபத்தில் மாட்டிவிட்டதை உணர்ந்த பாலா கனத்த மனதுடன் நண்பனை தேடிச் செல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சாயமிழந்து போன வாழ்க்கையையும், நிராதரவாக வாழும் பெண்கள் பற்றியும், குடிகார கணவன்மார் பற்றியும் அலசி ஆராய்ந்து நிதர்சனமாக விடயங்களை வெளிக்காட்டி நிற்கின்றன இந்தக் கதைகள். நூலாசிரியர் திரு. தம்பு சிவா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - முதுசம் (சிறுகதைகள்)&lt;br /&gt;நூலாசரியர் - திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா)&lt;br /&gt;வெளியீடு - சேமமடு பதிப்பகம்&lt;br /&gt;தொலைபேசி - 011 4902406, 0718 676482&lt;br /&gt;விலை - 280 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-1130835480370393843?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/1130835480370393843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1130835480370393843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1130835480370393843'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2012/01/blog-post.html' title='யதார்த்த வாழ்வியலை சித்தரித்து நிற்கும் முதுசம்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-0stsCdcQhmE/TyJoorzLL_I/AAAAAAAAARE/Glp9FJiPejs/s72-c/TS.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-8123900848447170427</id><published>2011-12-14T02:46:00.000-08:00</published><updated>2011-12-14T02:50:04.256-08:00</updated><title type='text'>கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இலக்கியத்தினூடாக நன்கறியப்பட்ட சிட்னி மாகஸ் டயஸ் என்பவரின் 'முல்லைத்தீவ் ஸீயா' என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே முல்லைத்தீவு தாத்தா என்ற புத்திளைஞர் நாவலாகும். யுத்த காலத்தில் நிகழ்ந்த மனதுக்கு கஷ்டமான நிகழ்வுகளை உள்ளடக்கி இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. சிரேஷ்ட எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் இந்நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார். தோதன்ன வெளியீடாக 119 பக்கங்களில் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் மூத்த எழுத்தாளர் மல்லிகை ஜீவா அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-MTg2EHfULUg/Tuh-uBIDa_I/AAAAAAAAAPg/PiuwZ3m0nOk/s1600/Mullaiteevu%2B-%2BKamal%2Bsir.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 169px; height: 262px;" src="http://2.bp.blogspot.com/-MTg2EHfULUg/Tuh-uBIDa_I/AAAAAAAAAPg/PiuwZ3m0nOk/s320/Mullaiteevu%2B-%2BKamal%2Bsir.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685933858596547570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் நன்கு பரிச்சயப்பட்ட ஓர் எழுத்தாளர். அண்மையில் அவரது மணிவிழா நிகழ்வும் இடம்பெற்றது. சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர் தென்னிலங்கையின் எழுத்தாளர் பட்டியலில் மிகவும் முக்கியமானவர். சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் ஆகியவற்றை தந்துள்ளதுடன் அவரது ஆளுமையின் வெளிப்பாடாக மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழுலகுக்கு அளித்து வருகின்றார். அதனூடாக சகோதர இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை எமக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இலக்கியத்திற்கூடாக சமாதானப் பாலம் அமைக்க எடுத்ததொரு விளைவே முல்லைத்தீவு தாத்தாவாகும். நாலைந்து தசாப்தங்களுக்குள் நமது நாட்டில் நடந்த விடயங்கள் தொடர்பாக எமது சிறுவர் பரம்பரைக்கு போதிய விளக்கமில்லை. விளைவை மட்டுமன்றி அதற்கான காரணத்தையும் சரியாக அறிந்துகொள்ளும் பட்சத்தில்தான் அவர்களால் சமாதானத்திற்காக முறையான பங்களிப்பைச் செய்ய முடியும். முல்லைத்தீவு தாத்தாவினூடாக அதற்கான சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்கிறார் சிட்னி மாகஸ் டயஸ் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸிது, ஹிருனி என்ற சிறுவர்கள் பாடசாலைவிட்டு வந்து படித்துக்கொண்டிருக்கும்போது 'மிஸ்டர் சுமனசேகர' என்றவாறு மறைந்த அவர்களது தாத்தாவின் பெயரை அழைத்தபடி முதியவரொருவர் வருகிறார். இஸிது உடனே பாட்டியிடம் சென்று கூற, அவர் வந்து பார்த்தபோது அது பரராஜசிங்கம் என்று அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தை அடைகிறார். காரணம் பரராஜசிங்கம் என்பவர் அவரது கணவருடன் ரெயில்வே திணைக்களத்தில் ஒன்றாக பணியாற்றியவர். மேலும் இனக் கலவரத்தின்போது பரராஜசிங்கம் குடும்பத்தினரை காப்பாற்றியவர் சுமனசேகர ஆவார். இஸிது, ஹிருனி விழித்தபடி பார்த்திருக்க பாட்டி அவரை அறிமுகம் செய்கிறார். அப்படி அறிமுகம் செய்யப்படுபவர் தான் நாவலின் கதாநாயகனான முல்லைத்தீவு தாத்தா.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தில் சுமனசேகரவின் மகன் இறந்துவிட பரராஜசிங்கத்தின் மகனும் காணாமல் போய்விடுகிறார். இவ்விருவரையும் நினைவு கூர்ந்து முதியவர்கள் படும் வேதனை வாசகர்களுக்கும் மனதில் நெருடலை ஏற்படுத்துகிறது. காரணம் உயிருக்குப் போராடிய காலத்தில் முல்லைத்தீவு தாத்தா அவரது மற்ற பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு தற்போது தனிமரமாக இலங்கையில் வசிக்கிறார். நோயினாலும், முதுமையினாலும் அவர் உடல் தள்ளாடுகிறது. சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் தமது வீட்டுக்கு வந்துள்ள தாத்தாவை இஸிதுவின் அம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் அடையாளம் கண்டு விசாரித்து அன்பாக உபசரிக்கிறார். பனங்கருப்பட்டி, பாணி, ஒடியல் போன்ற உணவு வகைகள் பற்றி இவ்விடத்தில் கூறப்பட்டிருப்பதினூடாக தமிழ் மக்களின் வாழ்வியலையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இனங்களுக்கிடையிலேயான யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை முல்லைத்தீவு தாத்தா சிறுவர்களுக்கு விளக்குகிறார். அவ்வாறு விளக்குவதனால் இனி ஒரு காலமும் யுத்த பூமியொன்று உருவாகிவிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார். பின்வரும் விடயங்களின் அடிப்படையில் சில கருத்துக்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான இடங்களில் தமிழ் மக்கள் சமமாக நடாத்தப்ப‌டவில்லை. இதன் காரணமாக தமிழ் தலைவர்கள் வெவ்வேறு உரிமைகளைக் கேட்க முனைந்தனர். தமிழ் மக்களையும் அவர்கள் சமமான பிரஜைகளாக காண விரும்பினர். தனிநாடு பற்றிய கருத்து அவர்களுக்கு இருக்கவில்லை. இருந்தும் அவர்களுக்கு வன்முறையே பரிசாகக் கிடைத்தது. இதனால் எங்கள் இளைஞர்கள் விரக்திக்குள்ளாகி இருந்தனர். இருந்தும் இதற்கு மத்தியில் எங்களைப் போன்ற தமிழ் மக்கள் உங்களது தாத்தா, பாட்டி பேன்ற நல்ல சிங்கள மக்களுடன் ஒற்றுமையாகவே வாழ்ந்தோம்...&lt;br /&gt;&lt;br /&gt;1978ல் யாழ்ப்பாண நகரத்தில் நடைபெற்ற சங்கீத கச்சேரியின் போதும், 1983ல் நடைபெற்ற அதே போன்றதொரு நிகழ்வின் போதும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் தாக்குதல்கள் நடைபெற்றன. அது பரவி பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. மேலும் இச் சந்தர்ப்பத்தில் நாடு முழுவதிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டும், அவர்களது உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டும் வந்தன. இந்த மாதம் தான் கறுப்பு ஜூலை எனப்படுகிறது என்ற விடயமும் இவ்வாறான உரையாடல்களின் மூலமாக அறியக்கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தகல்களை அறியும் வகையில் கீழுள்ள வரிகள் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற சிலர் எங்கள் இதயம் போன்ற பொது நூல் நிலைய‌த்தையும் முற்றுமுழுதாக எரித்து சாம்பலாக்கினார்கள். இயக்கங்களாக ஒன்று சேர்ந்திருந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது இதன் பின்னர்தான். இவ்வளவு காலமாக அடி உதைபட்டது போதுமென்று சிந்திக்கத் தலைப்பட்டனர். சிறுபான்மையினர் என்று தமிழ் மக்களை இரண்டாம் பட்சமாக நடாத்தியதை அவர்கள விரும்பவில்லை. அத்தோடு யுத்தம் ஆரம்பமாகியது. தமிழ் மக்க‌ளுக்கு தனியான நாடொன்றை உருவாக்கிக்கொள்ளும் அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. வடக்கு கிழக்கு உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியை தமிழ் ஈழம் என்ற நாடாக அமைக்க விரும்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றவாறு கடந்த காலத்தில் தாங்கள் அனுபவித்த கோரங்களை தாத்தா கூறுகிறார். மேலும் எதிர்காலத்தில் எவரும் பிரிவினைப்பட்டு விடாமல் அழகிய இலங்கை உருவாக வேண்டும் என்று எண்ணி வருந்துகிறார் முல்லைத்தீவு தாத்தா. ஓரிரு நாள் கழித்து சுமனசேகரவின் மூத்த மகனும் தாத்தாவைப் பார்க்க குடும்பம் சகிதம் வந்து நலம் விசாரிக்கையில் அவரது மகன், மகளைப் பற்றியும் விசாரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பரராஜசிங்கத்திடமிருந்து தொலைபேசி இலக்கத்தை வாங்கி எஸ்.எம்.எஸ் பண்ணி ஸ்கைப் முகவரியைப் பெறும் சுமனசேகரவின் மகன் தமது பால்ய கால வாழ்க்கையில் மனம் லயிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பிலிருந்து வந்த சுமனசேகரவின் மூத்த மகன், பரராஜசிங்கம் அங்கிளுக்காக தயிர் கொண்டு வந்திருந்தார். அனைவரும் ஒன்றாக மேசையில் இருந்து சாப்பிடுகிறார்கள். பிள்ளைகளும் தாத்தாவைப்போல சோற்றில் தயிறு, வாழைப்பழம் ஆகியவற்றை பிசைந்து சாப்பிடுகிறார்கள். தாத்தாவுக்காக அந்த சிங்கள இனச் சகோதரர்கள் சைவ உணவை சமைத்தாக கூறப்பட்டிருப்பதானது ஒற்றுமையை இயம்பி நிற்கிறது. இவ்வாறான சம்பிர‌தாயங்களை அனைத்து தரப்பினரும் பேணுவதனால் நாட்டில் சந்தோஷம் பொங்கி சமாதானம் நிகழும். இனிவரும் காலங்கள் இலங்கை தேசத்தில் நறுமணப் பூக்களை மலரச் செய்ய வேண்டும். இதுவே ஒட்டுமொத்த இலங்கையரின் கனவும், ஆசையுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோதன்ன வெளியீட்டகத்தினால் பல சிங்கள நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கபட்டிருக்கின்றது. இது சகோதர இனத்துக்கு ஒரு பா(ப)லமாக அமைந்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். திக்வல்லை கமால் அவர்களின் அயராத உழைப்பின் வடிவமாக திகழும் இந்த நாவல் பாலித ஜனரஞ்சனவின் தத்ரூபமான அட்டைப் படத்துடனும், சித்திரங்களுடனும் சிறப்பு பெறுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - முல்லைத்தீவு தாத்தா&lt;br /&gt;மொழிபெயர்ப்பாளர் - திக்குவல்லை கமால்&lt;br /&gt;வெளியீடு - தோதன்ன பதிப்பகம்&lt;br /&gt;தொலைபேசி - 032 2263446&lt;br /&gt;விலை - 200 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-8123900848447170427?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/8123900848447170427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/8123900848447170427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/8123900848447170427'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/12/blog-post.html' title='கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-MTg2EHfULUg/Tuh-uBIDa_I/AAAAAAAAAPg/PiuwZ3m0nOk/s72-c/Mullaiteevu%2B-%2BKamal%2Bsir.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-8877653551343814539</id><published>2011-10-18T03:29:00.000-07:00</published><updated>2011-10-18T03:33:45.698-07:00</updated><title type='text'>ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த படைப்பாளிகள் எமக்கொரு வழிகாட்டி. அவர்களின் படைப்புக்களைப் படித்துத்தான் இளையவர்கள் முன்னேற்றமடைய முடியும். அத்தகைய மூத்த படைப்பாளியும், முஸ்லிம் பெண் எழுத்தாளருமாகிய திருமதி சுலைமா சமி இக்பால் அவர்களின் நாவல் இந்த இரசனைக் குறிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் துறையில் நன்கறியப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் முக்கியமானவர். நாவல் எழுத விரும்புபவர்கள் இத்தகையவர்களின் படைப்புக்களைப் பார்த்து பயனடைய வேண்டும். இவர் ஏற்கனவே வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசை மாறிய தீர்மானங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார். ஊற்றை மறந்த நதிகள் என்ற நாவல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 108 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-b_Hq5KG3I7A/Tp1VxYBUhtI/AAAAAAAAAOM/PzmlQ-B-vpk/s1600/Sulaima.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-b_Hq5KG3I7A/Tp1VxYBUhtI/AAAAAAAAAOM/PzmlQ-B-vpk/s320/Sulaima.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5664778213051893458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல் சர்வதேச ரீதியில் பரிசையும், அரச சாகத்திய விழாவின்போது 2009ல் வெளியான சிறந்த நூலுக்கான சான்றிதழையும் பெற்றிருப்பதுடன் புதிய சிறகுகள் அமைப்பின் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை காலமாக சிறுகதைகளையே எழுதி வந்த கதாசிரியை கலாஜோதி சுலைமா சமி இக்பால் அவர்களின் முதல் முயற்சியே இந்த நாவல். இந்த முதல் முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிட்டியிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலில் அபுல்ஹசன் - மைமூனா தம்பதியரின் மகள் ஆயிஷாவை சுற்றி படர்கிறது இந்தக் கதையம்சம்.  அவளைப் பெண்பார்க்க வரும் தொடக்கத்திலருந்து இறுதிவரை நாவல் தொடர்கிறது. நாவல் முழுவதிலும் தென்பகுதி முஸ்லிம்களின் பேச்சுமொழி விரவிக் கிடக்கிறது.மண்வாசனை மணக்கிறது. மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் அந்த பேச்சு மொழிகளில் லயித்தேன் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிஷாவுக்கு அன்ஸார் என்ற ஆண்மகளை திருமணம் பேசுகின்றார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். சம்பிரதாயபூர்வமான பேச்சுகளுக்குப் பிறகு ஆயிஷாவும் அன்ஸாரும் தனியாக பேச தத்தமது விருப்பத்தை வீட்டாரிடம் ஒப்புவிக்கிறார்கள். வீட்டாருக்கும் திருமணமே முடிந்துவிட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணப் பதிவு மாப்பிள்ளை வீட்டில் நடக்க ஏற்பாடாகின்றது. ஆதலால் பெண் வீட்டிலிருந்து சீதனப் பணத்துடன் பழங்கள், தீன் பண்டங்கள் என்பனவும் மாப்பிள்ளை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டில் அனைவருக்கும் பகல் சாப்பாடும் ஏற்பாடாகியிருக்கின்றது.பெண் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் கையளிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் வீட்டில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து திருமண அழைப்பிதழ்களைக் கொடுக்கவிருக்கும் பொழுது அந்த அசம்பாவிதம் நிகழ்கிறது. அன்ஸார் ஏற்கனவே திருமணமானவன் என்ற வதந்தியை அவனது ஊரிவிருந்து புடவை விற்க வரும் வியாபாரி மூலமாக கேள்விப்படுகின்றனர். ஆயிஷாவின் பெண் மனது தீயில் வேகிறது. யா அல்லாஹ் இந்த விஷயம் பொய்யா இருச்சோணும்... என்று அவள் இதயம் பிரார்த்திக்கிறது. அந்த பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதுபோல் விசாரிக்கச் சென்ற ஆயிஷாவின் சகோதரன் சந்தோஷப்பூ தூவுகிறான். அதாவது அதே ஊரில் அன்ஸார் என்ற பெயரில் இன்னொருவன் இருக்கிறான். திருமணமான அவனைப் பற்றித்தான் வியாபாரி தவறுதலாக கூறியிருக்கிறார். மீண்டும் அந்த வீட்டில் கல்யாண களை கட்டுகிறது. ஆரவாரம் பெருகுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இனிதாக திருமணமும் முடிந்துவிட்டது. தாம் எதிர்பார்த்தபடியே துணை அமைந்ததில் ஆயிஷாவும் அன்ஸாரும் இல்லற வாழ்க்கையில் இனிமையையே அனுபவித்தார்கள். திருமணமுடித்து ஆறு மாதங்கள் கடந்தும் ஆயிஷா கருத்தரிக்கவில்லை. அது அன்ஸாரின் மனதிலும் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்திவிடுகிறது. இருந்தும் அன்புள்ளம் கொண்ட அவன் பொறுமை காக்க ஆண்டொன்று கழிய ஆயிஷா கருவுற்றதற்கான அறிகுறி தெரிகிறது.  இறைவன் நியதியை தடுக்க யாருக்க முடியும்? அவளது கரு சிதைகிறது. இல்லற வாழ்விலும் ஊமையாக சில மனஸ்தாபங்கள் ஏற்பட அது வழிவகுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வருடங்கள் நகர்கின்றன. ஆயிஷா மீண்டும் கருவுறுகிறாள். அல்லாஹவின் கருணையால்; அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அம்ஜத் என்ற அந்த பிள்ளைக்கு ஐந்து வயதாகும் போது அம்னா என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் இனிமேல் குழந்தை கிடைத்தால் ஆயிஷாவின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவளது கருப்பை நீக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்ஸார் வெளிநாடு போகின்றான். காலம் தன்பாட்டில் கழிய அன்ஸாரின் சகோதரன் பாரிஸூக்கும் திருமணம் நிகழ்கிறது. இந்த கட்டத்திலிருந்துதான் கதையின் உச்ச கட்டத்தை சுலைமா சமி அவர்கள் நகர்த்தியிருக்கின்றார்கள். இதுவரை தென்றல் பரப்பிய ஆயிஷா - அன்ஸார் வாழ்வில் புயலை உருவாக்கிவிடுகின்றாள் பாரிஸின் மனைவி பஸ்லியா. &lt;br /&gt;&lt;br /&gt;அன்ஸாரின் வளமான வாழ்வைப் பார்த்து பொறாமைப்படும் அவள் அன்ஸாரின் வாழ்வில் தீய வழியிலொரு திருப்பத்தை ஏற்படுத்தத் துணிகிறாள். அத்துடன் கணவன் பாரிஸூடனும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று சண்டைப் பிடிக்கிறாள். தனது மாமியாரிடமும் ஆயிஷா சரியில்லாதவள் என்று கட்டுக்கதையைக் கூறி, அவர் மனதையும் மாற்றுகின்றாள். ஏதுமறியாத ஆயிஷா கணவனுடன் வெளிநாட்டில் சென்று வசிக்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்ஸார் குழந்தைகள் மேல் பிரியம் அதிகமுள்ளவன் என்பதால் அவன் மனதில் இரண்டாவது திருமணத்தை செய்துகொள்ளும் ஆசையை பஸ்லியா ஏற்படுத்திவிடுகிறாள். ஆயிஷாவின் சம்மதமில்லாமல் இது முடியாது என அன்ஸார் சொல்ல தான் கேட்டு சொல்வதாக சொல்கிறாள் பஸ்லியா. எனினும் ஆயிஷாவிடம் எதுவும் கேட்காமல் தனது  நரிக்குணத்தை அரங்கேற்றும் பஸ்லியா "பிள்ளைகளுக்கும், ஆயிஷாவினது குடும்பத்தினருக்கும் தெரியாமல் அன்ஸார் மனமுடிக்கலாம்" என ஆயிஷா கூறியதாக பஸ்லியா பொய்யுரைக்க, அன்ஸாரின் இரண்டாவது திருமணம் ஆயிஷாவுக்கு தெரியாமலேயே நிகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலவோட்டத்தில் அவள் உண்மையை அறிய "நீ சொன்னதால்தானே நான் முடிச்சேன்" என கூறுகிறான் அன்ஸார். பஸ்லியாவின் சதி என இருவருக்கும் விளங்கவில்லை. தன்னை ஏமாற்றி துரோகம் செய்ததாக புலம்பும் ஆயிஷா, அன்ஸாரை வெறுக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்ஸார் இரண்டாவதாக மணமுடித்த நிரோஷா அவனை விட மிகவும் வயது குறைந்தவள். தான் இத்தனை வருடம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த காசு, சொத்து அனைத்தையும் கண்மூடித்தனமான காதலால் நிரோஷாவின் பெயருக்கு எழுதி வைக்கிறான் அன்ஸார். இடையில் ஆயிஷாவுக்கு சீனி வியாதி கடுமையாகி கால் பாதம் வரை துண்டாடப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அவன் தனது அன்பு மனைவியையும், பிள்ளைகளையும் அடியோடு மறந்துவிட்டு, நிரோஷாவின் இளமையில் மூழ்கியிருக்கும் கட்டத்தில் அன்ஸார் மீது வாசகர்கள் அதீத வெறுப்படைவார்கள். பஸ்லியா மீதும் கோபம் கொள்வார்கள். பஸ்லியா போன்ற பலர் எம்மத்தியில் இன்று இருக்கிறார்கள் என்ற உண்மையை சுலைமா சமி இக்பால் அவரகள் நன்கு உணர்த்துகின்றார். தம்பதியரை, நண்பர்களை, காதலர்களை இவ்வாறு கோள் சொல்லி பிரிக்கும் பஸ்லியா போன்றவர்களுக்கு தண்டனை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனை இருக்கின்றது. இதையும் கதாசிரியர் சொல்லியிருக்கும் பாங்கில் வாசகர் மனம் அமைதியடைகிறது. நல்லதொரு குடும்பத்தை பிரித்துவிடும் பஸ்லியா தன்வினைத் தன்னைச்சுடும் என்று அறிய கொஞ்ச நாள் செல்கின்றது. அதாவது சதாவும் பாரிஸை குத்திக்காட்டும் அவள் தனது மச்சானான அன்ஸாரின் பணக்கார வாழ்வு பற்றி எடுத்துரைக்கிறாள். பாரிஸ் ஆயிஷாவைப் பற்றி நன்கறிந்தவன் என்பதால் ஆயிஷாவும், அன்ஸாரும் பிரியக் காரணம், தனது மனைவியே என உணர்ந்துவிடுகின்றான். பஸ்லியா எதிர்பாராத தருணமொன்றில் அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. சாராம்சமாக பஸ்லியாவுடன் வாழ்ந்ததில் அவனுக்கு நிம்மதியில்லை என்றும் தான் தொழிலுக்கு வந்த இடத்தில் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருககும் பாரிஸ், கணவனை வேறு பெண்ணுக்கு தாரை வார்க்கும் வேதனையை நீ ஆயிஷாவுக்கு கொடுத்தாய். நீயும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறேன் என்றவாறு கடிதத்தை நிறைவு செய்கிறான். பேரிடி தலையில் விழ ஆயிஷாவிடம் தொலைபேசியில் மன்னிப்பு கோருகிறாள் பஸ்லியா. எல்லாம் முடிய நிரோஷா தன் வயதுக்கேற்ற ஒருவனுடன் ஓடிப்போகிறாள். விரக்தியடையும் அன்ஸார் அவளைத் தேடிப்புறப்பட்ட வேகததில் விபத்துக்கு உட்பட்டு முழுக்காலையும் இழக்கிறான். சொத்தும் இல்லை. சொந்தமும் இல்லை. மனைவி, பிள்ளை, குடும்பம், மானம், மரியாதை எதுவுமில்லாமல் தனிமரமாக இருக்கும் அவன் எப்படியோ ஊருக்கு வருகின்றான். அவன் கோலத்தைப் பார்த்து அனைவருக்கும் தொண்டை அடைக்கிறது. அம்ஜத்தும் அம்னாவும் தந்தையை வெறுக்க, ஆயிஷா தன் கணவனை மீண்டும் ஏற்றுக்கொள்வதுதான் இறுதிக் கட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக அமைதியாக வாசித்து இந்தக் கதையில் கூறப்பட்ட விடயங்களை அவதானிக்க வேண்டும். சமூகத்தில் உலாவும் போலி முகங்களின் முகமூடியை கிழித்திருக்கிறார் ஆசிரியர். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூல் - ஊற்றை மறந்த நதிகள் (நாவல்)&lt;br /&gt;ஆசிரியர் - சுலைமா சமி இக்பால்&lt;br /&gt;முகவரி - 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, மாவனல்லை.&lt;br /&gt;தொலைபேசி - 035 2246494&lt;br /&gt;விலை - 200 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-8877653551343814539?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/8877653551343814539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/10/blog-post_4329.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/8877653551343814539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/8877653551343814539'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/10/blog-post_4329.html' title='ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-b_Hq5KG3I7A/Tp1VxYBUhtI/AAAAAAAAAOM/PzmlQ-B-vpk/s72-c/Sulaima.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-5723968252584889926</id><published>2011-10-18T03:14:00.001-07:00</published><updated>2012-03-13T03:15:48.325-07:00</updated><title type='text'>37ம் நம்பர் வீடு (நாவல்)</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;37ம் நம்பர் வீடு (நாவல்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் எமது மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்கள் தமது ஈமானை இழந்து பலவீனப்பட்டுப் போய் கிடக்கிறார்கள். அல்லாஹ் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை உலக வஸ்துக்களின் மீது வைத்து அல்லல் படுவதை அவதானிக்க முடிகிறது. சூனியம் என்ற வார்த்தையில் தமது சொத்து சுகங்களை இழந்து தவிக்கின்றவர்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருப்பது கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையவற்றிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை மீட்டெடுக்க இன்று பலர் தன்னாலான முயற்சிகளை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய ஊடகங்களும் தமது பங்களிப்பை பல்வகைப்பட்ட தன்மைகளில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலக்கியத் துறையினூடாகவும் ஓர் இஸ்லாமிய புரட்சியை நிகழ்த்தி வருகின்றார் எழுத்தாளர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள். ஒரு அபலையின் டயறி, இது ஒரு ராட்சஷியின் கதை, ரோஜாக்கூட்டம் ஆகிய நூல்களையும் இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விடயங்களை, இஸ்லாமிய விழுமியங்களை தனது நாவல்களினூடாக வெளிப்டுத்தும் இவர், சிங்கள மொழியில் கல்வி பயின்று தமிழில் புத்தக வெளியீடுகளை மேற்கொள்பர் என்பது வியக்கத்தகது.&lt;br /&gt;&lt;br /&gt;37ம் நம்பர் வீடு என்ற இவரது மூன்றாவது நாவல் சூனியத்திற்காக தனது பணத்தை, ஈமானை இழந்தவர்களின் நிலையை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இது எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 19 அத்தியாயங்களைக் கொண்டு 88 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. அஸ்வர் அலி - கதீஜா உம்மா இருவரினதும் பிள்ளைகளான ருஷைத், ருஷ்தா. ருஷைதின் மனைவி ஸஹ்ரா, ருஷ்தாவின் கணவன் ஹிமாஸ். அத்துடன் அந்த வீட்டில் வேலைகளைச் செய்யும் ஹம்ஸியா. இவர்களை வைத்துத்தான் கதையம்சம் பின்னப்பட்டிருக்கிறது. இந்நாவலில், குறிப்பிட்ட ஒரு பாத்திரத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அனைத்து பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் வாசகர் மனதில் பதிந்து விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-Rv7OPALP2MA/Tp1R_4gLFPI/AAAAAAAAAOA/q1j3gDomkTQ/s1600/37%2Bm%2BNumber%2BVeedu%2BJPG.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 222px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-Rv7OPALP2MA/Tp1R_4gLFPI/AAAAAAAAAOA/q1j3gDomkTQ/s320/37%2Bm%2BNumber%2BVeedu%2BJPG.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5664774064242889970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;கதீஜாவுக்கு வயதாகிவிட்டதால் அவளுக்கு நுவரெலியாவின் குளிர்நிலை ஒத்துக்கொள்வதில்லை. அஸ்வர் அலியும் கொழும்பில் வீடு வாங்க வேண்டும் என்ற ருஷைதின் ஆசைக்கு இணங்கிவிட அனைவரும் தலைநகருக்கு அண்மித்த ஒர் இடத்தில் வீடு வாங்க முடிவு செய்கின்றனர். புரோக்கர் பல வீடுகளின் விபரங்களைச் சொன்னாலும் குறிப்பிட்டதொரு வீட்டை மாத்திரம் ருஷைதுக்கு பிடித்துவிடுகிறது. காரணம் அழகிய சூழலுடன் கூடிய வாகன தரிப்பிட வசதி கொண்டு அந்த வீடு அமைந்திருப்பதாகும். எனினும் அதை பலரும் பேய் வீடு என்று சொல்வதாக தன் நேர்மையை புரோக்கர் ஒப்பிக்கிறார். பேய், பிசாசு ஆகியவற்றில் நம்பிக்கை அற்ற ருஷைத் வீட்டாரிடம் இது பற்றி எதுவும் கூற வேண்டாம் என்ற கண்டிஷனுடன் அந்த வீட்டை வாங்கும் ஒழுங்குகளை கவனிக்குமாறு கூறுகிறான். தனது பிழைப்பில் மண்ணள்ளிப்போட விரும்பாத புரோக்கரும் எதைப்பற்றியும் வீட்டாரிடம் கூறாதிருக்க, வெகு சீக்கிரமாக வீடு வாங்கி அதில் அனைவரும் குடிபுகுந்து விடுகின்றார்கள். தனது தங்கையின் மகன் சுஹைல், தனது கைக்குழந்தை ஸீனத் ஆகியவர்களின் சுகாதாரத்தை எண்ணி வீட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கிறான் ருஷைத்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் வீடு மிகவும் பிடித்துப்போகிறது. எனினும் அந்த வீட்டில் அடிக்கடி சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இரவு பன்னிரண்டு மணிக்கு ஹம்ஸியா முற்றம் கூட்டுவதாகவும் அதை நிறுத்தும்படி சொல்லச் சொல்லியும் மேல்மாடியில் இருக்கும் மனைவி ருஷ்தாவிடமிருந்து ஹிமாஸூக்கு தொலைபேசி வருகிறது. அவன் வெளியில் சென்று பார்க்க ஹம்ஸியா சமையலைக்குள் புகுந்து விடுகிறாள். மீண்டும் உடனே தனது அறைக்குள் சென்று விடுகிறாள். அவளது அறையருகே நிற்பது பெருந்தப்பு என்பதை உணர்ந்து ஹிமாஸ் நகர எத்தனிக்கையில் மாமா அஸ்வர் கோபப் பார்வையால் சுட்டெரிக்கிறார். அவமானம் தாங்காமல் ருஷ்தாவின் விளையாட்டுத்தனத்துக்கு அளவில்லை என்று கர்ஜித்தவாறு மாடியை அடைந்தவனுக்கு மனைவி தூங்கிக்கொண்டிருப்பது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. கடைசியாக தனக்கு வந்த அழைப்பு இலக்கங்களை பார்த்தவனுக்கு இரத்தம் உறைகிறது. பத்தரை மணிக்கு தனது நண்பன் பேசிய இலக்கம் தான் தொலைபேசியில் பதிவாகியிருக்கிறது. எனினும் மாமா தன்னை அடிக்கடி சந்தேகிப்பது அவனளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தாக ருஷ்தா, வீட்டிலிருக்கும் ஜன்னலருகில் யாரோ இருப்பதைக் காணுகிறாள். வெளியே வந்து பார்த்தால் ஒரு பெண் மழைக்கு ஒதுங்கியிருக்கிறாள். அவளை வீட்டுக்குள் அழைத்து வந்த ருஷ்தாவை அந்தப்பெண் தீட்சண்யமான பார்வை பார்க்க ருஷ்தாவுக்கு சர்வ நாடியும் அடங்கி மயக்கம் ஏற்பட்டு விடுகிறது. கண்கள் சொருகி, பேச்சு மூச்சற்று உணர்விழக்கிறாள்.&lt;br /&gt; &lt;br /&gt;வைத்தியத் தரப்பில் அவள் மனநோயாளி என்ற கட்டத்திலிருந்து பைத்தியக்காரி என்ற பட்டம் பெறுமளவுக்கு அவளது செயற்பாடுகள் அமைந்துவிடுகிறது. அடிக்கடி இரவில் ருஷ்தா பயங்கரமாகச் சிரிப்பதைக் கண்டு ஹிமாஸ் அலறுகிறான். வீட்டிலுள்ளவர்கள் வந்து பார்த்த போது ருஷ்தா அயர்ந்து தூங்கியிருக்கிறாள். எதிர்பாராத விதமாக மீண்டும் ருஷ்தா கட்டில் நகருமளவுக்கு சிரித்த விதம் வீட்டிலுள்ள அனைவரையும் பீதியடையச் செய்கிறது. ஹம்சியாவினதும் நிலை அதே கதியாக இருக்கிறது. தனியறையில் தூங்கும் போது அவளை யாரோ கழுத்தை நெரிப்பதாகவும், சமையலறையில் யாரோ தன்னை ஊடுறுவிப் பார்ப்பதாகவும் கூறி அவள் கதறுகிறாள். ஸஹ்ராவுக்கும் இடைக்கிடையே பயங்கரமானதொரு சிரிப்புச் சத்தம் கேட்கிறது. ஆனால் இது எதையுமே நம்பாதவனாக ருஷைத் இருப்பது அவனது ஈமானை வலியுறுத்துகிறது. எனினும் ஷைத்தான் தனது விளையாட்டை ருஷைதிடமும் காட்டிவிடுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ருஷைத் ஓர் நாள் கனவு காணுகிறான். அதில் ருஷ்தாவின் மகன் சுஹைல், ருஷைதிடம் வந்து 'மாமா ருசியா இருக்குது' என்கிறான். எது என ருஷைத் கேட்டதற்கு ஸீனத்துட ரத்தம் என்கிறான். சுஹைல் விரலை வாயில் வைத்து உறிஞ்சிக்கொண்டிருக்கிறான். அவன் வாயில் இரத்தம். ருஷைத் ஸீனத்தைப் பார்க்க அவளது குரல்வளை துண்டிக்கப்பட்டு இரத்தம் வருகிறது. அதிர்ச்சியடைந்தவன் 'ஏன்ட தங்கமே ஸீனத்' என கனவில் கத்த ஸஹ்ரா அவனைத் தட்டி எழுப்புகிறாள். இந்த கனவுதான் ருஷைதின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்திவிடுகிறது. அனைவரும் பரிசாரிகளை அழைத்து வந்து பூஜைகளை செய்கின்றனர். ருஷைதுக்கு இது உறுத்தலாக இருந்தாலும் கனவின் தாக்கம் வாயடைக்கச் செய்கிறது. ஹஜ் கடமைக்காக அஸ்வர் அலி சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்ச கொஞ்சமாக பரிசாரியிடம் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் எந்த வித நலவுகளும் ஏற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் ஒரு பிச்சைக்காரியின் கூற்றுக்கிணங்க கதீஜா, அஸ்வர் அலி, ருஷைத் மூவரும் 37ம் நம்பர் வீட்டிலுள்ள ஒரு பெண்மணியை சந்திக்கிறார்கள். அந்த மூதாட்டி மிகவும் பக்தி உடையவர். அதிகம் படிப்பறிவில்லாவிட்டாலும் படைத்தவன் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பவர். இவர்களின் வீட்டு நிலைமைகளை அறிந்து தனது கதையை அவர்களிடம் விபரிக்கிறார். அவருக்கும் இதை விட பலமடங்கு பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறெதனையும் நாடிப் போகவில்லை. நோயைக் உருவாக்கியவன் மருந்தைப் படைத்திருக்கிறான். அது போலவே பிரச்சனைகளுக்கும் தீர்வை வல்ல அல்லாஹ்வே தர வேண்டுமென்று சதாவும் திக்ரிலும், ஓதலிலும் (இறை தியானம்) தனது காலத்தை கடத்தி வந்திருக்கிறார். அநாதைப் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தனது மகன்மாருக்கும் அநாதைக் குமர்களையே மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். பாடசாலை செல்லாத அந்த மூதாட்டி பலரிடம் கெஞ்சி தமிழ் எழுத்துக்களைப் படித்து அதன் பிறகு பல சன்மார்க்க புத்தகங்களை வாசித்தாகக் கூறி இராக்கைகளைக் காட்டுகிறார். காட்டிய இராக்கையில் ஒரு பக்க சுவர் மறையுமளவுக்கு புத்தகங்கள் இருக்கின்றன. அதைக் கண்ட ருஷைத் உட்பட ருஷைதின் பெற்றோரும் புதினப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பல வீடுகளில் இன்று திக்ரு, ஸலவாத்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது. காரணம் தொலைக்காட்சி. அதில் வரும் உருவங்களும், இசையும் ஷைத்தானுக்கு மிகப் பிரியமானவை. அதனால் பல உள்ளங்கள் இன்று சீர்கெட்டு அலைகின்றன. எந்த கஷ்டம் என்றாலும் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். நாம் நமது கோரிக்கையை விடுக்கும்போது அதை நிறைவேற்றித்தர அல்லாஹ் காத்திருக்கிறான். அவன் கருணையுள்ள ரஹ்மான். எந்தத் தீங்கும் அவனை மிஞ்சி நடந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என்றவாறு அந்த மூதாட்டி அறிவுரை சொல்ல அனைவரும் மன நிம்மதி அடைந்தவர்களாக வீடு செல்கிறார்கள். இனிமேல் அவர்கள் எதற்காகவும் அல்லாஹ்வைத் தவிர பிற வஸ்துக்களிடம் பாதுகாப்பு தேடப் போவதில்லை. மறுமை வாழ்வுக்காக தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள ஆயத்தமாகிறார்கள் என்பதுடன் நிறைவடைகிறது நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈமான் வற்றிய இதயங்களுக்கு இந்நாவல் மழையாக இருக்கிறது. அல்லல் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கிறது. ஆகவே அனைவரும் இவ்விதமான புத்தகங்களை வாசித்து பயனடைய வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் -  37ம் நம்பர் வீடு&lt;br /&gt;நூலாசிரியர் - ஏ.சீ. ஜரீனா முஸ்தபா&lt;br /&gt;வெளியீடு – எக்மி பதிப்பகம்&lt;br /&gt;முகவரி – 120 H, Bogahawatta Road, Welivita.  &lt;br /&gt;தொலைNசி– 011 5020936&lt;br /&gt;விலை - 250/=&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-5723968252584889926?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/5723968252584889926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/10/37.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/5723968252584889926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/5723968252584889926'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/10/37.html' title='37ம் நம்பர் வீடு (நாவல்)'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Rv7OPALP2MA/Tp1R_4gLFPI/AAAAAAAAAOA/q1j3gDomkTQ/s72-c/37%2Bm%2BNumber%2BVeedu%2BJPG.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-1783415015084459908</id><published>2011-10-18T03:11:00.000-07:00</published><updated>2011-10-18T03:13:13.616-07:00</updated><title type='text'>'கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;'கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும் பெற்றிருக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;சொல்லப்போனால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடரும் இவரது இந்த இலக்கிய ஊழியம், கலை இலக்கியவாதிகளுக்கு காத்திரமான ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர் தம் ஆக்கங்களுக்கும் விசாலமான பரம்பலை ஏற்படுத்தும். எழுத்தாளர்கள் தமது எழுத்துருக்களை முதற்கட்டமாக அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலமாக வாசகரை சென்றடையச் செய்வது சகலரும் அறிந்ததே. சில சந்தர்ப்பங்களில் இரண்டாவது முறையாக அதே ஆக்கங்கள் நூல்களாக வாசகர் பார்வைக்கு வருவதுமுண்டு. கே.எஸ். சிவகுமாரன் வெளியீட்டாளர்கள் மூலம் அல்லது தன் சொந்த தேடலாகவோ இந்நூல்களைப் படித்து தன் கண்ணோட்டத்தைப் பிரசித்தப்படுத்துவதுண்டு. இம்மார்க்கமாக படைப்பாளிக்கும், படைப்புக்கும் மூன்றாவது வாசகர் பார்வை அமையும். அடுத்த கட்டமானது கே.எஸ். சிவகுமாரன் தன் கண்ணோட்டத்தை அடக்கிய  தனது நூலுருக்களை தொகுப்பு நூலாக்கல்...  என திரு. கே.எஸ். சிவகுமாரனைப் பற்றிய அவதானத்தை கிழக்கு மண் இணையத்தளம் தந்திருக்கின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-_3NeWN6KMJM/Tp1RAqehlEI/AAAAAAAAAN0/LZm6sGh-Wlo/s1600/K.S.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 201px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-_3NeWN6KMJM/Tp1RAqehlEI/AAAAAAAAAN0/LZm6sGh-Wlo/s320/K.S.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5664772978146120770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோமகாந்தனின் பத்தி எழுத்து என்ற மகுடத்தில் சோமகாந்தனைப் பற்றி இந்நூல் எமக்கு அறியத்தருகின்றது. தினகரன் வார மஞ்சரியில் காந்தனின் கண்ணோட்டம் என்ற தலைப்பில் வாராவாரம் சோமகாந்தனின் பத்தி எழுத்துக்கள் வெளி வந்திருக்கின்றன. சோமகாந்தனின் எழுத்துக்களை ரசித்ததாகக் கூறும் நூலாசிரியர் அதற்கான சில காரணங்களாக பின்வருவனவற்றை கூறியிருக்கின்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழ் மொழியின் சொல் வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தில் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளங்காகிதம் அடைந்தமை, தெரியாத சில விபரங்களைக் கோர்த்து அவர் தரும் பாங்கு என் அறிவை விருத்தி செய்ய உதவியமை, சோமகாந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத்தன்மை கொண்டவையாதலால் அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெற்றமை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து, சமயம், முகாமைத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர்தர அரசாங்க உத்தியோகத்தரான சோமகாந்தனைப் பற்றி இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்களோ என்ன வோ? திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் புத்தகங்களில் படித்து அறியக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது எனலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;பத்தி எழுத்தும் சண் அங்கிளும் என்ற பார்வையில் பொ. சண்முகநாதனைப் பற்றி அறியத் தந்திருக்கிறார். உதயன் நாளிதழில் நினைக்க.. சிரிக்க.. சிந்திக்க என்ற தலைப்பில் எழுதி வந்த பொ. சண்முகநாதன் தனது சொந்தப் பெயரிலும் நீண்ட நாட்களாக ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் எழுதி வந்த ஒரு படைப்பாளி. தான் சொல்ல வந்த விடயத்தை எளிமையாகவும், தெளிவாகவும் சொல்லி முடிக்கும் பாங்கு பலரிடம் இல்லை. எனினும் பத்தி எழுத்துக்கள் மூலமாக பொ. சண்முகநாதன் அவர்கள் கூறும் பாங்கு தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார் நூலாசிரியர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். &lt;br /&gt; &lt;br /&gt;பல முக்கிய செய்திகளையும், அதனுடன் தொடர்புடைய கிளைச் செய்திகளையும் சுருக்கமாகத் தந்த பின்னர் சிந்திக்கத்தக்க கருத்துக்களையும் பலவந்தமாகத் திணிக்காமல் எடுத்துக்கொண்ட பொருளுடன் ஒட்டியதாக அவர் எழுதும் முறை ஆசிரியரின் முதிர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் காட்டி நிற்கிறது என தனது பாராட்டை தெளித்திருக்கிறார் திரு. சிவகுமாரன் அவர்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;1958 – 1966 காலப் பகுதியில் சிற்பி சிவசரவணபவன் வெளியிட்ட ஷகலைச்செல்வி| நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்பது பலரின் கணிப்பு. சிற்பி அவர்கள் தீபம் என்ற தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் இவர் எழுதிய இலங்கைக் கடிதத்தொடரால் எமது நாட்டு இலக்கிய முயற்சிகளை இந்தியர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பை அளித்தது. இவர் சத்திய தரிசனம், உனக்காக கண்ணே, ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமேரி என்ற பெண்பாற்புலவரைப் பற்றியும் இத்தொகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. திருகோணமலையைச் சேர்ந்த இவர் மரபு சார்ந்த கவிதைகளையும், பாடல்களையும் எழுதி வருகிறார். இவரது பாடல்களில் லயம், ஓசை என்பன காணப்படுவதையும், சொல்லாட்சியிருப்பதையும் குறிப்பிட்டிருக்கும் நூலாசிரியர் ஞானமேரி அவர்களின் இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் விதைந்துரைக்கப்பட்ட பாடநூலாக இருப்பது அவசியம் கூறுகின்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;திரு. கௌசிகன் நடாத்திய ஓவியப் பயிற்சி கண்காட்சியின் நிகழ்வொன்றையும் இந்த புத்தகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கொழும்பு வாழ் பல பெண்கள் இந்த பயிற்சிக் கல்லூரியின் மாணவிகளாவர்.  இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திரு. திருமதி. கௌசிகன் இருவரும் நவீனத்தவமும், இயற் பண்பும் கொண்ட ஓவியங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இளைஞர், யுவதிகளின் இந்த திறமையை வெளியுலகுக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஓர் ஓவியக் கண்காட்சி பெப்ரவரி மாதம் கொழும்பு லயனல் வெண்ட்ற் மண்பத்தில் இடம் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.&lt;br /&gt; &lt;br /&gt;இஸ்லாமியப் பெண்ணின் எழுத்தாற்றல் என்ற வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் அது பற்றி தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;கிழக்கிலங்கை இஸ்லாமியரும், யாழ்ப்பாண நகரின் இஸ்லாமியரும் தமிழைத் தம் வசமாக்கி தனித்துவமான படைப்பக்களை இப்பொழுது தந்துகொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆயினும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் வெலிகம என்ற ஊரைச் சேர்ந்த ரிம்ஸா முஹம்மத் தமிழை ஆள்வது எனக்கு வியப்பைத் தந்தது. புதுக்கவிதை என்ற பெயரில் வழமையாக பலர் எழுதும் செயற்கைத் தன்மையான கேள்விகளும், சூளுரைத்தல்களும் போன்று நமது கவிஞரும் எழுதி விடுவாரோ என்ற எனது எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் அமைதி கண்டு யதார்த்த அனுபவத்தை அவர் பதிவு செய்வது எனக்கு திருப்தியளித்தது'. என்றவாறு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தன் மனவோட்டத்தைக் கூறியிருக்கின்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;எல்லாக் கலைகளுமே களிப்பூட்டுவன என்றாலும் பெரும்பாலானவை பெருவாரியான பொது மக்களின் ரசனை மட்டத்தை திருப்திப்படுத்துவன. அந்த வகையில் சினிமாவும் பெரும்பாலும் வணிக நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. இத்தகைய திரைப்படங்கள் ஜனரஞ்சகமானவை என்கிறார்கள். சில நேரங்களில் ஜனரஞ்சகமானவை கலைத் தரமுடையiவாக அமையும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;வியாபார நோக்கத்திற்காக திரைப்படம் தயாரிப்பவர்கள் ரசிகர்களின் ரசனையை மதிப்பவர்களாக பெரும்பாலும் இல்லை. முதலீட்டை கைப்பற்றவே அவர்களது மூளை சிந்தித்துக் கொண்டிருக்கும். அதாவது தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பதனால் அவர்களைத் திருப்திப்படுத்தவும், சம்பவங்களைக் கூட வசனத்தில் மீண்டும் எடுத்துரைக்கும் விதத்திலும் பெரும்பாலான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே வணிகப்படங்கள் கைத்தொழில் முயற்சிகளின் விளைவுகள் எனலாம். கலைநயமான படங்கள் உயர் மட்ட ரசனை உடையவர்களின் ஆய்வறிவுக்கு விருந்தளிப்பன. மக்கள் ரசனை உயரும்போது ஆக்கபூர்வமான கலைப்படங்கள் தாராளமாக நமது பார்வைக்கு வரும் என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;தான் எழுதிய விடிவு கால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள், அன்னையின் நிழல் ஆகிய நூல்களுடன் அண்மையில் பலே பலே வைத்தியர் என்ற சிறுவர் நூலையும் எழுதி பலரது பாராட்டுக்களையும் பெற்ற கே.விஜயன் அவர்களைப் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாவல், கவிதை, சிறுகதை, விமர்சனம், நாடகம் போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் இவர், இதழியலாளராக இருந்தவராவார். மார்க்சிய சிந்தனை உடைய இவர் மலையாளக் கதைகள் சிலவற்றையும் தமிழில் தந்திருக்கின்றார். சிறுவர்களைக் கவரக் கூடியதும், பெரியவர்களை திருப்திபடுத்தக்கூடியதுமான கே. விஜயன் அவர்களின் பலே பலே வைத்தியர் என்ற நூல் 98 பக்கங்களில் 20 கதைகளுடன் வெளிவந்திருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;தனது எழுத்துக்களாலும், தன் நிகரற்ற பண்பினாலும் பல இலக்கிய நெஞ்சங்களின் அன்பை வென்றெடுத்த மாமேதை திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் நூலுக்கு எனது இரசனைக்குறிப்பை எழுதியதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதுடன் அவரைப் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இன்னுமின்னும் சாதனைப் படைக்கவும் வாழ்த்துகிறேன்!!!&lt;br /&gt; &lt;br /&gt;நூல் - கே.எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சிலள&lt;br /&gt;ஆசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்&lt;br /&gt;முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06&lt;br /&gt;விலை - 200 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-1783415015084459908?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/1783415015084459908/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/10/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1783415015084459908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1783415015084459908'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/10/blog-post_18.html' title='&apos;கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில&apos;'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-_3NeWN6KMJM/Tp1RAqehlEI/AAAAAAAAAN0/LZm6sGh-Wlo/s72-c/K.S.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-2831982763247297418</id><published>2011-10-12T09:19:00.001-07:00</published><updated>2011-10-18T03:27:01.992-07:00</updated><title type='text'>முகங்கள் தொகுப்பு</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;முகங்கள் தொகுப்புக்கான (சிறுகதைகள்) இரசனைக் குறிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;                                                                                                        புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களின் படைப்புக்களை நாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வழியே படித்து வருகிறோம். அந்நிய நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மீது கொண்ட பற்றை இன்னும் உணர்ந்து அவர்கள் படைப்புக்களை படைப்பதைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களில் புலம்பெயர் வாழ்வு பற்றிய சிறுகதைத் தொகுப்பை முகங்கள் என்ற பெயரில் தொகுத்துத் தந்திருக்கிறார் வீ. ஜீவகுமாரன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வசேது இலக்கிய பாலத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பு நூல் 551 பக்கங்களில் ஐம்பது எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. முகங்கள் என்ற பெயருக்கேற்றாற்போல புத்தகத்தின் அட்டையிலும் பல முகங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-SmmZD8nUuPs/TpXBiT4NU0I/AAAAAAAAANo/8Kp0M9AtpJ0/s1600/Muhangal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 227px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-SmmZD8nUuPs/TpXBiT4NU0I/AAAAAAAAANo/8Kp0M9AtpJ0/s320/Muhangal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5662644901684007746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பாசிரியரான திரு. வீ. ஜீவகுமாரன் தனது உரையில் கீழுள்ளவாறு தன் உள்ளத்தை திறந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓராண்டுகால பதிப்பகத்துறை அனுபவம், &lt;br /&gt;மூன்றாண்டுகால எழுத்துத்துறை அனுபவம், &lt;br /&gt;இருபத்து மூன்றாண்டுகால புலம்பெயர்வாழ்வு அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்றும் எனக்குத் தந்த தைரியமும், என் முகம் தெரியாமலேயே என்னை ஆதரித்த என் எழுத்தாள நண்பர்கள் தந்த ஆதரவும் தான் இந்த தொகுப்பு உங்கள் கையில் தவழ காரணமாய் அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற சொல்லினால் நான் உட்பட அநேக எழுத்தாளர்கள் இலங்கை மக்களிடமிருந்தும், இலங்கை இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் அந்நியப்படுவது பற்றி என்றுமே எனக்கு மனவருத்தம் உண்டு. ... இலங்கையைப் பொறுத்தவரை கட்டுநாயக்காவில் இருந்து விமானம் ஏறியவுடன் அல்லது ராமேஸ்வரத்தை நோக்கி ஏதாவது ஒரு கடலில் இருந்து வள்ளம் புறப்பட்டதும் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் தான். தத்துக்கொடுக்கப்பட்ட ஒரு பிள்ளை எவ்வாறு பெற்றோருக்கு பிறத்தியாகுமோ அவ்வாறே நாமும் எம் இனத்திற்கு பிறத்தியராய்ப் போவது கசப்புடன் விழுங்க வேண்டிய ஒரு மாத்திரைதான் என்கிறார் திரு. வீ. ஜீவகுமாரன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகளை தொகுத்து கனதியான புத்தகமாக ஆக்கியிருக்கும் அவரது முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பிட்ட நாட்டில் வதியும் படைப்பாளிகளின் படைப்புக்கள் சேர்த்து அச்சிடப்பட்ட பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு பல நாடுகளிலும் வதியும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களை ஒன்றுதிரட்டி இந்தப் புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார் திரு வீ. ஜீவகுமாரன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சிறுகதையான முதிர்பனைகளை நியூசிலாந்தைச் சேர்ந்த அகில் எழுதியிருக்கிறார். மூன்று புதல்வர்களின் திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்துபோகிறார் அம்மா பார்வதி. அதற்கான காரணங்களை மூன்று மகன்மாரும் சொல்வதாக இக்கதை அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மகன் சேர்ஜன் சிவரூபன். தான் காதலித்த நிர்மலா என்ற பெண்ணை பெற்றோர்கள் விரும்பாத காரணத்தால் சிவரூபனால் திருமணம் முடிக்க இயலாமல் போகிறது. தற்போது அவருக்கு நாற்பத்தைந்து வயதாகியும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார். இரண்டாவது மகன் சிவநேசன். 39 வயது. கப்பலின் தலையாய எஞ்சினியர். கப்பல் எந்த நாட்டின் கரையில் நங்கூரமிடுகிறதோ அங்கே சிவநேசன் புது மாப்பிள்ளை ஆகிவிடுவார். மரணத்தின் கதவுகளைத் தட்டும் பாலியல் நோயைக் கொண்டவர். ஆதலால் மனசாட்சி விழித்ததன் நிமித்தம் திருமணத்தை இரத்து செய்து விடுகின்றார். மூன்றாவது மகன் சிவச்செல்வன். போர் விமானத்தின் விமானியோட்டி. யுத்தங்களைப் பாரத்த அதிர்ச்சியில் மனநல மருத்துவரைத் தேடிப்போக அவர் சில மருந்துகள் கொடுக்கின்றார். அவை ஒருவரின் ஆண்மையை இழக்கப்பண்ணி விடுகிறது. சிவச்செல்வனும் இந்த பாதிப்புக்கு உள்ளானதால் இவரும் மணமுடிக்காமலேயே இருந்துவிடுகிறார். ஆக மொத்தத்தில் பிள்ளைகளில் ஒருவருடைய திருமணத்தையாவது தாய் பார்க்கவில்லை. அருமையான கதையாடலைக்கொண்டது இந்த சிறுகதை.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா அம்மா தான் என்ற கதையை யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எழுதியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு வெளிநாட்டிலிருந்து தாயைப் பார்க்க வருகிறாள் மகள் மதுரா. மதுரா உட்பட அவளின் மகளும் நாகரீகத்திற்கேற்ப ஆடை அணிபவர்கள். ஒருமுறை மதுராவின் பெரியம்மாவின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பாணியில் ஆடைகளை அணிவதைக் கண்டு அம்மம்மா திட்டிவிடுகிறாள். அதே போன்று தனது மகளை தனது அம்மா திட்டி விடுவாரோ என்று பயப்படுகின்றாள் மதுரா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்ன ஆச்சரியம். அக்கம்பக்க வீட்டு பிள்ளைகளுக்கு அம்மா இப்படிச் சொல்வதைக் கண்டு ஆனந்தமடைகிறாள் மதுரா.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ர பேரப்பிள்ளையளைப் பாத்தியளே! என்ன ஸ்ரையிலாய் ஸ்மாட்டாய் இருக்கினம். நீங்களும் அந்த மாதிரி இருக்க பழகுங்கோ. அவையளைப் போல உடுத்து, அவையளைப் போல பேசி..''&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சிலிருந்து ஜோதிலிங்கம் எழுதிய "லா சப்பல்" என்ற கதை அளவுக்கு மீறி நாகரீகத்தில் திளைத்து இறுதியில் உயிரை இழந்த யுவதியைப் பற்றியது. பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி மாணவ மாணவிகள், விரிவுரையாhளர்கள் இணைந்து ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கழுத்தடி பட்டினை பூட்டாமல் வெளிக்கிட்ட மகளை தடுத்து நிறுத்தும் பரிமளம் அதை பூட்டச்சொல்லி அதட்டுகிறாள். அதற்கு சிவரஞ்சனியோ "அது ரை கட்டினால்தான் பூட்டிறது அம்மா. ஆக்கள் பாத்தால் சிரிப்பினம்" எனகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது சிரித்தால் சிரிக்கட்டும். நீ வடிவாய் பூட்டு. குமருகளுக்கு ஏதும் நடந்து முடிஞ்சாப் பிறகு ஊர் உலகம் சிரிக்கிறதுக்கு முதல் இது பரவாயில்லை" என்கிறாள் அம்மா பரிமளம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் வழமையான சுப்பிரபாதத்தை காதில் வாங்காமல் புறப்படும் சிவரஞ்சனி புகையிரத நிலையத்தில் பெண்களின் கழிவறைக்குள் நுழைந்து அநாகரீகமான ஆடை, உதட்டில் கறுப்பு மை பூசி வித்தியாசமான போக்கில் தனது நண்பிகளுடன் இணைந்து பயணிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் ஆபிஸ் முடிந்தவுடன் லா சப்பலுக்குப் போய் மரக்கறி வேண்டி அப்படியே கோயிலுக்கும் போய் மகளையும் காரில் அழைத்து வரலாம் என்று கணவர் பாக்கியநாதன் மனைவியை ஆறுதல் படுத்துகிறார். ஏனெனில் பரிமளம் சதாவும் சிவரஞ்சனியின் போக்கு பற்றி அங்கலாய்ப்பதே இதற்கான காரணம். மாலையில் சிவரஞ்சனியின் மொபைலுக்கு கோல் பண்ண ரிங் போய்க்கொண்டு இருக்கிறதே ஒழிய சிவரஞ்சனியின் பேச்சு வரவில்லை. பாக்கியநாதனுக்கும் அடிவயிற்றில் பற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லா சப்பல் வீதிக்கு இருவரும் வருகிறார்கள். வீதி பரபரப்பாக இருக்கிறது. "யாரோ ஒரு பெண்பிள்ளை ரொயிலட்டில் கொலை செய்யப்பட்டிருக்கிறாளாம். ரேப் கேஸாம்" என்று சனம் கதைக்கிறது  என்ற செய்தியோடு பாக்கியநாதனுக்கு பொலிஸாரிமிருந்து கோல் வருகிறது. பாக்கியநாதனின் முகம் மாறுவதைக்கண்டு பரிமளமும் கலவரமடைகிறாள். சிவரஞ்சனி பிணமாக குப்புறக்கிடக்கிறாள். அவளது மார்பிலும் தோளிலும் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. தொப்புளில் வளையம் தொங்குகிறது. கலாச்சாரம் து(ம)றந்து அநாச்சாரங்களில் மூழ்கிப் போனால் யாவருக்கும் இதே நிலைமை தான் என இக்கதை அருமையாக சுட்டி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகுப்பில் நியூசிலாந்து, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, டென்மார்க், நோர்வே, இத்தாலி, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சுவீடன், பெர்லின், சுவிற்ஸ்லாந்து, பிரான்சு, ஹொலன்ட், இந்தியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றமை கூடுதல் சிறப்பு எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறானதொரு மகத்தான பணியைச் செய்திருக்கும் தொகுப்பாசிரியர் வீ. ஜீவகுமாரனின் இலக்கிய பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - முகங்கள் (சிறுகதைகள்)&lt;br /&gt;தொகுப்பாசிரியர் - வீ. ஜீவகுமாரன்&lt;br /&gt;வெளியீடு - விஸ்வசேது இலக்கிய பாலம்&lt;br /&gt;தொடர்புகளுக்கு - visvasethu@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-2831982763247297418?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/2831982763247297418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/2831982763247297418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/2831982763247297418'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/10/blog-post.html' title='முகங்கள் தொகுப்பு'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-SmmZD8nUuPs/TpXBiT4NU0I/AAAAAAAAANo/8Kp0M9AtpJ0/s72-c/Muhangal.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-1721277160724468399</id><published>2011-09-16T06:23:00.000-07:00</published><updated>2011-09-16T06:33:35.353-07:00</updated><title type='text'>மல்லிகை ஜூலை 2011 இதழுக்கான இரசனைக் குறிப்பு</title><content type='html'>ஜீவா என்ற தனிமனிதனின் அர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் இன்று சஞ்சிகை வரிசையில் மல்லிகை சஞ்சிகையே அதிக காலம் வெளிவருவது நாமெல்லோரும் அறிந்த விடயம். எழுத்துத் துறையில் கால்பதித்த அனைவரும் மல்லிகையைப் பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. மல்லிகைப் பந்தல் வெளியீடு மூலமாக பல காத்திரமான புத்தகங்களையும் இலக்கிய உலகம் பெற்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் ஜூலை மாத இதழ் என் கரம் கிட்டியது. அதில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களும் சிந்தையைக் கவர்வனவாக இருக்கின்றது. அட்டைப் படத்தை அலங்கரித்திருக்கின்றார் தனக்கென்றொரு தனி வழி அமைத்திருக்கும் திரு. தம்பு சிவா அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-4gb2W1KetJ0/TnNOn_x4oKI/AAAAAAAAANg/FWg94V9Ft_s/s1600/mal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 215px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-4gb2W1KetJ0/TnNOn_x4oKI/AAAAAAAAANg/FWg94V9Ft_s/s320/mal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5652948406322634914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் தலையங்கமும் சமீபத்தில் தனது 85 வயதை அடைந்திருக்கும் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் வெளிப்பாடுகளாய்ப் பிறந்துள்ளது. ஷமுதன்முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றில் நமது மண்ணில் படைப்பிலக்கியத்திற்கு சாஹித்திய மண்டல பரிசைப் பெற்றுக்கொண்டவன் என்ற பெறுமதிமிக்க இலக்கிய மரியாதை ஏற்கனவே எனக்கு உண்டு. அத்துடன் இந்த மண்ணில் இந்தப் பாரிய யுத்த நெருக்கடிக்குள்ளும் அரை நூற்றாண்டு காலமாக ஓர் இலக்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளிக்கொணர்ந்தவன் என்ற வரலாற்றுப் பொறுப்பும் எனக்கு உண்டு எனத்தொடர்ந்து 46 ஆண்டுகளாக இச் சஞ்சிகை நடாத்திவரும் டொமினிக் ஜீவா அவர்கள், மல்லிகை எனும் இலக்கியச்செடி வளர்வதற்கு என்னென்ன பாடுபட்டார் என்ற அம்சங்களை மேற்கூறியவாறு தொட்டுக்காட்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்டைப்பட நாயகரைப்பற்றி கே.ஆர். டேவிட் எழுதியிருக்கின்றார். கடந்த 40 வருட காலமாக இலக்கியப் பணியாற்றிவரும் திரு. தம்புசிவா அவர்கள் யாழ்ப்பாணம் இணுவிலை பிறப்பிடமாகக்கொண்டவர். தம்பு சிவசுப்பிரமணியம், இணுவிலி மாறன், இணுவை வசந்தன், சிவசிவா தம்பு சிவா ஆகிய புனைப்பெயர்களில் தொடர்ச்சியாக இன்றுவரை சகல முன்னோடிப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். 1967ம் ஆண்டு இறைவரித் திணைக்கள்தில் எழுதுவினைஞராக நியமனம் பெற்று 1985 இல் ஓய்வு பெற்றவர். பின்பு 1987 இல் மாலைதீவில் அரச மீன்பிடி செயற்பாட்டுத் திணைக்களத்தில் உதவிக் கணக்காளராக கடமையாற்றியுள்ளார். பின்பு வடக்கு-கிழக்கு மாகாண சபையின் பதிப்பகத் திணைக்களத்தில் உதவிப்பணிப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பகம் சஞ்சிகையில் பிரசுரமான சிறுகதைகளைத் தொகுத்து காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியீடு செய்ததன் மூலம் தொகுப்பாளனாகவும், இவரால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பான சொந்தங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் சிறுகதை எழுத்தாளனாகவும், இவரால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற கட்டுரைத் தொகுதி மூலம் சிறந்த கட்டுரையாளனாகவும், தூரத்து கோடை இடிகள், அப்பா ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளைத் தொகுத்து வெளியீடு செய்ததன் மூலம் சிறந்த வெளியீட்டாளனாகவும், அரும்பு, கற்பகம், தமிழ்த் தென்றல், ஓலை போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியராகக் கடமையாற்றியதன் மூலம் சிறந்த சஞ்சிகையாளனாகவும் தம்பு சிவா அவர்கள் இனங்காணப்படுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் அனைத்து முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தனது படைப்புக்களைத் தவழவிடும் திரு. தம்பு சிவா அவர்கள் பாண்டிச்சேரி புதுவை பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் ஏ. அறிவுநம்பி அவர்களால் சொல்லின்செல்வர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். தம்பு சிவா அவர்கள் மாக்ஸிம் கோக்கியின் நூல்களையே அதிகம் விரும்புபவராக இருக்கின்றார். அநேகமான நாவல்களில் வருகின்ற பாத்திரங்களின் சித்தரிப்பில் கற்பனை வாதம் மேலோங்கியிருப்பாகவும், மாக்ஸிம் கோக்கியின் நாவலில் சாதாரண மக்களின் வாழ்க்கை முறைகளும், இயல்பான முயற்சிகளும் உள்ளடங்கியுள்ளன என்றும் குறிப்பிடுகின்றார். தம்பு சிவா அவர்கள் அடிக்கடி கூறும் ஒரு தாரக மந்திரம் 'ஒரு மனிதருடைய பெயருக்குப் பின்னால் குறிப்பிடப்படுகின்ற பட்டங்களைவிட, அந்த மனிதனின் பெயருக்கு முன்னால் மனிதம் என்ற பட்டம் அமைந்திருக்க வேண்டும். அவர்களையே நான் நேசிக்கிறேன்' என்பதாகும். இளைய படைப்பாளிகளை உற்சாகப்படுத்தியும், சொல்லாலும் செயலாலும் ஒன்றித்தும் வாழும் இலக்கியவாதி திரு. தம்புசிவா அவர்களை நாமும் வாழ்த்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எலி என்ற மொழிபெயர்ப்புக் கதையை திக்குவல்லை கமாலும், மழை என்ற சிறுகதையை சமரபாகு சி. உதயகுமாரும் எழுதியிருக்கின்றார். சண்முகம் சிவலிங்கத்தின் சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் என்ற கவிதை நூலுக்கான அவதானக்குறிப்பை அன்புடீன் எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வதி என்ற சிறுகதையை எழுதியிருக்கும் ஆனந்தி, ஒரு கூலிவேலை செய்யும் பெண் பற்றி மனப்பதிவை சிறுகதையூடாக சிதத்ரித்திருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. பாறி என்று அழைக்கப்படும் இந்த கூலி வேலை செய்கிற பெண்ணின் உண்மையான பெயர் என்ன? பார்வதியா என்று மலர் என்ற பெண் கேட்டுநிற்கும் கேள்வி மனதில் கனக்கிறது. பக்கெட் மாவிலும், மிக்ஸி இயந்திரத்தால் அரைக்கப்படும் மாவால், மாவிடித்து உழைக்கும் பாறி போன்ற பலரின் ஜீவனோபாயம் இல்லாமலாகி இருக்கிறது. மலருக்கு பாறியயைப் பற்றி அதிக கவலை. கதையினிடையே மலரின் மச்சாளான சீதா வந்து யோசித்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். என்ன காரணம் என மலர் கேட்டதற்கு ஊரில் தற்போது மாவிடிக்கவும் யாருமில்லை என்று விளக்கமளிக்கிறாள். பாறி எங்கே என்ற மலரின் அடுத்த கேள்விக்கு சீதா சொல்லும் பதில் சரிதான். அவள் இப்ப புதுப் பணக்காரி. அவளுக்கென்ன? பிள்ளை சுவிஸிலை. இனி நாங்கள்தான் அவளுக்கு மா இடிக்கப் போவணும் என்ற பதிலைக் கேட்டு ஆனந்தியும் மலரின் நல்ல பண்பும் கதையின் இறுதியில் சுட்டிக் காட்டப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையைச் சொல்லிவிடு என்ற கா. தாரணியின் கவிதை சுவாரஷ்யமாக இருக்கின்றது. பெண் என்ற சொல்லின் மறுவடிவம் சீதனப்பிரச்சனை என்று சொல்லுமளவுக்கு வரதட்சனை கொடுமையாகிவிட்டது. காதலிக்கும்போது தோன்றாத ஜாதியும், மதமும் சீதனம் தர வக்கில்லை எனும்போது மாடி வீட்டுக்கிளிகளிடம் மாட்டுப்பட்டு சிக்கியழிகிறது. தாரணியின் கவிதையிலும் நாசூக்காக சொல்லபட்டிருக்கும் சில வரிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;மூங்கில் ஓரம்&lt;br /&gt;பற்றைகளின் மறைவில்&lt;br /&gt;நாங்கள் சல்லாயித்திருந்த&lt;br /&gt;பொழுதுகளில்&lt;br /&gt;உனக்கு சீதனமாய்த்தர&lt;br /&gt;எங்களிடம் வெள்ளவத்தையில்&lt;br /&gt;சொந்தவீடோ&lt;br /&gt;அதுவாங்க வசதியோ&lt;br /&gt;இல்லையென்பது&lt;br /&gt;உனக்குத் தெரியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;உன் சாதகம் இப்போது&lt;br /&gt; வேல் அமுதன்&lt;br /&gt;திருமண சேவையில்&lt;br /&gt;பத்து மில்லியன்&lt;br /&gt;பிரிவுக் கோப்பிலும்&lt;br /&gt;என் பெயர்&lt;br /&gt;ஊராரின்&lt;br /&gt;நடத்தைக்கெட்டவள்&lt;br /&gt;பட்டியலிலும் இருப்பது&lt;br /&gt;உனக்குத் தெரியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;வி. ஜீவகுமாரன், சி. விமலன், செல்லக்கண்ணு, பிரகலாத ஆனந்த்,  ஆகியோரின் கட்டுரைகளும், புலோலியூர் வேல் நந்தனின் கவிதையும், வேல் அமுதனின் குறுங்கதையும் மற்றும் மேமன்கவி, யோகேஸ்வரி,  முருகபூபதி, வி.ரி. இளங்கோவன், லெனின் மதிவானம் ஆகியோரின் ஆக்கங்களும் மேலும் வழமையான தூண்டில் வாசகர் கடிதங்கள் ஆகியனவும் மல்லிகை இதழை அலங்கரித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் - மல்லிகை (சஞ்சிகை)&lt;br /&gt;ஆசிரியர் - டொமினிக் ஜீவா&lt;br /&gt;முகவரி - 201/4 ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13.&lt;br /&gt;தொலைபேசி - 011 2320721&lt;br /&gt;விலை - 40/=&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-1721277160724468399?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/1721277160724468399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/09/2011.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1721277160724468399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1721277160724468399'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/09/2011.html' title='மல்லிகை ஜூலை 2011 இதழுக்கான இரசனைக் குறிப்பு'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-4gb2W1KetJ0/TnNOn_x4oKI/AAAAAAAAANg/FWg94V9Ft_s/s72-c/mal.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-1406886213112258723</id><published>2011-07-28T02:31:00.000-07:00</published><updated>2011-09-16T06:43:52.329-07:00</updated><title type='text'>முதிசம் -  பொன் மொழித் தொகுப்பு</title><content type='html'>&lt;strong&gt;முதிசம் பொன் மொழித் தொகுப்புக்கான இரசனைக் குறிப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;                                                    &lt;br /&gt;மனிதர்கள் யாவரும் நல்லவர்களாக வாழத்தான் ஆசைப்படுகின்றார்கள். தம்மை யாரும் குறை கூறுவதை விரும்பாத மனிதன், பிறரை குறை சொல்வது, தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று காட்டுவதற்காகவே. அப்படிப்பட்ட மனிதனை நல்வழிப்படுத்த அடிக்கடி அவர்களுக்கு அதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதை இலகுவாக செயல்படுத்தக் கூடியதொரு வழியாக பொன்மொழிகள் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வாசிப்பு அரிதாகிவிட்ட இந்த காலத்தில் கணினிகளே அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இது பாடசாலைகளில் மாத்திரமன்றி அனைத்து இடங்களிலும் சொல்லப்படும் பெரியதொரு பிரச்சனையாக இருக்கிறது. வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும் என்ற வாசகம் மாறி கணனியறிவே மனிதனை பூரணமாக்கும் என்ற நிலை வந்துவிட்டது. அதை இனிமேல் யாராலும் மாற்ற முடியும் என்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு. இன்று இலக்கிய கூட்டங்களிலும் அடிக்கடி சொல்லப்படும் விடயம் இதுதான். இப்படியிருக்க பெரியபெரிய கட்டுரைகளை மனிதர்கள் வாசிப்பார்களா, அப்படிப் பட்டவர்களுக்காய் முத்தான கருத்துக்களை தொகுத்து புத்தமாக்கித் தந்திருக்கின்றார் கலைப்பட்டதாரி ஆசிரியையான திருமதி ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-P3GpMfLCkn8/TjEstpQb-QI/AAAAAAAAANY/0q3YJXGRSPs/s1600/Muzisam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 199px; height: 292px;" src="http://1.bp.blogspot.com/-P3GpMfLCkn8/TjEstpQb-QI/AAAAAAAAANY/0q3YJXGRSPs/s320/Muzisam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5634333771497732354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத்தொகுதியையும்இ இதயத்தின் ஓசைகள் என்ற கவிதை நூலையும் வெளியிட்டிருக்கின்றமை நாமறிந்த விடயமே. முதிசம் என்ற இந்த புத்தகம் 230 பக்கங்களில் இலங்கை இஸ்லாமிய முற்போக்கு இலக்கிய மன்றத்தால் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. 2527 பொன்மொழிகள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பலநாட்டவர்கள் கூறிய பல்வேறு பொன்மொழிகளைத் தொகுத்து மக்களின் அறிவு மேம்பாட்டுக்காகவும், அவர்களது வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த பொன்மொழிகள் அமைந்திருக்கின்றன. பழமொழிகளும், பொன்மொழிகளும் பல விடயங்களை மக்கள் மனதில் பதித்துவிடும். சிறுகதைகளோ, நாவல்களோ பழமொழிகளையும் உள்ளடக்கியதாக எழுதப்படுவதுண்டு. அதேபோல சில சிந்தனைத்துளிகளும் சேர்க்கப்படுகின்றது. காரணம் பந்தி பந்தியாக வாசித்தும் விளங்க முடியாத சில விடயங்களை ஓரிருவரி மூலம் விளங்கிவிடலாம் என்பதால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்மொழிகள் வண்ணத்துப் பூச்சுகள் போன்றவை. சிலவற்றை பிடித்துக்கொள்கிறோம் பல பறந்து விடுகின்றன என்கிறார் நூலாசிரியர். மேலும் சாதாரண மக்களும், அறிஞரும் தமது அனுபவத்தில் கண்டவற்றை சாதாரண சொற்களில் கூறிய உண்மைகளே பொன்மொழிகள் என்றுகூறும் இவர் பொன்மொழிகள் சுகம் தரும் எச்சரிக்கைகள் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து நேரத்தின் பெறுமதியை சில பொன்மொழிகளினூடு விளக்கியிருக்கிறார். நேரம் தங்கம் என்பார்கள். அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பார்கள். அதை என்னென்ன விதங்களில் பயன்படுத்தலாம் என்பதை இவ்வாறு கூறுகிறார் ஸக்கியா ஸித்தீக் அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது வெற்றியின் ஊற்று. சிந்திக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அறிவின் கண். விளையாட நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இளமையின் ரகசியம். படிக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அறிவின் வாயில். அன்புகாட்ட நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இறைவனின் நன்கொடை. சேவை செய்ய நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அது வாழ்வின் குறிக்கோள். சிரித்து மகிழ நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இதயத்தின் பிரகாசம். இறை வணக்கத்திற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஈருலக பாக்கியத்துக்கு வழி என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்பைப் பற்றி பல பொன்மொழிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. நட்பு என்பது நட்சத்திரம் போல வாழ்வுக்கு பிரகாசம் தரவல்லது என்றாலும் தற்காலத்தில் அவ்வாறான உண்மை நட்பை nறுவோர் மிகவும் அரிது. சுயநலத்தக்காக மாத்திரமே தொடுக்கப்படுகின்ற நட்பின் கைகள் சில காலங்களிலேயே வலுவிழந்துபோவது பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பணம் பார்த்து பழகும் நட்பு குணம் பார்த்து பழகாது. குணம் பார்த்து பழகும் நட்பு பணமின்றேல் நிலைக்காது. இதுதான் பெரும்பாலும் உண்மை. சிறு தவறுகள் கூட நட்புக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம். களங்கம் ஏற்பட்ட நட்பு காலம் முழுவதும் கவலையைத் தரும் என்கிறார் ஆசிரியர். நல்ல நண்பர்கள் துயரத்தை பாதியாக்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தற்கொலை என்பது சர்வசாதாரணமாக போய்விட்டது. முன்பெல்லாம் கொலை தற்கொலை என்ற வசனங்களைக் கேட்டாலே அடிவயிறு கலங்கும். இன்று அவையெல்லாம் அடிக்கடி கேட்டும், வாசித்தும் பழகிவிட்ட சமாச்சாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்கொலைகளுக்கான காரணத்தை விசாரித்துப் பார்த்தால் அதை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும். ஏனெனில் காதலில் தோல்வி, பரீட்சையில் தோல்வி, அம்மா அடித்தார்கள், அப்பா ஏசினார் என்ற அற்ப காரணங்களுக்காக இவை அன்றாடம் நிகழ்கின்றன. அண்மையில் மலையகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவிகளின் தற்கொலை எத்தனைப் பேரின் மனசை உலுக்கியது. இவ்வாறானவர்களுக்கு கட்டாயம் முதிசம் என்ற புத்தகத்தை வாசிக்கக் கொடுக்க வேண்டும். அதிலுள்ள சில பொன்மொழிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;'தோல்வி என்றால் எதையும் சாதிக்கவில்லை என்பது பொருளல்ல. எதையோ&lt;br /&gt;கற்றுக்கொண்டோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.'&lt;br /&gt;&lt;br /&gt;'தோல்வி என்றால் தோற்றவர் என்று பொருளல்ல. இன்னும் வெற்றி பெறவில்லை&lt;br /&gt;என்றே பொருளாகும்.'&lt;br /&gt;&lt;br /&gt;தவறுகளை செய்தவர்கள், தான் சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன் என்று கூறி தப்பித்துவிடுவார்கள். அதை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் மனிதன் சூழ்நிலைகளுக்காக படைக்கப்படவில்லை. சூழ்நிலைகள் மனிதனுக்காக படைக்கப்பட்டுள்ளன என்கிறார் நூலாசிரியர் ஸக்கியா.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் வெற்றிபெற இலட்சியமும், விடா முயற்சியும் முக்கியம். சிலர் இன்னும் எனது இலட்சியம் கைகூடவில்லை என்று வாழ்க்கையை குறைகூறிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலரோ முயற்சியே செய்யாமல் வெற்றி பெறவில்லை என்று மூலையில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற என்னென்ன வேண்டும்? கீழுள்ளவைதான் என்கிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;'உறுதியான குறிக்கோள், விடாமுயற்சி, தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியா உழைப்பு,&lt;br /&gt;நேர்மையான பாதை. இவை ஒருங்கிணைந்தால் வெற்றி கிட்டாமல் போகாது'&lt;br /&gt;&lt;br /&gt;காதலித்து திருமணம் புரிந்தவர்களுக்கு மத்தியில் அன்பு பெருக்கெடுப்பது உண்மை. எனினும் காதலிக்கும் போதிருந்த மனநிலை, சுதந்திரம் போன்றவை கல்யாணத்துக்கு பின்பு சற்று விலகிக்கொள்வதும் கண்கூடு. அதிலும் பிள்ளைகள் என்று பிறந்துவிட்டால் இன்னும் திண்டாட்டம்தான். மனைவி தன்னைக் கவனிப்பதில்லை என்று கணவன் எண்ணுகிறான். அது தவறு. காரணம் அங்கே குழந்தைக்காகவும் அன்பு பரிமாறப்படுகிறது. குழந்தை அவர்களுக்கு&lt;br /&gt;உறுதுணையாகிறது. சொல்லவந்த விடயம் என்னவென்றால் குடும்ப வாழ்வில் சந்தோஷமும் துக்கமும் மாறிமாறி வரும் என்பதுதான். அதற்கான பழமொழி இதோ&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லறத்தில் இன்பத்தை மாத்திரம் எதிர்பாராதே. உயர்ந்த மலையில் அடர்ந்த&lt;br /&gt;முட்புதர்களும் குளிர்ந்த நீர்ச்சுனைகளும் இருக்கத்தான் செய்யும்.'&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் ஈடு இணை இல்லாத செல்வம் குழந்தை செல்வமே. ஒரு பெண்ணின் பூரணத் தன்மை தாய்மையடைவதிலேயே தங்கியிருக்கிறது என்பார்கள். திருமணமுடித்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் படும்பாட்டை எப்படி கூறுவது? யாருக்கும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. ஆனால் குழந்தைகளை பெற்றெடுப்பது மாத்திரம் பெற்றோரின் வேலையில்லை. அவர்களை பார்போற்றும் மனிதர்களாக்குவதும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளின் முன்னிலையின் பெற்றோர் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். பெரியவர்களைவிட குழந்தைகள் எல்லாவற்றையும் நுணுக்கமாக கிரகித்துவிடுவார்கள். வேறு பிள்ளைகளோடு ஒப்பிட்டு குழந்தைகளை நாம் மட்டந்தட்டிப் பேசக்கூடாது.  அது அவர்களை தாழ்வுச்சிக்கலுக்குள் அமிழ்த்திவிடும். மாறாக அவர்களை தைரியப்படுத்தி வளர்க்க வேண்டும். அவர்கள் செய்கின்ற சின்ன சின்ன நல்ல விடயங்களுக்கும் தட்டிக்கொடுத்து பாராட்ட வேண்டும். பரிசில்கள் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையை தூக்கி வைத்திருக்கும்போது கை வலித்தாலும், அதை இறக்கிவிடும்போது மனசு ப்பதுண்டு. 'பெத்தவர்கள்' என்பதற்காய் பெற்றோர் என்று சொல்லப்படுவதில்லை. இறைவனிடமிருந்து செல்வமாக குழந்தையை 'பெற்றவர்கள்' என்பதால்தான் அவர்கள் பெற்றோர் ஆகிறார்கள். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - முதிசம் (உண்மைக் கதை)&lt;br /&gt;நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்&lt;br /&gt;முகவரி - 4/4 நிகபே வீதி, நெதிமால, தெஹிவளை.&lt;br /&gt;தொலைபேசி - 011 2726585, 0718 432006&lt;br /&gt;விலை - 275/=&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-1406886213112258723?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/1406886213112258723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/07/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1406886213112258723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1406886213112258723'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/07/blog-post_28.html' title='முதிசம் -  பொன் மொழித் தொகுப்பு'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-P3GpMfLCkn8/TjEstpQb-QI/AAAAAAAAANY/0q3YJXGRSPs/s72-c/Muzisam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-1897011231709221748</id><published>2011-07-28T02:24:00.000-07:00</published><updated>2011-07-28T02:28:55.393-07:00</updated><title type='text'>'ஒரு தென்னை மரம்'  -  சிறுகதைத் தொகுதி</title><content type='html'>&lt;strong&gt;'ஒரு தென்னை மரம்' சிறுகதைத் தொகுதிக்கான இரசனைக் குறிப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் கிழக்குப் பிரதேசம் பல கவிஞர்களையும், கலைஞர்களையும் தன்னகத்தே கொண்டு அவர்களை இலக்கியத்தில் அணி சேர்த்திருக்கின்றது. அந்தவகையில் சிறுகதைகள், கவிதைகள் பலவற்றைப் படைத்து எம்மத்தியில் மிகவும் பரிச்சயமான ஓர் எழுத்தாளர் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி  அவர்கள் "ஒரு தென்னை மரம்" என்ற சிறுகதைத் தொகுதியை அண்மையில் வெளியிட்டிருக்கின்றார். அவர் ஏற்கனவே வெளியிட்ட குடையும் அடை மழையும் என்ற கவிதைத் தொகுதியின் சொந்தக்காரர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தென்னை மரம், மனப்பால், புது மனிதனாகியும், பெண்ணாய்ப் பிறப்பதற்கு, நேர்மைக்கு இடமேது, வீடு, முத்திரை தந்த முத்திரை, மத்திய கிழக்கு மாப்பிள்ளை, கிணறு, இவர்களா இப்படி, அதுதான் சட்டம், வேம்பு இனித்தது, காசா லேசா, அதுதான் வீடு, புத்தகங்கள், சரியான தண்டனை, அந்தஸ்து, அது எப்போது என்ற பதினெட்டு சிறுகதைகளை உள்ளடக்கி ஹாஜரா வெளியீடாக 203 பக்கங்களில் இந்தச் சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-DhGqB3Fv4uE/TjErLphS-LI/AAAAAAAAANQ/WTfhCNHUYHg/s1600/Oru%2Bthennai%2Bmaram.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 188px; height: 269px;" src="http://4.bp.blogspot.com/-DhGqB3Fv4uE/TjErLphS-LI/AAAAAAAAANQ/WTfhCNHUYHg/s320/Oru%2Bthennai%2Bmaram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5634332087941265586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கி பிடித்த விமானப்படை அதிகாரியான கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்களது உள்ளத்தில் துடிப்பான கருவூலம் ஊற்றெடுப்பதற்கு அவர் பிறந்த மண்ணின் வாசனையும், வாசிப்பும், தேடலும்,  முயற்சியுமே காரணங்களாகின்றன. கிண்ணியாவில் பேசுகின்ற தமிழுக்கு தனிச் சுவையுண்டு. பேச்சுத் தமிழ் கொஞ்சும். எவரது பேச்சுக்களிலும் உவமையழகும், அடைமொழிகளும், முதுமொழிகளும் புரளும். கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்கள் ஒரு மரபுக் கவிஞர். அவரது கவிதைகளை நமது அனைத்து தேசியப் பத்திரிகைகளும் பிரசுரித்தன. அவரது கவிதைகள் மனதினிலே ஒரு கிளர்ச்சியைத் தோற்றுவிக்கும். அவர் கவிதை சொல்லும் அழகும், கையாளும் திறனும் அபாரமானது என்கிறார் இப்புத்தகத்துக்கு அணிந்துரை வழங்கியிருக்கின்ற கலாபூஷணம் கேணிப்பித்தன் ச. அருளானந்தம் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கதையான ஒரு தென்னை மரம் சகோதரிகள் இருவருக்கிடையில் ஏற்படும் வாக்குவாதத்தை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. பிரச்சனைக்குக் காரணமாக இருந்தது ஒரே ஒரு தென்னை மரம் தான். சகோதரிகளான கதீஜா, ஹாஜரா என்ற இருவருக்கும் ஒரே காணி இரண்டு பங்காக பிரித்துக் கொடுக்கப்பட்டாலும் இடைநடுவே நின்று இருவருக்குள்ளம் இந்தத் தென்னை மரம் பிளவுகளை ஏற்படுத்திப்போகிறது. அக்கா, தங்கை இருவருக்குமிடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனை சகலன்மார்களிருவருக்கு இடையிலும் ஏற்படக் கூடாதென்பதில் அக்கறை காட்டும் ஹாஜராவின் கணவன் மனிதத் தன்மையுடன் அந்த மரத்தை விட்டுக்கொடுக்குமாறு மனைவி ஹாஜராவுக்கு சொல்லும் புத்திமதி அவர்மேல் மிக்க மரியாதையை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் கதையின் பிரதான பாத்திரங்களில் ஒன்றான சாரிபு ஹாஜியார் மகள்மார் இருவரின் இந்தச் சண்டையினால் மனமுடைந்து போவது வாசகர் மனங்களையும் கவலையால் நிரப்பிவிடுகிறது. பகலில் சண்டையை மூட்டி நின்ற தென்னை மரம், இரவு பெய்த அடைமழையில் தன் வேரறுந்து நிலத்தில் வீழ்ந்து கிடக்கிறது. அந்தக் காட்சியை வாசிக்கையில் சகோதரிகளின் ஒற்றுமையை நாமேன் கலைக்க வேண்டும் என்று மரம் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டதான கற்பனை என்னில் உருவெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு என்ற கதை சீதனத்தை அடியொட்டி புனையப்பட்டிருக்கின்றது. இளைய மகள் பரீதாவின் கணவன் திடீரென வீட்டை விட்டுப்போகின்றான். அந்த சோகம் பரீதாவின் வதனத்தில் நன்கு புலப்படுகின்றது. தாய் பாத்திமா தனது கணவர் அகமதுவின் சம்பளம் போதாது என்பதால் வீட்டு கஷ்டங்களைப் பற்றி மகளிடம் கூறிவிடுகின்றார். இதுபற்றி பரீதா தன் கணவரிடம் கூற இந்தப்பிரச்சனை விசாலமாகி பரீதாவையும் தன் கணவரையும் பிரித்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குரிய மூலகாரணம் சீதனமாய் வீடு கொடுக்கப்படாததே என்பதும் கதையினிடையே தெளிவுபடுத்தப்படுகின்றது. திருமணம் முடிக்கையில் மணப்பெண்ணின் வீட்டார் மணமகனுக்கு கட்டாயம் வீடுகொடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வீட்டை கட்டித்தருகிறேன் என்று சொன்ன அகமது, பரீதாவின் திருமணம் முடிந்து இன்று ஒன்றரை வருடங்களாகியும் அதை செய்யும் முயற்சியிலாவது ஈடுபடாமல் இருப்பதே மகள் - மருமகளின் பிரச்சனையின் காரணமாக திகழ்ந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியின் மருமகனின் தந்தையின் வீட்டுக்குச் செல்லும் பரீதாவின் பெற்றோர் இன்னும் கொஞ்ச கால்த்தில் தாம் வீட்டைக் கட்டி முடித்துவிடுவதாக வாக்களிக்கின்றனர். அந்த இடத்தில் எல்லோரையும் போல் அல்லாமல், மனசாட்சியுடன் சம்பந்தி தாரீக் நடந்துகொள்ளும் விதமே இக்கதைக்கு உயிரூட்டுகிறது எனலாம். என்னவெனில் சம்பந்தி அகமதுவிடம் வாக்களிக்கிறார் இவ்வாறு...&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த முறை நான் ஹஜ்ஜூக்குப் போகப்போறன். போறத்துக்கு இடையில சில காரியங்கள் செய்ய வேண்டிக்கிடக்கு. அதிலே முதல் காரியம்தான் இந்தப் பிள்ளைகள் ரெண்டுபேரையும் நான் என்ட வளவுக்குள்ள கட்டிப்போட்டிருக்கிற வீட்டில குடியேத்தப்போறேன். நீ வசதிவந்து வீடு கட்டும் வரைக்கும் அதுகள் என்ட வீட்டிலேயே இனி குடியிருக்கட்டும்". மத்திய கிழக்கு மாப்பிள்ளை என்ற சிறுகதை காலத்துக்கு ஏற்ற கருவாக&lt;br /&gt;இருப்பது பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு மோகம். இதில் பரீனா என்ற அபலைப் பெண்ணின் ஆதங்கம் சொல்லப்பட்டிருக்கின்றது. வெளிநாட்டில் வருடக்கணக்காக இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஆண்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அல்லது மாறிப் போகிறார்கள். அப்படியிருக்க அவர்களைப் பற்றி கொஞ்சமாவது விசாரித்து அறியாமல் கை நிறைய பணம் இருக்கும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக தங்கள் பிள்ளைகளை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கின்றார்கள.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய கிழக்கு மாப்பிள்ளை என்ற இந்தக் கதையிலும் அப்படித்தான். கல்யாணமாகி மூன்று மாதங்களின் பின்னர் வெளிநாட்டுக்கு போய்விட்ட கணவன் திரும்பவும் மூன்று வருடங்களின் பின்புதான் நாடு திரும்புகிறான். இதற்கிடையில் குழந்தையை வளர்க்க தனிமையில் அல்லல்படும் பரீனா, வெளிநாடடுக் கணவர்கள் பற்றி பத்திரிகையில் வரும் சேதிகளைப் படித்துப் பதறிப்போகிறாள். ஆக இறுதியில் அவள் பயந்தது போலவே சம்பவம் நிகழ்ந்துவிடுகிறது. ஆம். குழந்தையை வளர்க்க கஷ்டம் என்றால் தன்னிடம் தந்துவிடும்படியும் இனி பரீனாவுடன் வாழ விருப்பமற்றதால் வெளிநாட்டுக் காதலை கல்யாணத்தில் தொடரப்போவதாகவும் மடல் வருகின்றது. நூலாசிரியர் சொல்வது போல இந்தக் காலத்தில் கல்யாணம் சிப்பிசிரட்டை விளையாட்டாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்துவிட்ட விஞ்ஞான யுகத்தில் பெண்களின் சமையல் வேலைகளும் இலகுவாய்த்தான் மாறிப்போயிருக்கின்றன. 'கிரைண்டர், வொஷிங் மெஷின்' என்று ஏகப்பட்டவை சந்தையில் குவிந்து கிடைக்கின்றன. அதே மாதிரியான விவகாரம்தான் கிணறு. இன்றைய காலத்தில் எல்லா வீடுகளையும் குழாய் நீர் ஆக்கிமித்திருக்கிறது. கிணற்றில் நீரள்ளிக் குளிப்பதைவிட 'ஷவரில்' நின்று குளிப்பது எவ்வளவு சுகம் என்று எண்ணுபவர்கள்தான் அதிகமல்லவா? ஆனால் மாதம் முடிய 'பில்' வரும்போதுதான் கஷ்டம் விளங்கும். கிணறு என்ற கதையிலும் நாதர்ஷா மனைவி மக்களின் தூண்டுதலால் 'பைப் லைன்' எடுத்தாலும் வரப்போகும் 'பில்'லைப் பற்றி உள்ளுர பயந்துகொண்டே இருந்தார். புதிய முறை மனைவி முதல் அனைவரும் கிணறு பக்கம் கூட செல்லாமல் எடுத்ததெற்கெல்லாம் குழாய் நீரை பயன்படுத்த அந்த மாதம் ஐநூறு ரூபாய் 'பில்' வருகிறது. இதில் சுவாரஷ்யமான வரி ஒன்று இறுதியில் இருக்கிறது. அதாவது 'இப்போது பூனைக்கு பெல் கட்டுவதும் நாதர்ஷாதான். தண்ணீருக்கு பில் கட்டுவதும் நாதர்ஷா தான்'.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களா இப்படி என்ற சிறுகதையும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சினையை கருப்பொருளாகக் கொண்டது. யாக்கூப் தம்பதியரின் ஐந்தாவது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். மூத்த புதல்விகள் மூவரும் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவள் நல்ல அழகியாக இருந்தாலும் வீடு இல்லாததால் சீதனம் கொடுக்க வழியின்றி அவளது திருமணம் தள்ளிப்போகிறது. எதிர்பாராத தருணமொன்றில் மில்லுக்கார காசீம் ஹாஜியாரின் இளைய புதல்வன் யாக்கூபின் மகளை திருமணம் முடிக்க ஆசைப்படுகின்றான். அதை எல்லோரும் ஆமோதிக்கிறார்கள். ஆனால் பிரச்சினை வேறு உருவத்தில் வருகிறது. அதாவது மூன்றாவது பெண் தாய்வீட்டுக்கு ஓடி வருகிறாள். தங்கைக்கு அந்தப் பையனை திருமணம் முடித்துக்கொடுக்க வேண்டாம் என்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காண காரணத்தை அறிந்த யாக்கூப் தம்பதியருக்கு அந்தச ;செய்தி இடியாய் இறங்குகிறது. அவள் தாயிடம் சொல்லும் காரணம் என்னவென்றால், மூன்றாவது நான்காவது மருமகன்மார் இருவருடைய தங்கைக்கும் மில்லுக்கார காசீம் ஹாஜியாரின் இளைய மகனை கேட்டிருக்கிறார்கள். அவன் மறுத்திருக்கிறான். தமது தங்கையை வேண்டாம் என்றவன் மனைவியின் தங்கைக்கும் தேவையில்லை என்கிறார்கள். என்ன மனிதர்கள் இவர்கள்? சரியாகப் பார்த்தால் அக்காவின் கணவர் என்ற பொறுப்பிலிருந்து அவர்கள்தான் திருமணம் செய்துகொடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது வந்த வரனையும் கெடுத்துவிட்டார்களே. ஒரு மகளை கரைசேர்க்கப் போனால் இரு மகளின் வாழ்வு பட்டுப்போய்விடும். இந்த அவலம் வேறு யாருக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் தமது வாழ்வை மட்டுமே யோசிக்கிறார்கள். பிறரின் வாழ்க்கை எப்படிப் போனாலும் பிரச்சினையில்லை என்று நினைக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் மனிதநேயத்துடன் எல்லோரும் இருந்தால் பூமிப்பந்து ஆனந்தமாக சுற்றும். நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - ஒரு தென்னை மரம் (சிறுகதை)&lt;br /&gt;நூலாசிரியர் - கிண்ணியா ஏ.எம்.எம். அலி&lt;br /&gt;தொலைபேசி - 077 2765174&lt;br /&gt;வெளியீடு - ஹாஜரா வெளியீட்டகம்&lt;br /&gt;விலை - 350 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-1897011231709221748?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/1897011231709221748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1897011231709221748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1897011231709221748'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/07/blog-post.html' title='&apos;ஒரு தென்னை மரம்&apos;  -  சிறுகதைத் தொகுதி'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-DhGqB3Fv4uE/TjErLphS-LI/AAAAAAAAANQ/WTfhCNHUYHg/s72-c/Oru%2Bthennai%2Bmaram.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-1552619560576662485</id><published>2011-06-30T22:15:00.000-07:00</published><updated>2011-06-30T22:16:49.520-07:00</updated><title type='text'>ஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள்</title><content type='html'>&lt;strong&gt;ஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள் நூலுக்கான எனது பார்வை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரவதைகள் என்ற வார்த்தை இக்காலத்தில் யாவருக்கும் பொதுவாக தெரிந்திருக்கும் விடயமாக இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்துக்கு முதலாளி வர்க்கம் கொடுக்கும் சித்திரவதைகள், நலிவுற்ற நாடுகளுக்கு வல்லரசுகள் கொடுக்கும் சித்திரவகைள், அப்பாவி பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படும் பாலியல் சித்திரவதைகள் என்று பல்வேறு கோணங்களில் அதன் தாக்கத்தை வரையறுத்துக்கொண்டு போகலாம். சொந்த தகப்பனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படும் அப்பாவி பெண்களின் கதைகைளை தினசரிகளுக்கூடாக தினமும் அறிந்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-3h1LIg_UnRg/Tg1YL-7qZDI/AAAAAAAAAMY/QVlOoL0fFdQ/s1600/Oru%2Bkudam%2BKanneer%2BJPG.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 312px;" src="http://1.bp.blogspot.com/-3h1LIg_UnRg/Tg1YL-7qZDI/AAAAAAAAAMY/QVlOoL0fFdQ/s320/Oru%2Bkudam%2BKanneer%2BJPG.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624248472550663218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சில யதார்த்த பூர்வமான விடயங்களை உள்ளடக்கி சர்வதேச ரீதியில் இடம்பெற்ற சித்திரவதைகள் சார் நிகழ்வுகளை ஆவணப்படுத்துகின்றதொரு பொக்கிஷமாக வெளிவந்திருக்கிறது அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் ஒரு குடம் கண்ணீர் என்ற உண்மைக் கதைகளின் தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தனது தாய்மாமன் செய்யது ஷரிபுத்தீன் மற்றும் அவரது புதல்வன் அஜ்மல் ஷரிபுத்தீன் ஆகிய இருவருக்குமாக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூல் யாத்ரா வெளியீடாக 250 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனை சேர்க்கையும் அலங்காரங்களும் இல்லாது யதார்த்தத்தை அதன் உள்ளமை குன்றாது முன்வைக்கும் நூலாசிரியரின் எழுத்துப்பாணி ஒரு பரிசோதனை முயற்சிக்கு ஒப்பானதாகும். மனதை நெகிழ வைக்கும் வேதனைகளும், அவலங்களும் இங்கு பதிவாகியுள்ளன. துயரத்தையும், உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இலக்கியப் பதிவுகள் அவை. செய்திகளின் சம்பவங்களின் வெறும் பதிவுகள் என்ற வரட்சியை இந்நூல் வெல்ல முயன்றுள்ளது. ஆவண பதிவுகளுக்கு அப்பால் சம்பவங்களின் சோகங்களையும், நிகழ்ந்துள்ள அநீதிகளையும் மீளாக்கம் செய்து உலகின் கவனத்திற்கு இது கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தையும் தாண்டி இந்நூல் ஓர் ஆவணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த நூற்றாண்டின் கொடுமைகளின் ஒரு பகுதியை இது மக்களுக்குச் சொல்கிறது என்கிறார் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது நூல் பற்றி உண்மையைத் தவிர வேறில்லை என்ற பதிவினூடாக நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். மனிதன் இயல்பாகவே மற்றொருவனை அல்லது மற்றொன்றை அடக்கியாளவும்,   ஆதிக்கம் செய்யவும் விரும்பியவனாக இருக்கிறான். அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் முதல் ஒரு சில்லறைக் கடை உரிமையாளர் வரை இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் கூட ஒருநாளில் நமக்குக் கீழேயுள்ள யாரையாவது அதட்டிப் பார்க்கிறோம் அல்லது அதற்கு முற்படுகின்றோம். அதற்கு வாய்ப்பற்றவர்கள் கால்நடைகளையாவது அதட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பண்பு அவரவர் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப மனித ரத்தத்தில் கலந்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக மகா யுத்தம் தொடக்கம் இன்று வரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழித்தும், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களை அழித்தும் பொது ஜனங்களுக்கு செய்யப்படுகின்ற சித்திரவதைளை தினமும் நாம் கேள்விப்படுகிறோம். நம் நாட்டிலல்லாது பிற நாடுகளில் நடக்கும் இவ்வாறான பயங்கர சம்பவங்களை எம்மில் பலர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனினும் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் மனிதத்துவப் பண்புடன் அயல்நாட்டு பிரச்சனைகளை தமது எழுத்தினூடாக எமக்கெல்லாம் அறியத் தந்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சம்பவமான அவன் ஒரு நட்சத்திரம் என்ற கதையில் முஹம்மத் என்ற பலஸ்தீனச் சிறுவனைப் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெறுவதையே தன் இலட்சியமாகக் கொண்டிக்கும் அந்தச் சிறுவனுக்கு பன்னிரண்டு வயதுதான் ஆகிறது. தனது தந்தையுடன் கடைவீதிக்குச் செல்லும் முஹம்மதையும், முஹம்மதின் தந்தையையும் இஸ்ரேலிய இராணுவத்தினன் ஒருவன் தனது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாக்குகின்றான். ஆக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது எப்படிப் போனாலும் தனது ஆரம்பப் பாடசாலை அணியில் கூட விளையாடும் அதிர்ஷ்டம் இன்றி இறந்து போகிறான் சிறுவன் முஹம்மத். மற்ற பிள்ளைகளுக்காக வாழும் முஹம்மதின் தாய் அவர்களிடம் இப்படிச் சொல்கிறாள். 'முஹம்மத் இப்போது சுவர்க்கத்தில் இருக்கிறான். ஒரு நட்சத்திரமாக' இதயத்தை கசக்கிப்பிழியும் சம்பவம் இது. ஒரு அப்பாவிச் சிறுவனின் ஆசை இங்கே நிராசையாகிப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிஞ்சுகளும் பிசாசுகளும் என்ற கதையில் 1988 இல் பிறந்த ரீட்டா, ருத் என்ற இரு யுவதிகளின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. டுட்சி இனத்தவரான இவர்கள் மீது ஹூட்டு இனத்தவர்கள் தாக்குதல்களை மேற் கொள்கின்றார்கள். தமது உயிரைக் காத்துக்கொள்வதற்காக அப்பா, அம்மா, பதினொறு வயதான மாமி கேத்தி எல்லோரும் காடுகளுக்கூடாவும், மலைகளுக்கூடாவும் எந்தவித வரைபடங்களோ, இலக்குகளோ இன்றி செல்கின்றார்கள். டுட்சி இனத்தவர்களை வலை விரித்துத்தேடும் ஹூட்டு இனத்தவர்களிடமிருந்து தம்மை பாதுகாக்க பெரும்பாடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் தாயும் தந்தையும் இறந்துவிட மாமியான கேத்தியுடன் வேறிடம் தேடி செல்கையில் ஜேன் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. எனினும் அதுவும் தமக்கு உகந்த இடமல்ல என்பதுபோல அவர்களைத் தேடி ஹூட்டு இனத்தவர்கள் ஜேனின் வீட்டுக்கு வருகின்றார்கள். அதனால் தம்மால் ஜேன் என்ற பெண்ணுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக மீண்டும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். இந்தக் கதையினிடையே சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களை வாசிக்குமிடத்து இவ்வாறான பயங்கரங்கள் நிகழுமா என்ற அச்சம் தோன்றுகிறது. காட்டுப் பாதையை ஊடுறுவி அவர்கள் வரும்போது காணாமல் போயிருந்த தந்தையின் சடலத்தைக் காண்கின்றனர். அஞ்சலி செலுத்தவோ, கதறியழவோ வழிகளின்றி அவரது பிணத்தை அநாதரவாக விட்டுச்செல்லும் அந்த நிலைமை அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணிப்புறாவின் மரணம் என்ற கதையில் வல்லுறவுக்கு உட்பட்டு அநியாயமாக இறந்துபோன இளம் நங்கையின் சோகத்தை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். அதாவது பெயரில் மாத்திரம் பசுமையாக (கிறீன்) வாழுகிறான் ஒரு அமெரிக்க இராணுவ வீரன். ஜோர்ஜ் புஷ்ஷின் ஊர்க்காரன் என்பதால் அவனுக்கு இராணுவத்தில் இடம் கிடைத்ததா அல்லது குற்றம் புரிவதற்காகவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டானா என்ற கேள்வி சாட்டையடியாக இருக்கின்றது.  அபீர் ஹம்சா என்ற பதினான்கு வயது இளம்பெண் மீது குறியாக இருக்கும் கிறீன் அவளை துவம்சிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். திட்டத்தை அமுல்படுத்தும் நாளன்று தனது சகாக்களுடன் செல்லும் கிறீன், அபீர் ஹம்சாவின் பெற்றோரையும், ஐந்து வயதேயான  அவளது சகோதரியையும் சுட்டுக்கொன்றுவிட்டு தனது நண்பர்களுடன் இணைந்து அவளை மானபங்கப்படுத்துகின்றான். காரியம் முடிந்த பின் அந்த அப்பாவிப் பெண்ணின் முகத்தின் மீது தலையணையை வைத்து ஏ.கே 47 துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சராசரி மனிதர்களுக்கு நேரும் இக்கொடுமைகளுக்கும் அப்பால் ஒரு பிக்குவுக்கு நேர்ந்த துன்பகரமான விடயங்களை தப்பிப் பிழைத்த பிக்கு என்ற கதையில் அறியக் கிடைக்கிறது. பிக்குவின் கரங்கள் பின்னால் விலங்கிடப்பட்ட நிலையில் அவரது நெஞ்சிலும் முகத்திலும் இராணுவத்தினர் ஓங்கி உதைககின்றனர். மூர்க்கத்தனமாக அறைந்து காதுகளில் ஏறி மிதிக்கின்றனர். அகில பர்மா துறவிகள் அமைப்பின் தலைவர் யார், நீ அதில் அங்கத்துவம் வகிக்கின்றாயா போன்ற கேள்விகளைக் கேட்டு அந்த பிக்குவை படுத்தும்பாடு மிகவும் வேதனைக்குரியது. அதிஷ்டவசமாக அந்த சிறையிலிருந்து தப்பி விடுகின்றார் பிக்கு. எனினும் அதிகார வர்க்கதினருக்கு அந்த பிக்கு சொல்லும் போதனை இதுதான். அதாவது 'அராஜகங்களைக் கைவிடுங்கள். இல்லையேல் நீங்கள் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவீர்கள்' என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உபகாரம் என்ற சம்பவம் லூசியா என்ற பெண்ணின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. ஷெல்களும், துப்பாக்கி ரவைகளும் கொண்டு இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துவிட்டால் லூசியாவின் குடும்பத்தினர் பைபிளோடு சங்கமமாகிவிடுவார்கள். சேர்ச்சுக்குப் போகும் ஒருநாளில் குண்டுச் சத்தம் காதைப் பிளக்க தனது குழந்தைகளுக்கு ஒன்றும் நிகழக்கூடாது என்று எண்ணியவாறு கிட்டத்தட்ட மூர்ச்சையான நிலையை எய்துகிறாள் லூசியா. புனித பூமி மன்றம் என்ற அமைப்பினால் லூசியாவைப் போன்ற பலருக்கு உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த உதவியும் இல்லாமல் போகிறது. ஆம். ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கட்டளையின் பேரில் புனித பூமி மன்றம் மூடப்படுகிறது. மன்றத்தின் பணம் ரமழான் மாதம் முழுவதற்கும் முடக்கப்படுகின்றது. தனது வாழ்வையும், சுவாசத்தையும், நம்பிக்கையையும் யாரோ தூர எடுத்துச் சென்றுவிட்டதாக லூசியா உணர்கின்றாள். நீண்ட நேரத்துக்குப் பின் அவளது மகனான ஜோனை தேடுகிறாள் லூசியா. தூரத்தில் குண்டுச்சத்தம் கேட்கிறது. அவளால் எதையும் அனுமானிக்க முடியாத அளவுக்கு அவள் பலவீனமாக இருக்கின்றாள். எனினும் போதகர் அவளை நோக்கி ஓடி வருவதாக காண்கிறாள். ஜோன் இறந்து விட்டானா? என்ற அச்சத்தை வாசகர்களின் மனதுக்குத் தந்து விடுகிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான பல நிகழ்வுகளை உள்ளம் உருகும் விதத்தில் தந்திருக்கும் நூலாசிரியரை பாராட்டாமல் இருக்க முடியாது. அவரது எழுத்துப் பணி மென்மேலும் சிறந்து விளங்கவும், இன்னும் பல படைப்புக்களைத் தர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - ஒரு குடம் கண்ணீர் (உண்மைக் கதை)&lt;br /&gt;நூலாசிரியர் - அஷ்ரஃப் சிஹாப்தீன்&lt;br /&gt;தொலைபேசி - 0777 303818&lt;br /&gt;வெளியீடு - யாத்ரா&lt;br /&gt;விலை - 300 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-1552619560576662485?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/1552619560576662485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/06/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1552619560576662485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/1552619560576662485'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/06/blog-post_30.html' title='ஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-3h1LIg_UnRg/Tg1YL-7qZDI/AAAAAAAAAMY/QVlOoL0fFdQ/s72-c/Oru%2Bkudam%2BKanneer%2BJPG.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-8501220959693874310</id><published>2011-06-23T22:33:00.000-07:00</published><updated>2011-06-23T22:39:32.352-07:00</updated><title type='text'>விடியலின் விழுதுகள் - சிறுகதை</title><content type='html'>ஈழத்து இலக்கிய வரலாற்றில் சிறுகதை எழுதுதல் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் சிறுகதைகளை எழுதும் வீதம் சமீக காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருமதி. ஸக்கியா ஸத்தீக் பரீத் அவர்களும் பெண் சிறுகதை எழுத்தாளர்கள் வரிசையில் இணைந்து கொள்கின்றார். பட்டதாரி ஆசிரியரான இவர் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத்தொகுதி உட்பட முதிசம், இதயத்தின் ஓசைகள் என்ற நூல்களையும் வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுதியில் திருப்பம், மங்கா வடு, காலத்தின் கோலம், கண்ணீர் எழுப்பிகள், இறை தீர்ப்பு, திசை மாறிய பறவை, நிரபராதிகள், கோக்கி யார், மின்னும் தாரகை, இணங்கிப் போ மகளே, இலவு காத்த கிளி, முக்காட்டினுள் மாமி, நியதி ஆகிய பதின்மூன்று சிறுகதைகள் 122 பக்கங்களில் அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-pqnDuLk-V5o/TgQi-av0uAI/AAAAAAAAAMQ/ugF1SAIBHRo/s1600/ST%2BBook%2B02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 202px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-pqnDuLk-V5o/TgQi-av0uAI/AAAAAAAAAMQ/ugF1SAIBHRo/s320/ST%2BBook%2B02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5621656690592364546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பம் என்ற முதல் கதை அப்பாவிப் பெண்ணான மஸ்னாவைப் பற்றி பேசுகிறது. பிறக்கும்போதே தாயை இழந்த அவள் உம்மும்மாவின் தயவிலேயே வாழ்கின்றாள். காலங்கள் நகர்ந்து செல்ல உம்மும்மா மௌத்தாகின்றார். அதன் பின் மஸ்னாவுக்கு வாழ்க்கையின் பாரதூரம் புரிய ஆரம்பிக்கின்றது. தான் தனித்த விடப்பட்டதாக எண்ணி கவலைக்கொண்டிருக்கும் சமயத்தின் பக்கத்து வீட்டு மைமூன் நோனா மஸ்னாவைத் தேடி வருகின்றார். மஸ்னாவின் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தனது வீட்டு வேலைக்காரியாக்குவதே மைமூன் நோனாவின் உள்நோக்கமாக இருந்தது. உம்மும்மாவின் சகோதரரான குஞ்சு மாமா மஸ்னாவை அவர்கள் நன்றாக பார்த்தக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவளை அனுப்பி வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய வாழ்க்கையின் அடுத்த பயங்கர கட்டம் இங்குதான் நிகழ்கின்றது. அதாவது மைமூன் நோனாவின் மகன் பியாஸ், மஸ்னாவின் பேரழகில் மயங்கி அவளை வேட்டையாடுவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றான். அது மாத்திரமன்றி அறுபது வயதாகியும் ஆசை நரைக்காத மைமூனின் கணவனும் மஸ்னாவில் குறிவைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதேச்சையாக ஒருநாள் மைமூனின் கணவர் மஸ்தானிடம் அகப்பட்டுக்கொள்ளுவதிலிருந்து மயரிழையில் தப்பும் மஸ்னா, வீட்டைவிட்டு ஓடிவந்து தாஹிர் ஹாஜியாரின் வீட்டில் நுழைகிறாள். தங்க மனம் படைத்த அவரும் அவரது மனைவியும் மஸ்னாவை தம் பிள்ளைபோல ஆதரித்து அவளுக்கு வீடும் கட்டிக்கொடுத்து திருமணம் முடித்து வைப்பதாக கதை நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமூகத்தில் நடமாடும் சில வேங்கைகள் பார்ப்பதற்குத்தான் பசுக்களாகத் தெரிகின்றனர். ஒரு அப்பாவி மாட்டி விட்டால் அவளை எப்படி கூறுபோட்டு எப்படி விற்றுவிடலாம் என்ற கேவலமான புத்திகொண்டவர்கள் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களிடமிருந்து தப்புதல் பெருங்கஷ்டம். எனினும் மஸ்னாவின் இறைபக்தியும், துணிச்சலும் அவனைக் காப்பாற்றி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுமிகளை வேலைக்குச் சேர்க்கும் இன்னொரு கதையாக மங்கா வடு அமைந்திருக்கின்றது. ரிஸ்மினா என்ற பெண் வேலைக்கார சிறுமிக்கு செய்கின்ற கொடுமைகள் இக்கதையில் விளக்கப்பட்டிருக்கின்றது. எந்த வேலையென்றாலும் இந்தச் சிறுமியை ஏவுவது, அடிப்பது, சூடு வைப்பது முதலிய கொடுமைகள் நிகழ்கின்றன். இவ்வளவுககும் ரிஸ்மினாவின் மகள் ஷர்மிளாவின் வயதையொத்த சிறுமிதான் இந்த வேலைக்காரச் சிறுமி.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு நடந்துகொள்வது பொலீஸீக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்றும் வேலைக்கார சிறுமி மீது பரிவும் காட்டிக்கொண்டிருக்கின்றார் எதிர்வீட்டு ஆரிபா தாத்தா. தீடீரென கோலிங்பெல் அடிக்கிறது. பொலீஸார்தானோ என்று பயப்படும் ரிஸ்மினா பதட்டததோடு நிற்க, வந்தவர்கள் சொல்லும் விடயம் ரிஸ்மினாவை அதிர்ச்சியடைய வைக்க இருவரும் வைத்தியசாலையை அடைகின்றனர். அங்கே... ரிஸ்மினாவின் மகள் ஷர்மிளா இறந்து கிடக்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிஸ்மினாவை விட வேலைக்கார சிறுமிக்குத்தான் வேதனை அதிகமாக இருக்கின்றது. அது கீழுள்ள வரிகளில் அழகாக கூறப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷநோனா அடிக்கும்போதெல்லாம் தன்னைக் காப்பாற்றிய உத்தமி ஷர்மிளா, உம்மாவுக்குக் களவாக எல்லாத் தீன்பண்டங்களையும் தரும் என் அன்புத்தங்கை ஷர்மிளா, ஷர்மிளா தான் இந்த வீட்டில் எனக்குள்ள ஒரே ஆறுதல்...|&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் ரிஸ்மினாவின் இதயம் துடிக்கின்றது. தன் மகளாக வேலைக்காரச் சிறுமியை வளர்க்கப்போவதாக அவள் கூறுகையில் அந்தச்சிறுமி அதை மறுத்து, ஷர்மிளா இல்லாத வீட்டில் தான் இருக்கப் பேவதில்லை என்று கூறி தனது வீட்டுக்கு சென்று விடுகின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் போடும் திட்டங்கள் முற்று முழுதாக சரியாக இருக்காது. அல்லாஹ்வின் திட்டங்கள்தான் சரியாக இருககும் என்பதை இறைத்தீர்ப்பு என்ற கதை விளக்கி நிற்கிறது. வசதிவாய்ப்புகளோடு வாழும் ரிஸானாவுக்கு முப்பது வயதில் முர்ஷித் என்ற மகன். அவனுடைய திருமணத்தை தடைசெய்த படியே இருக்கும் ரிஸானாவின் நண்பியான சப்ரியத் ஆண்டி. உம்மாவும் சப்ரியத் ஆண்டியும் பார்ககும் பெண்களையெல்லாம் குறை கூறிக்கொண்டிருப்பது பிடிக்காமல் நல்மனம் படைத்த முர்ஷித் வெளிநாடு சென்று விடுகிறான். கதையின் இறுதி முடிவு மிகவும் சந்தோஷமாக அமைந்திருக்கின்றது. அதாவது ஏற்கனவே முர்ஷித் பெண்பார்க்கச்செல்லும் தாஹிரா என்ற பெண்னை உம்மா வேண்டாம் என்கிறாள். அல்லாஹ்வின் நாட்டம் ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த அதே அழகில் தனது மழலைகளுடன் கணவரை இழந்து விதவையாக இருக்கிறாள் அந்தப்பெண் தாஹிரா. அவளை முர்ஷித் திருமணம் செய்ய ஆசைப்படுவதை அறிந்து முதலில் ரிஸானா துடிக்க, சப்ரியத்துக்கு விட்மின் டொனிக் குடித்த பரவசம் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவரின் துக்கத்தில் சந்தோஷம் காணும் சப்ரியத்தின் திருவிளையாடல்களை புரிந்துகொண்டு, தனது நண்பியால் தனது மகனின் வாழ்வு இத்தனைக் காலங்களாக பாழ்ப்பட்டிருப்பதை இறுதியாக உணர்ந்து கொள்ளும் ரிஸானா, சப்ரியத்தைக் கூப்பிடாமல் தனது உறவினர்களுடன் தாஹிராவின் வீட்டுக்குச் சென்று திருமணம் பேசுவதாக கதை முடிந்திருக்கின்றது. சப்ரியத் போன்றவர்கள் கதைகளில் மாத்திரம் உலாவும் பாத்திரங்களல்ல. நிஜத்திலும் அவ்வாறு இருக்கின்றார்கள். அவர்களை அறிந்து விலக வேண்டியது எங்கள் திறமையில் தங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பல்கலைக்கழகங்கள் தோறும் பகிடிவதை நடைபெறுகிறது. சிலர் அதைத் தாங்கிக் கொள்கிறார்கள். வேறுசிலர் படிப்புக்கே கும்பிடு போட்டுவிட்டு வந்துவிடுகின்றார்கள். சமூக மயமாக்கல் என்ற பெயரில் நிகழும் இந்த கலாச்சாரம் வெறும் அநாச்சாரம் என்று இன்னும் மாணவ சமூகம் புரிந்துகொள்ளவில்லை. திசைமாறிய பறவை என்ற கதையில் வரும் அஸ்மா டாக்டர் ஆகும் நோக்கத்தோடு பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைக்கிறாள். அங்கு குழுமியிருந்த மாணவர் கூட்டம் அவளது ஹிஜாபை கழற்றி வீசச்சொல்கிறது. செருப்பை தலையில் வைத்து நடக்கச்சொல்கிறது. இறுதியில் புளித்த பாலில் மிளகாய்த் தூள் தூவி அதை அருந்த வைக்கிறார்கள். இந்த சம்பவம் அஸ்மாவை பெரிதும் பாதிப்படையச் செய்கிறது. இரைப்பையில் அலர்ஜி ஏற்படுவது மாத்திரமன்றி அவள் மனநோயாளியாகவும் மாறி விடுகின்றாள். காலம் கழிய பகிடிவதையில் நாயகனாக செயற்பட்ட முனாஸ் என்ற மாணவன் டாக்டராகி அஸ்மாவை இந்தக்கோலத்தில் சந்திக்கிறான். அவளது நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றான். அவன் செய்த காரியத்தால் மனநோயாளியாகியிருக்கும் அஸ்மாவை இறுதியில் தன் மனைவியாக்கி அவளுக்கு வாழ்வு கொடுக்கின்றான். டாக்டராக வரமுடியாமல் போன அஸ்மா, டாக்டரின் மனைவியாகி நிற்பதைக் கண்டு ஊரே ஆனந்தப்படுவதாக கதை முடிந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கோக்கி யார் என்ற கதை உள்ளத்தை உருக்கும் சம்பவமாக இருக்கின்றது. ஹோட்டல் ஒன்றில் இரவுபகலாக நெருப்பில் வெந்து தனது மகனின் படிப்பு செலவுகளை மேற்கொள்ளும் காஸிம் காக்கா நம்பிக்கையான மனிதர். அவர் கொழும்பிலிருந்து ஊருக்குப் போகும்போது அவர் கொண்டுபோகும் நெய்பூந்தியை வாங்கவென்றே சிறுபிள்ளைகள் அவரது வருகைக்காய் காத்திருப்பார்கள். தந்தை படும் கஷ்டங்கள் தெரியாமல் வளரும் மகன் தப்ரிஸ் வீடுமுறைகளில் கொழும்புக்கு வந்து ஓரிரு நாட்கள் வாப்பா காஸிமுடன் தங்கிவிட்டுச் செல்வான். அவன் சாதாரணதர பரீட்சையில் நல்ல முறையில் சித்தியடைந்தாலும் அவனது ஒழுக்கத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் மனமுடைந்து இருதய நோயாளியாகிறார் காஸிம். தப்ரிஸ் உயர்தரம் கற்பதற்காக வேண்டி விண்ணப்பங்களுக்கு ஒப்பம் பெற காஸிமைத்தேடி வருகிறான். ஹோட்டலில் அவர் இல்லை. அவரது அறையிலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளியிடம் வந்து வாப்பா எங்கே என்று கேட்காமல் மரியதையின்றி கோக்கியார் எங்கே என்று கேட்க, முதலாளிக்கு கோபம் உச்சத்தை அடைகிறது. தறுதலையாக இருக்கிறானே என்று திட்டியவர் வைத்தியசாலைக்கு அழைத்துப்போகின்றார். போகும் வழியில் காஸிம் அடுப்படியில் வெந்து பட்ட கஷ்டங்களைச் சொல்ல தப்ரிஸூக்கு அடிமனதில் ஏதோ நெருடுகிறது. வைத்தியசாலையில் வைத்து காஸிம் காக்காவின் தலையை முதலாளி ஆறுதலாக தடவி விடும்போதே கண்மூடி காஸிம் இறந்து போகின்றார். தவறை உணர்ந்த தப்ரிஸ், முதலாளியின் உதவியுடன் வாப்பாவின் ஆத்ம சாந்திக்காக மீண்டும் பழைய தப்ரிஸாக மாறி படிக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நான் கூறியவற்றிற்கும் அப்பால் இன்னும் பல நல்ல கதைகள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. திறமையாகவும், வித்தியாசமான கோணத்திலும் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் மனதை ஈர்க்கின்றன. அனைவரும் வாசித்து பயனடையக் கூடிய விதத்தில் இத்தொகுதி அமைந்திருக்கின்றது. கதாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர் - விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி)&lt;br /&gt;நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்&lt;br /&gt;முகவரி - 4/4 நிகபே வீதி, நெதிமால, தெஹிவளை.&lt;br /&gt;தொலைபேசி - 011 2726585&lt;br /&gt;வெளியீடு - எக்மி பதிப்பகம்&lt;br /&gt;விலை - 175/=&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-8501220959693874310?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/8501220959693874310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/8501220959693874310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/8501220959693874310'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/06/blog-post.html' title='விடியலின் விழுதுகள் - சிறுகதை'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-pqnDuLk-V5o/TgQi-av0uAI/AAAAAAAAAMQ/ugF1SAIBHRo/s72-c/ST%2BBook%2B02.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-7897254313516326102</id><published>2011-05-16T09:46:00.000-07:00</published><updated>2011-05-16T09:48:59.205-07:00</updated><title type='text'>மிதுஹாவின் நந்தவனம் -  சிறுவர் கதைகள்</title><content type='html'>&lt;strong&gt;மிதுஹாவின் நந்தவனம் சிறுவர் கதைகள் நூலுக்கான இரசனைக் குறிப்பு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான் அவர்கள் தந்திருக்கும் மிதுஹாவின் நந்தவனம் என்ற நூல் சிறுவர்களுக்கான கதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது. அருள் வெளியீட்டகத்தினால் 72 பக்கங்களில் அமைந்திருக்கும் இந்நூலில் 16 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. பாலர் பாடல், சின்னக்குயில் பாட்டு, பிரியமான சிநேகிதி, கட்டுரை எழுதுவோம் என்ற நூல்களுடன் இந்தத் தொகுப்பையும் தந்திருக்கும் ஜெனீரா அவர்கள் கிண்ணியாவை வதிவிடமாகக் கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-5uabEQCtl-M/TdFVVHyU9ZI/AAAAAAAAAJE/Vm8AalmucTs/s1600/Janeera.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-5uabEQCtl-M/TdFVVHyU9ZI/AAAAAAAAAJE/Vm8AalmucTs/s320/Janeera.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5607356832408728978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஏளனஞ் செய்யாதே, தன் வினை தன்னைச் சுடும், ஏமாற்றுபவர் ஏமாறுவார், முயற்சி வெல்லும், தாய் சொல்லைத் தட்டாதே, கேடு நினைத்தால், அடாது செய்பவன், அடி உதவுவது போல, வாயால் வந்த வினை, ஒற்றுமையே பலம், ஆசையின் விபரீதம், சுற்றுலா, மிதுஹாவின் நந்தவனம், திருந்திய உள்ளம், அருண்டவன் கண்ணுக்கு, கர்வம் கொள்ளாதே ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் பிரசுரம் பெற்றிருக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;திருமலை நவம் அவர்கள் தனது அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'குழுந்தைகளுக்காக எழுதி வரும் ஜெனீராவின் கதைகளில் தர்மம், ஒழுக்கம், நீதி, அன்பு, பாசம், பற்று என்றெல்லாம் போதிக்கப்படுகின்றது. சொல்லப்போனால் வாசிப்பு அருகிவிட்ட இந்தக் காலத்தில் பெரியவர்களும் புரிந்துகொள்ள வேண்டிய கதைகளாக அவை இருக்கின்றன'.&lt;br /&gt; &lt;br /&gt;உண்மையில் சொல்வதென்றால் சிறுவர்களுக்காக என்று தலைப்பிட்டு இந்நூல் வெளிவந்தாலும் இதை அனைவரும் படிக்கத்தான் வேண்டும். போட்டியும், பொறாமையும் தலை விரித்தாடும் இன்றைய சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தான் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பிறரை கஷ்டத்தில் வீழ்த்திவிடும் எத்தனையோ பேர் இன்று நம் சமுதாயத்தில் வாழ்கின்றார்கள் என்று கூறுவது வெட்கப்பட வேண்டிய விடயம், தொழிலிலும் சரி, நட்பிலும் சரி வஞ்சகங்கள் தான் வலைபின்னி அடுத்தவனை குழிக்குள் தள்ளிவிடும் துரதிஷ்டங்கள் நிலவி வருகின்றன. எங்கு பார்த்தாலும் சண்டைகளும், சச்சரவுகளும் நம் கண்முன் காணக்கிடைக்கிறது. சொத்துக்காக பெற்றவர்களையே அவமானப்படுத்தி காவல் நிலையம் வரை கூட்டிச்சென்ற எத்தனை சம்பவங்கள் இன்று சரித்திரங்களாகி விட்டன? இவை எல்லாவற்றுக்குமான தீர்வுகள் இந்தச் சிறிய கதைகளில் மிகத் துல்லியமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றமை ஜெனீரா அவர்களின் திறமைக்கு சான்றாகும்.  &lt;br /&gt; &lt;br /&gt;மற்றவரை ஏளனஞ்செய்து தாம்செய்வதே சரி என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள். உடலின் எல்லா பாகங்களும் சரிவர அமைந்தவர்கள் அதற்காக இறைவனுக்கு நன்றி கூறாமல், ஊனமாக பிறந்தவர்களை கேலி செய்து மகிழ்வதை தம் பொழுதுபோக்காக கொண்டிருக்கின்றார்கள். வேலைவெட்டியின்றி இருக்கும் பலர் செயற்கைக் காலுடன் இருப்பவர்களைப் பார்த்து ரொபோ என்று கூறி அவர்களை மானபங்கப்படுத்துகிறார்கள். ரொபோ போல அவர்கள் இருந்தாலும் உழைத்துச் சாப்பிடும் அவர்களை மதிப்பதில்லை. மானம் பற்றி யோசிக்காத இவர்கள் ஊனம்பற்றி யோசித்தல் சரியா என்பதை யோசித்திருக்கவேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;மேலுள்ள கருத்தை உடையதாகத்தான் ஏளனஞ்செய்யாதே என்ற முதல் கதையானது கொக்கையும், காகத்தையும் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. கொக்கும் தான் வெள்ளை நிறமாக இருப்பதால் கருப்புக் காக்கை என காகத்தை ஏளனஞ்செய்கிறது. இயற்கை அழகு நிறைந்த பூவுலகில் காக்கை மாத்திரம் கருப்பாக இருப்பதாக நக்கலடிக்கிறது. எனினும் காகம் அதனால் மனமுடையவில்லை. அது தன் பக்க நியாயங்களை கொக்கிடம் எடுத்துரைக்கிறது. அதாவது கொக்கு வெள்ளையாக இருந்தாலும் அதன் மனதை கறுப்பென்கிறது. காகங்கள் ஒன்றுகூடி ஒற்றுமையாக உணவு உண்பதை நாமும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். காகத்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒற்றுமையிணை வேறு எதனிடமும் கற்க முடியாது என்பது உண்மை. வேறு பறவை, மிருக  இனங்களில் மாத்திரமன்றி மனித இனத்திடம் கூட இத்தகைய பண்பு இருக்கிறதா என்று காக்கை கேள்வி கேட்பது எம்மத்தியில் கேட்கப்படும் கேள்வியாகவே கருதலாம். குப்பைகளையும் உணவாகக்கொண்டு வாழும் காகத்தால்தான் நமது சூழலும் சுத்தமாக இருக்கிறது. இல்லாவிட்டால் மக்கள் தொற்றுநோய்களாலும், மரண அச்சுறுத்தலாலும் அல்லல்படுவார்கள் என்று சொல்கிறது ஆகாயத்தொட்டி என்ற பெயரிலும் அழைக்கப்படும் காக்கை. காக்கை கூறிய அறிவுரைகளைக்கேட்டு கொக்கு தலைகுனிவதாக கதை முடிந்திருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இரண்டாவது கதையான தன்வினை தன்னைச் சுடும் என்பது பிறரை நோவினைப்படுத்தினால் தாமும் தண்டிக்கப்படுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி நிற்கிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல தம்பாட்டுக்கு இருந்த தேனீக்களின் கூட்டை கல்லெறிந்து உடைத்து விடுகிறான் றிப்தி என்ற குறும்புக்கார மாணவன். அதனால் கோபமடைந்த தேனீக்கள் அவ்வழியால் வருவோர் போவோர் எல்லோரையும் தாக்குவதுடன் றிப்தியையும் தாக்குகிறது. இதை அறிந்த ஆசிரியர் மாணவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறார். &lt;br /&gt; &lt;br /&gt;'பார்த்தீர்களா பிள்ளைகளே! நாம் உயிர்களிடத்தில் அன்புகாட்ட வேண்டும். தேனீ எமக்கு எவ்வளவோ நன்மை செய்கிறது. அதை உணராமல் கல்லெறிந்து கலைத்தால் என்ன செய்யும்? முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்' என்று விளக்கமளிக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஏமாற்றுபவர் ஏமாறுவார் என்ற கதை மிகவும் சிறப்பானது. நாம் ஒருவரை காரணமின்றி வஞ்சகமாக ஏமாற்ற நினைத்தால் அதே போல நாமும் ஒருநாள் நிச்சயம் ஏமாறியே தீருவோம். இது இறைவன் வகுத்த நியதி என்பதை இக்கதையினூடாக யதார்த்தபூர்வமாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியை ஜெனீரா அவர்கள். அரசமரத்தின் உச்சிக் கிளையில் வாழ்ந்து வந்த நாரைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நினைக்கிறது காகம். நாரைகள் தம் இருப்பிடம் குறித்த நியாயத்தை விசாரிக்கையில் காகம் கரைந்து தன் இனத்தாரை அழைத்து நாரைகளை துன்புறுத்துகிறது. தப்பினோம் பிழைத்தோம் என்றவாறு போன நாரைகள் மறந்தும் அப்பக்கம் தலைகாட்டவில்லை. காகம் ஏமாறும் சந்தர்ப்பம் இப்போது ஆரம்பிக்கிறது. ஆம் குயில் தன் முட்டைகளை காக்கையின் கூட்டில் இடுகிறது. அதை அறியாத காகம் அடைக்காத்து குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் வளர வளரத்தான் அவற்றின் குரலுக்கிடையே இருந்த வித்தியாசத்தை உணர்கிறது தாய்க்காகம். 'நானே தந்திரமான பறவை. எனக்கே யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?' என்று எண்ணுகிறபோது, வந்துசேர்கிறது குயில்கள். நீ ஏமாற்றியதால் இன்று நீயே ஏமாந்துவிட்டாய் என்று சொல்லுகையில்தான் காக்கைக்கு பொறி தட்டுகிறது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற ஆழ்ந்த கருத்து பொதிந்த பழமொழியை அள்ளித்தெளித்திருக்கிறார் கதாசிரியர்.&lt;br /&gt; &lt;br /&gt;தாய்சொல்லைத்தட்டாதே என்ற கருத்துள்ள பல கதைகளை வாசித்திருக்கிறோம். அத்தகைய கதைகளில் ஒன்றாக இக்கதையும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கதையில் கூறப்பட்டிருக்கும் மாணவன் மிகவும் துடிதுடிப்பானவன். அவனுக்கு கடலில் இறங்கி விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.  நண்பர்கள் வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவார்கள் எண்று எண்ணியதால் பல நாட்கள் தன் ஆசைகளை அடக்கி வைக்கிறான். ஒருநாள் அவன் எதிர்பார்த்தது போலவே நண்பர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஒரு நாளில் பாடசாலைவிட்டு வரும்போது மெதுவாக கடலில் காலடி எடுத்து வைப்பதற்காய் பாறைகளில் நடக்கிறான். எதிர்பாராதவாறு கால் சறுக்கிவிட சிப்பியும் பாறைக்கற்களும் கைகளையும், கால்களையும் உராய்ந்து பதம்பார்த்து விடுகின்றன. சீருடைகள் பாசியை அரவணைத்து பச்சையாகிப் போயின. இதே காயங்களோடு கடலில் விழுந்திருந்தால் நிச்சயம் அவன் கரை சேர்ந்திருக்கமாட்டான். அதை எண்ணியவன் அப்போது முதல்  இனி தாய் சொல்லைத் தட்டவே கூடாது என்று உணர்கிறான். &lt;br /&gt; &lt;br /&gt;அடாது செய்பவன் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கதை கேடு நினைத்தால் கேடே விளையும் என்ற கருத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கானகத்தில் நடுவில் அழகியதொரு பொய்கை. அதில் நீரருந்தவரும் பிராணிகளை கொன்று சாப்பிட்டு வயிறு புடைக்கிறது சிங்கம். தானே ராஜா தானே மந்திரி என்ற கர்வத்துடன் வாழ்ந்துவந்த சிங்கம் அன்று யானை ஒன்றை வேட்டையாட வேண்டும் என்று எண்ணி யானையின் அருகே செல்கிறது. தனது நண்பர்களை சிங்கத்துக்கு பலிகொடுத்த வேதனையில் இந்த யானை சிங்கத்தின் ஆட்டத்தை அடக்க நினைத்து தன் தும்பிக்கையால் சுழற்றி சிங்கத்தை பாறைநோக்கி வீசியது. வலிதாங்க முடியாமல் அவலக்குரல் எழுப்பும் சிங்கத்தை ஆறுதல் படுத்த அங்கே ஒரு ஈ கூட இல்லை. எல்லாமே சிங்கம் அடிபட்டதைப் பார்த்து குதூகலிக்கின்றன. மகிழ்ச்சியுடன் நீரருந்துகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt; இந்தக் கதை வெறுமனே விலங்குகளை வைத்து எழுதப்படவில்லை. எம்முடன் பழகி எம்மையே விலைபேசும் பலர் இருக்கிறார்கள். பசுத்தோல் போர்த்திய புலிகளாக இருந்துகொண்டு எத்தனை பிரச்சனைகளை விளைவிக்கிறார்கள். அடுத்தவன் நல்லாயிருப்பதை  கண்டு பொருமி, அவர்களின் மகிழ்ச்சியை நிரந்தரமாக அழித்துவிடும் யோசனைகளுடன் வாழ்ந்து வரும் இவர்களுக்காகவும் தான் இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. அநியாயம் செய்பவன் அநியாயமாகவே அழிந்து போவான் என்று உறுதியாயக் கூறும் இந்தக் கதை சுவாரஷ்யமாக இருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;ஆசைகள் இருந்தால்தான் அவன் மனிதன். ஆனால் பேராசை என்பது மனிதனுக்கு எமன். அந்த பேராசைதான் வாழ்வின் அந்தம்வரை எமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று சும்மா சொல்லி வைக்கவில்லை. ஆசையின் விபரீதம் என்ற கதையாடலும் இதனைத்தான் உணர்த்திச்செல்கிறது. தன்னிடம் நகை இல்லை என்பதற்காக எதிர்வீட்டுப் பெண்ணிடம் நகையை வாங்கிப்போகிறாள் பவ்யாவின் தாய். நகை காணாமல் போகிறது. பக்கத்து வீட்டுக்காரி அதை இரண்டு பவுண் நகை என்கிறாள். வாங்கிய அவசரத்தில் தங்கமா, இமிட்டேஷனா என்று கூட பார்க்காததால் அநியாயமாக அகப்பட்டுக்கொண்ட பவ்யாவின் தாய் அமைதியை இழக்கிறாள். புன்னகை இருக்க பொன்னகை எதற்கு என்று அவளைப் பார்த்து மகள் பவ்யா கேட்கும் கேள்வி ஆடம்பர ஆசை கொண்ட அனைவருக்கும் பொதுவானது.&lt;br /&gt; &lt;br /&gt;புத்தகத்தின் தலைப்பான மிதுஹாவின் நந்தவனம் என்ற கதை ஆசிரியரின் சொந்தக்கதை என்பது புலப்படுகிறது. பிரபல சிறுகதை எழுத்தாளர்களான நிஸ்வான் ஆசிரியரின் வீட்டுக்கும், நயீமா டீச்சரின் வீட்டுக்கும் சென்றதாக இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. பூ மரங்களை நடுவதில் அதிக ஆர்வம்கொண்ட மிதுஹாவைப் பற்றியதுதான் இந்தக் கதை. எங்கு போனாலும் பூ மரங்களை ரசிக்கும் பழக்கமுடைய மிதுஹா பேருவலை ஜாமியா நளீமிய்யா வளாகத்தையும் விட்டுவைக்கவில்லை. அவரது இயற்கை ரசனைக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. மிதுஹாவுக்கு ஜோடியாக இருக்கிறார் பஸ்மியா. அவரும் மிதுஹாவைப் போன்று பூ மரங்களை வளர்ப்பதில் அதிக விருப்பம் கொண்டவர் என்பது புலனாகின்றது. &lt;br /&gt; &lt;br /&gt;அதுபோல மாகாத் பெரியப்பா என்ற ஒருவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.  மிதுஹாவின் பூமர ஆசை அறிந்த பெரியப்பா அவளுக்கு பூமரக் கன்றுகளைக் கொடுத்தாலும் வில்வம் கன்றை வாங்க மறுக்கிறாள் மிதுஹா. எப்படியோ பெரியப்பாவின் ஆசைக்காக வில்வம் கன்றை எடுத்துவந்து நாட்டுகின்றாள். கதாசிரியரான ஜெனீரா அவர்கள் இக்கதையின் இறுதியில் எம்மத்தியில் தெரிந்தோ தெரியாமலோ சோகத்தை இழையோட விடுகிறார். அந்த வரிகள் கீழுள்ளவாறு அமைந்திருக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;'இன்று மாகாத் பெரியப்பாவுமில்லை. அவர் தந்த பூமரங்களும் இல்லை. அவர் ஆசையோடு தந்த வில்வம் மட்டும் பூத்துக் காய்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அவற்றைக் காணும் போதெல்லாம் மிதுஹாவின் உள்ளத்தில் மாகாத் பெரியப்பாவின் நினைவுகள் அலைமோதிக்கொண்டிருக்கும்.'&lt;br /&gt; &lt;br /&gt;அன்புப் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கும் இவ்வாறான அறிவுரை சொல்லக்கூடிய புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள் என்று கூறுவதுடன், ஆசிரியத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் கதாசிரியரான ஜெனீரா அவர்கள் மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தக்கூடிய இவ்வாறான பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்!!!&lt;br /&gt; &lt;br /&gt;நூலின் பெயர் - மிதுஹாவின் நந்தவனம்&lt;br /&gt;நூலாசிரியர் - ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான்&lt;br /&gt;முகவரி - எகுத்தார் ஹாஜியார் வீதி, கிண்ணியா.&lt;br /&gt;தொலைபேசி - 026 2236487 &lt;br /&gt;வெளியீடு - அருள் வெளியீட்டகம்&lt;br /&gt;விலை - 150/=&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8824271729490094786-7897254313516326102?l=vimarsanamrizna.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vimarsanamrizna.blogspot.com/feeds/7897254313516326102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/7897254313516326102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8824271729490094786/posts/default/7897254313516326102'/><link rel='alternate' type='text/html' href='http://vimarsanamrizna.blogspot.com/2011/05/blog-post.html' title='மிதுஹாவின் நந்தவனம் -  சிறுவர் கதைகள்'/><author><name>தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா</name><uri>http://www.blogger.com/profile/17158692862423754023</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_BwlEHipGzQY/TPnYUFjZwRI/AAAAAAAAAEg/CAqs8ad-cEE/S220/Ri.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-5uabEQCtl-M/TdFVVHyU9ZI/AAAAAAAAAJE/Vm8AalmucTs/s72-c/Janeera.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8824271729490094786.post-3999412155538927937</id><published>2011-04-18T08:56:00.000-07:00</published><updated>2011-04-18T08:59:57.494-07:00</updated><title type='text'>'முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்' தொகுதி</title><content type='html'>&lt;strong&gt;'முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்' தொகுதி பற்றிய எனது பார்வை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. தம்பு சிவா என்று அழைக்கப்படும் த. சிவா சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகமே முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதி. இதில் இலங்கை இந்திய முற்போக்கு எழுத்தாளர்களின் விபரங்கள் விலாவாரியாக தரப்பட்டிருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும். இந்தியாவின் நியூசெஞ்சுரி புத்தக வெளியீட்டகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 86 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. இன்றைய இளைய சமுதாயத்தினர் மூத்த இலக்கியவாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வாறு அறிந்துகொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் அவ்வளவாக இல்லை. அத்தகைய பெரும் குறையை நீக்குவதற்காகவும், முற்போக்குவாதிகளை அறிந்துகொள்வதற்காகவும் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதியில் இலங்கை, இந்திய முற்போக்கு எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் இரண்டு பாகங்களாகப் பிரித்து இடம்பெற்றிருக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;பாகம் ஒன்றில் சரத்சந்திரர், தகழி சிவசங்கரப்பிள்ளை, கிஷன் சந்தர், மக்தூம், வல்லிக்கண்ணன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பற்றியும், பகுதி இரண்டில் அமரர் கைலாசபதி, கவிஞர் பசுபதி, செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், முஹம்மது சமீம், சுபத்திரன் ஆகியோர் பற்றியும் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகத்தின் அட்டையை செ. கணேசலிங்கன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நீர்வை பொன்னையன் ஆகியோர் அலங்கரிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-GdhuV64u-V0/TaxfqvJUIYI/AAAAAAAAAI8/pv0nMyHV4qU/s1600/T.siva.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 206px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-GdhuV64u-V0/TaxfqvJUIYI/AAAAAAAAAI8/pv0nMyHV4qU/s320/T.siva.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5596953624729362818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;பேராசிரியர் க. கைலாசபதிக்கு சமர்ப்பணமாக்கப்பட்டுள்ள இந்தத்தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் பேராசிரியர் சபா. ஜெயராசா இவ்வாறு குறிப்பிடுகின்றார். இலங்கையினதும், இந்தியாவினதும் குறிப்பிட்ட காலகட்டத்தின் முற்போக்குச் சிந்தனை வடிவங்களின் 'குறுக்குவெட்டுமுகம்' இந்நூலாக்கத்தின் தொகுப்பாகின்றது. தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் எழுத்தாக்கங்களும் ஆளுமை வெளிப்பாடுகளும், முற்போக்கு சிந்தனைகளின் பன்மை நிலைகளைப் புலப்படுத்துகின்றன. முற்போக்காளர் ஒரே அச்சில் வார்த்த வெளிப்பாடுகளைக் கொண்டவர்கள் என்ற புலக்காட்சியும் இங்கே தகர்ப்புக்கு உள்ளாகின்றது. இது இந்நூலாக்கத்தின் ஒரு பரிமாணம். இதன் வேறொரு பரிமாணம் ஆளுமையின் பன்முகத் தன்மைகள் ஊடே கருத்தியலுக்குத் திரும்புதலாக அமைகின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் தனது முன்னுரையில் கா. சிவத்தம்பி அவர்களின் கூற்றாக இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். 'முற்போக்கு எனும் சொற்றொடர் சமூக நிலைப்பட்ட ஒரு கருதுகோலாகும். அச்சொற்றொடர் மனிதன் சமூகம் தொடர்பாக கொண்டுள்ள அக்கறையை, மதிப்பீடுகளை, விபரிப்பதாகும். சமூகத்தின் படிநிலை வளர்ச்சிபற்றிய கண்ணோட்டமும் இதனுள் அடங்கும். பெரும்பாலும் மார்க்ஸியம் என்ற தத்துவத்தை வரித்துக்கொண்டவர்களது அரசியல், சமூக, இலக்கிய நடவடிக்கைகள் இந்த முற்போக்குத் தன்மை கொண்டிருப்பதை அறியலாம். முற்போக்குவாதம் மார்க்ஸியம் கூறும் சமூக வளர்ச்சி விதிகளை கற்றுக்கொள்கிறது'.&lt;br /&gt; &lt;br /&gt;வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் தொடர்ந்து தனது உரையில் திரு. தம்புசிவா அவர்களைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். 'நூலாசிரியர் தம்பு சிவசுப்பிரமணியத்தை கடந்த பல தசாப்தங்களாக அறிவேன். 1970 களில் கற்பகம் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் இலக்கிய உலகில் தடம்பதித்து இன்று வரை எழுதிக்கொண்டிருப்பவர். இளமைக்காலம் தொட்டு இன்றுவரை மார்க்ஸிய அனுதாபியாக இருந்து வருபவர். புனைவு, பத்தி, விமர்சனம், சஞ்சிகை ஆசிரியர் என பல்வேறு தளங்களில் முகம்கொண்டவர். பண்பாளர். அவர் அவ்வப்போது பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் எழுதிய கட்டுரைகள் இப்பொழுது நூலாக்கம் பெற்றுள்ளன. இலகுவான நடையில் பொது வாசகர்களும், மாணவர்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் தொகுப்பு வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும், முற்போக்கு இலக்கியக் காரர்களை அறிந்துகொள்வதற்கும், அவர்களது ஆக்கங்களை தேடிப் பார்ப்பதற்குமான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை'.&lt;br /&gt; &lt;br /&gt;வங்கப்பெண்களின் விடுதலைக்கும், எழுச்சிக்கும் தன் பேனா மூலம் குரல்கொடுத்த விடுதலை வீரரான சரத் சந்திரர் அவர்கள் வங்காளத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் தேவானந்தபுரம் எனும் சிற்றூரில் 1876 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி பிறந்தவர். இவர் ஆட்டத்திலும், இசையிலும் அதிக ஈடுபாடுகாட்டி வந்தவர். குழந்தை என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி வந்த சரத்சந்திரர், ஆங்கில நாவல்களையும், அறிவியல் நூல்களையும் அதிகமாக வாசிப்பதில் ஆர்வமிக்கவர். பிறர் துன்பத்தைக் காணச் சகிக்காத இவர், அக்கம்பக்கத்தாரின் காரியங்களில் பெரிதும் துணை புரிந்து வந்தார். &lt;br /&gt; &lt;br /&gt;பழைமை சிறப்புடையதானாலும், அதை பழைமையாகவே எண்ண வேண்டும். அதில் மயங்கிவிடாமல் எதிர்காலத்தில் நாட்டம் செலுத்துவதே இளமையின் இலக்கணம். என்று தெளிவுபடுத்தியவர் சரத்சந்திரர். மேலும் ஏராளமான அரசியல் கட்டுரைகளையும், காந்தியம், இந்து முஸ்லிம் பிரச்சனை, சுதந்திரப் போரில் பெண்களின் பங்கு, இளைஞர் எழுச்சி போன்ற தலைப்புக்களில் கட்டுரைகளை வரைந்தார். இதனால் அவர் புகழ் வளர்ந்தது. ஆனால் பத்தாம்பசலி பழைமைவாதிகள் அவர் மதத்தை அழிப்பதாக ஓலமிட்டனர். &lt;br /&gt; &lt;br /&gt;சரத் சந்திரரின் இலக்கியம் உயிர்துடிப்புடன் அமைந்திருப்பதற்குக் காரணம், அவர் தனது சொந்த அனுபவங்களையும், நண்பர்களின் வாழ்க்கை அம்சங்களையும் தனது இலக்கியத்தின் மூலம் தந்ததால்தான். அவரது இலக்கியத்தில் வரும் பாத்திரங்களும் கதைப் பொருளும் கற்பனையானவையல்ல. அவை அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவை. பழக்கப்பட்டவை. அதனால்தான் சரத்சந்திரரின் பாத்திரங்கள் நரம்பு, சதையுடன் கூடிய உண்மை மனிதர்களாக நமக்குக் காணப்படுகிறார்கள். சரத் சந்திரர் பற்றி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இப்படி கூறியிருக்கிறார். 'அவர் இலட்சிய எழுத்தாளர் மட்டுமல்ல. இலட்சிய தேசபக்தரும் கூட. அது மட்டுமல்ல. அவர் இலட்சிய மனிதராவார். இத்தனை சிறப்புக்களையும் ஒரே ஆளிடம் காண்பது அரிது'&lt;br /&gt; &lt;br /&gt;தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்கள் தகழி என்ற கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் படைப்புளில் அவர் அளித்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்தது. தகழியின் சிறுகதைத் தொகுதி 1934 இல் வெளிவந்தது. இவர் சிறந்த நாவல் ஆசிரியர். சமுதாயத்தில் தான் கண்ட அவலங்களை, போராட்டங்களை தனது நாவல்கள், சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். 1956 இல் வெளிவந்த இவரது செம்மீன் என்ற நாவல் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்திய அக்கடமிப் பரிசைப் பெற்றது. நில அமைப்பு சார்ந்த இலக்கியப் படைப்புக்கள் என்ற வகையில் கடற்கரை வாழ் மக்களின் வாழ்க்கையை செம்மீன் நாவலில் தந்திருப்பதால் அவரை 'குடா நாட்டின் வரலாற்று நாயக்' என்று சிறப்பிக்கின்றனர். &lt;br /&gt; &lt;br /&gt;இந்த நாவல் இருபது நாட்களுக்குள் எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது யுனெஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மக்களின் ஏற்றத்தாழ்வுகளில் இருக்கக்கூடிய அடக்குமுறைகளைத் தகர்த்தெறிய பல வழிகளிலும் போராட வேண்டிய நிலைப்பாட்டை மனதில் நிறுத்தி கேரள இலக்கிய வளர்ச்சிக்கும், உலக இலக்கிய முன்னேற்றத்துக்கும் தன் எழுத்தால் முத்திரை பதித்த ஒரு மக்கள் எழுத்தாளரான இவர், தனது 85 ஆவது வயதில் உயிர்நீத்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்திய வாழ்க்கையின் அழகையும் அவலங்களையும் சித்தரித்த புனையியல்வாதியாக கிஷண்சந்தர் போற்றப்படுகின்றார். இவர் தனது இளமைப்பருவம் முதல் துடிப்புள்ள கொள்கைப்பற்றுறுதி கொண்ட செயல்வீரனாக இருந்தார். கே.ஏ. அப்பாஸ் என்பவர் கிஷண்சந்தரைப் பற்றி குறிப்பிடுகையில் 'கிஷண்சந்தர் படைப்பாளுமை மிக்கவர். உருதுமொழியில் அவருடைய நயமான எழுத்தாற்றலை, ஆற்றொழுக்கமான உரைநடையை எழுதிக் குவிக்கும் திறமையைக்கண்டு ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் ரகசியமாகப் பொறாமைப்பட்டேன்' என்கிறார். &lt;br /&gt; &lt;br /&gt;அவர் தனது தந்தையுடன் காஷ்மீரில் வாழ்ந்த காலத்தில் காஷ்மீர் வாழ் விவசாயிகளின் கூலிகளின் பரிதாபத்துக்குரிய ஏழ்மையைக் கண்டு வருந்தினார். இயற்கைக்கும், மனிதனுக்குமிடையே இருந்த வேறுபாடு அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதன் காரணமாக அவர் மனதில் பரிவு உணர்ச்சி ஏற்பட்டு அது ஆழப் பதிந்துவிட்டது. அத்துடன் கிஷண்சந்தர் காதல்வயப்பட்டு குறுகிய காலத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டபோதிலும் அவருக்கு ஏற்பட்ட ஆழமான காதல் உணர்ச்சி ஒரு மென்மையான நினைவை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதற்கிணங்க அவரது பல படைப்புகள் அமைந்துள்ளன. &lt;br /&gt; &lt;br /&gt;ஆந்திர மாநிலத்தில் 1908 இல் பிறந்தவர் கவிஞர் மக்தூம். மாமா பஷீருத்தீன் அவர்களிடம் வளர்ந்த இவர், தினமும் மசூதியை சுத்தம் செய்தலையும், தொழுகைக்கு வருவோரின் பாவனைக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பதையும் தனது அன்றாடப் பணியாகக்கொண்டிருந்தார். 1933 க்குப் பின் தன்னுணர்ச்சிக் கவிதைகளைப் படைத்த மக்தூம் தொன்மை இலக்கியங்களையும் ஆர்வத்துடன் கற்றார். 1939ல் இரண்டாம் உலகப்போரை கண்டனம் செய்து பாடல்கள் எழுதினார். முதலாளித்துவத்தை தீவிரமாக எதிர்த்து வந்த இவர், நாடகங்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் நகைச்சுவை உணர்வுமிக்கவரும் கூட. அவர் 1969 இல் இறையடி சேர்ந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;திருநெல்வேலி ராஜவல்லிபுரம் எனும் கிராமத்தில் 1920 இல் பிறந்த வல்லிக்கண்ணன் அவர்கள் சென்ற தலைமுறை எழுத்தாளருக்கும், இந்தத்தலைமுறை எழுத்தாளருக்கும் பாலமாக விளங்கியவர். பெயர், புகழ், பட்டங்களை விரும்பாத உண்மைப் படைப்பாளியான இவர், தனது 16 ஆவது வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகையை நடாத்திய பெருமைக்குரியவர். 30 வயதுக்குள் 25 நூல்கள் வரை வெளியிட்டவர். கவிதை, சிறுகதை, நாவல் என்று தொடர்ந்த இவரது எழுத்துலக வாழ்வு திறனாய்வு, சஞ்சிகை, புதுக்கவிதை, வரலாறு என்று தொடர்ந்தது. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞராகவும், முன்னுரை எழுதும் முன்னுர
